அதிக விலை சினிமா டிக்கெட்டுகள்
உலகிலேயே
மிகக் குறைவான சினிமா கட்டணம் கொண்ட நாடு என்ற பெருமை இந்தியாவுக்கு
இருந்தது. ஆனால் இன்று நிலைமை அப்படியல்ல. பெரிய பட்ஜெட் படங்கள், உடனடியாக
மக்களிடம் இருந்து வசூல் செய்து விட வேண்டும் என்ற நெருக்கடியால்
கட்டணத்தை உயர்த்தி விடுகின்றனர். மனித உழைப்புக்கு கொடுக்கப்படும்
சம்பளத்தை அடிப்படையாகக் கொண்டு சினிமா கட்டணத்தின் அளவீடுகள்
நிர்ணயிக்கப்படுகின்றன.அதன்படி 10 வருடங்களுக்கு முன்பு இந்தியாவில்
ஒருவர் சினிமா பார்ப்பதற்கு வெறும் 16 நிமிடம் உழைத்தால் போதும். வேறு
எந்த நாட்டிலும் இவ்வளவு குறைந்த உழைப்பில் ஒரு சினிமாவைப் பார்த்து விட
முடியாது. அதனால் அன்றைய உழைப்பாளர் வர்க்கத்தை சினிமா கட்டணம் பெரிதாக
பாதிக்கவில்லை. அப்போது சராசரியாக சினிமா டிக்கெட் விலை ரூ.8 ஆக இருந்தது.
இதேபோல் அமெரிக்காவில் ஒரு சினிமா பார்க்க அமெரிக்கர் 24 நிமிடம் உழைத்தால்
போதும் என்று இருந்தது. இன்று நிலைமையே தலைகீழ். இன்றைக்கு சினிமா
டிக்கெட்டின் விலை ரூ.100-ல் தொடங்கி ரூ.350 வரை ஆகிறது. ஒருமுறை
குடும்பத்துடன் சினிமா தியேட்டருக்கு போய்வர சராசரி இந்தியன் தனது மாத
வருமானத்தில் 27 சதவீதம் வரை செலவழிக்கிறார்.இந்தியர்களின் சராசரி
மாத வருமானம் ரூ.3,700 மட்டுமே. லட்சங்கள் இல்லை. லட்சங்களில்
சம்பாதிப்பவர்களின் எண்ணிக்கை 3 சதவீதம் மட்டும்தான். மற்றவர்கள் குறைவான
சம்பளமே பெறுகிறார்கள். அமெரிக்காவில் எப்படி என்றால், அங்கு சராசரி
மாத வருமானம் 3,400 டாலர்கள். சினிமா டிக்கெட்டின் விலை 9 டாலர் முதல் 10
டாலர் வரை தான். ஒருசில தியேட்டர்களில் மட்டுமே அதிகபட்சமாக 25 டாலர் வரை
சினிமா கட்டணம் உள்ளது. இதனால் ஒரு அமெரிக்கர் ஒருமுறை சினிமா பார்க்க தனது
மாத வருமானத்தில் 0.30 சதவீதம் மட்டுமே செலவழிக்கிறார். இங்கிலாந்திலும்,
அதேநிலை தான் உள்ளது. அங்கு ஒரு பிரிட்டிஷ் காரர் சம்பளமாக 3 ஆயிரம் டாலர்
பெறுகிறார். அங்கு சினிமா டிக்கெட்டின் விலை 9 டாலரில் இருந்து 28 டாலர்
வரை உள்ளது. சரி, சினிமா தியேட்டருக்கு சென்று படம் பார்க்க
வேண்டாம். கேபிள் டிவி.யில் பார்த்துக் கொள்ளலாம் என்று நினைத்தாலும்,
இந்தியாவின் நிலை மகிழ்ச்சி அளிக்கும் வகையில் இல்லை. இந்தியாவில் கேபிள்
டிவி., டிடிஎச் இணைப்புகளின் மாத சந்தா ரூ.150-ல் இருந்து 350 ஆக
இருக்கிறது. இது இந்தியாவின் சராசரி மாத வருமானத்தில் 10 சதவீதமாகும்.
