Search This Blog

Sunday, February 7, 2016

முதல் திரைப்படம் 

இன்றைக்கு திரைப்படங்கள் கோடியில் புரளும் ஒரு தொழிலாக மாறிவிட்டது. இதன் ஆரம்பக்காலம் மிக விசித்திரமானது. லூமியர் சகோதரர்கள் சினிமாவை கண்டுபிடித்த பின் அதனை உலகின் பல பாகங்களுக்கும் கொண்டு சென்றனர். அப்படி 1897-ல் எம்.எட்வர்ட்ஸ் என்ற ஆங்கிலேயர் சென்னை பாரிமுனையில் இரண்டு படங்களை திரையிட்டார். இந்த இரண்டு படங்களும் ஒரு சில நிமிடங்கள்தான் ஓடும்.

‘தி அரைவல் ஆப் தி ட்ரைன்‘, ‘லீவிங் தி பேக்டரி‘ என்ற இந்த இரண்டு படங்கள்தான் முதன் முதலாக அசையும் படமாக எடுக்கப்பட்டன. அவை விக்டோரியா பப்ளிக் ஹாலில் திரையிடப்பட்டது. இன்றைக்கும் இந்த இடம் சென்னை ரிப்பன் பில்டிங் அருகில் உள்ளது. மக்கள் இந்தப் படங்களை கூட்டம் கூட்டமாக வந்து பார்த்தனர். <p></p>அப்போது பல இடங்களில் பயாஸ்கோப் என்ற பெயரில் கையில் எடுத்துச் செல்லும் கருவி மூலம் சினிமா காட்டும் முறையும் பிரபலமானது. இதற்கு மின்சாரம் தேவையில்லை. லைசென்ஸ் தேவையில்லை. மக்னீசியத்தை வைத்து படம் காட்டினார்கள்.

ஒரு நிமிட படம், அதுவும் நடக்கும் நிகழ்வுகளை அப்படியே படம் பிடித்துக் காட்டியது.  இதன் அடுத்த பரிணாமமாக நடிகர்களை வைத்து படங்களை எடுக்கத் தொடங்கினார்கள். அப்படி உலகின் முதன் முதலாக நடிகர்களை வைத்து உருவாக்கிய திரைப்படம் தான் ‘வாட்டரிங் தி கார்டனர்‘.

இந்த படத்தின் கதை இன்றைக்கும் கூட அதிகமான படங்களில் தொடர்ந்து பயன்படுத்தப்படுகிறது. வயதான தோட்டக்காரர் ஒருவர் தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்சிக்கொண்டிருப்பார், அங்கே அவருக்கு தெரியாமல் நுழையும் ஒரு குறும்புக்கார சிறுவன் தண்ணீர் பாய்ச்சும் குழாயை மிதிக்கவும், தண்ணீர் நின்றுவிடும். தண்ணீர் வரவில்லை என அந்த தோட்டக்காரர், குழாயை தனது முகம் அருகே வைத்துப் பார்க்கும் போது, சிறுவன் குழாய் மீதிருந்து காலை எடுத்து விடுவான். அப்போது தண்ணீர் ‘குபுக்‘ கென தோட்டக்காரர் முகத்தில் அடிக்கும். இதில் கோபமடையும் அவர் அந்த  சிறுவனை அடிக்க துரத்திக்கொண்டு ஓடுவார். இது தான் முதல் நகைச்சுவைப் படமாக கூறப்படுகிறது. அது மட்டுமின்றி முதல் முதலாக ரசிப்புத் தன்மையுடன் ‘வாட்டரிங் தி கார்டனர்‘ என்றும் தலைப்பிடப்பட்டது.

No comments:

Post a Comment