அமெரிக்காவில் டிடிஎச்-சின் மாத சந்தா 50 டாலரில் இருந்து 100 டாலராக
இருக்கிறது. ஒரு அமெரிக்கர் டிடிஎச் சந்தாவாக மாதம் 3 சதவீதம் மட்டுமே
செலுத்துகிறார். இங்கிலாந்திலும் டிடிஎச். சந்தா 75 டாலர் முதல் 125 டாலர்
வரை உள்ளது. இதுவும் 5 சதவீதத்திற்கும் குறைவான தொகையே.ஆக மொத்தம்
இந்தியாவில் தான் தற்போது உலக அளவில் சினிமா, கேபிள் டிவி., டிடிஎச். போன்ற
பொழுதுபோக்கு சமாச்சாரங்களுக்கு அதிக தொகை செலவழிக்கிறார்கள். நம்மை விட
வளர்ந்த நாடுகள்கூட பொழுதுபோக்குக்காக செலவிடும் தொகை குறைவு தான்.
Search This Blog
Tuesday, December 9, 2014
Wednesday, September 24, 2014
கொலம்பஸ் தமிழ்ச் சங்கம் இலையுதிர்கால இன்னிசை இரவு விழா
கொலம்பஸ் தமிழ்ச் சங்கம் இலையுதிர்கால இன்னிசை இரவு விழா
வணக்கம். 20.09.2014 அன்று அமெரிக்கா ஓஹியோ மாநிலம் கொலம்பஸ் தமிழ்ச் சங்கம் ஏற்பாடு செய்திருந்த இலையுதிர்கால இன்னிசை இரவு விழாவில்
கலந்து கொண்டேன்.அந்த மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளவே இந்தக் கடிதம். இந்த
நாளை நான் மறக்கவே முடியாது. ஏனென்றால் இந்த நாள் புரட்டாசி சனிக்கிழமை என
தமிழ்நாட்டில் சிறப்பாகக் கொண்டாடப்படும் நாள். மேலும் அன்று (20-09-2014)
காலையில்தான் சென்னையில் இருக்கும் எனது மகன்-மருமகள் (சங்கர்-அனிதா
தம்பதியினர்) எல்லாம் வல்ல இறைவன் அருளால் ஒரு ஆண் குழந்தையைப் பெற்றனர்.
எனவே, எனக்கு பேரன் பிறந்த நாளில் கலந்து கொண்ட இனிமையான நிகழ்ச்சி என்ற
விதத்தில் இந்த நிகழ்ச்சியை என் வாழ்நாளில் மறக்கவே முடியாது. எனது மருமகன்
திரு.ஜெயந்த் மற்றும் அவரது பெற்றோருடன் இந்த நிகழ்ச்சியில் பெற்ற எனது
அனுபவங்களை உங்களோடு கலந்து கொள்கிறேன்.
வரவேற்பு
இடத்தில் துவங்கிய மகிழ்ச்சி முழுமையாக இருந்தது. தமிழ்நாட்டு கிராமங்களில்
சிறுவர்கள் கைகளில் கட்டும் சவ்வு மிட்டாய் போல ஒரு அடையாள காகிதத்தை
சுற்றிக் கொண்டது வித்தியாச அனுபவம்.Eureka SuperKidz என்னும் தன்னார்வத்
தொண்டு நிறுவனத்தாரும் வரவேற்று தங்கள் அன்பை வெளிப்படுத்தினர். அரங்கினுள்
செல்லும்போதே வரவேற்புரை தொடங்கிவிட்டது. தொடர்ந்து முழுமையான ஆங்கிலத்தில்
பெண்மணி ஒருவர் Eureka SuperKidz பற்றியும் தமிழ்ச்சங்க செயல்பாடு
பற்றியும் விவரித்தார். அதே போல பாடல் நிகழ்ச்சியின் இடையிலும் அனுஷ்யா
என்னும் பெண் தமிழிலும், இன்னொருவர் அமெரிக்க ஆங்கிலத்திலும்
மதுரை அருகில் உள்ள நாகமலை புதுக்கோட்டையில் நடந்த சில கல்வி கற்பித்த
சூழ்நிலைகளை பகிர்ந்து கொண்டனர். சரி... சரி... அமெரிக்க தமிழ்ச்சங்கம்
என்பதால் இப்படி ஆங்கில உரையும் இருக்கிறது போலும் என்று மனதில் எண்ணிக்
கொண்டேன்.
பின்னர் ஆவலோடு எதிர்பார்த்த இன்னிசை நிகழ்வு தொடங்கியது. ஜனனி ஜனனி எனத் துவங்கி செந்தமிழ்க்கருள் ஞான தேசிகனை என நுழைந்து அம்மா என்றழைக்காத உயிரில்லையே என உணர்ச்சிப் பிழம்பாக பாடல் துவங்கியது. GV சைந்தவி, சத்யபிரகாஷ், ரவிசங்கர், ஆகியோருடன் இசைக்கலைஞர்கள் பங்கேற்க நல்ல தமிழில் பெண்மணி ஒருவர் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார். தொடர்ந்து தெய்வமகள் திரைப்பட பாடலை சைந்தவி பாட விழா களைகட்டியது.(3) பளிங்கினால் ஒரு மாளிகை (கறுப்புப்பணம்).., (4) ஒரு இனிய மனது இசையை அனைத்துச் செல்லும்(ஜானி).., (5) ஓம் சிவோஹம் (நான் கடவுள்).., (6) ஐயையோ ஆனந்தமே (கும்கி)..., (7) வீட்டுக்கு வீட்டுக்கு வாசப்படி வேணும்(கிழக்கு வாசல்)..., (8) என் வானிலே ஒரே வெண்ணிலா (ஜானி).., (9) மச்சானைப் பார்த்தீங்களா (அன்னக்கிளி).., (10) வராக நதிக்கரை ஓரம் (சங்கமம்)..., (11) பூமாலையே தோள் சேரவா (பகல்நிலவு).., (12) மலர்களே.. மலர்களே.. இது என்ன கனவா (லவ் பேர்ட்ஸ்).., (13) நிலா அது வானத்து மேலே (நாயகன்).., (14) பொன் ஒன்று கண்டேன் (படித்தால் மட்டும் போதுமா).., (15) இன்னும் கொஞ்ச நேரம் இருந்தாத்தான் என்ன. (மரியான்) (16) பூக்கள் பூக்கும் தருணம் (மதராசப் பட்டிணம்).., என பாடல்கள் ரசிகர்களை மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தியது. உதித் நாராயணன் பாடியிருந்தால் கர்ணன் திரைப்பட பாடல் "உள்ளத்தில் நல்ல உள்ளம்.. " எப்படியிருக்கும் என்பதையும் பாடிக் காட்டி நகைச்சுவை செய்தனர் மேடைப் பாடகர்கள். தொடர்ந்து சிற்றுண்டி இடைவேளை வந்தது. அதன் பின்னர் இங்கு கொலம்பஸில் இருக்கும் எனது நண்பர்களின் வீட்டுக்கு இரவு 7.30க்கு செல்ல ஏற்கனவே ஒத்துக் கொண்டிருந்தேன். எனவே நாங்கள் கிளம்பும் நிலையாகிவிட்டது.
சமீபத்தில் ஒருநாள் தமிழ்நாட்டு டி.வி. செய்தியில் பார்த்தேன். காய்கறி விலையேற்றம் குறித்து ஒரு பெண்ணிடம் பேட்டி எடுக்கிறார் நிருபர். அந்தப் பெண் ," வெஜிடபுல்ஸ் ரேட் எல்லாம் ரொம்ப ஹை ஆயிட்டே போகுது. பேமிலிய ரன் பண்றது ரொம்ப டிபிகல்ட் ஆக இருக்கு " என்று பேசுகிறாள். எந்த விலங்கும் கூட இன்னொரு விலங்கின் மொழியில் பேச முயற்சி செய்வதில்லை - பேசுவதை பெருமையாகக் கருதுவதும் இல்லை. " காய்கறி விலையெல்லாம் கூடிகிட்டே போகுது. குடும்பம் நடத்த சிரமமாக இருக்கு " என எளிய தமிழில் பேச முடியவில்லையா..? அல்லது பேச விருப்பம் இல்லையா..? என்பதே பெரியதொரு கேள்வி. அட அப்படியாவது நல்ல ஆங்கிலத்திலாவது பேசத் தெரியுமா என்றால் அந்த மொழிவளமும் கிடையாது., தெரியாது என்பது ஒரு கசப்பான உண்மை. செம்மொழி என்னும் பெருமை உடையது நமது மொழி. வரிவடிவம் இல்லாத பல மொழிகள் உலகில் உள்ளன. இந்தியாவில் சொல்லப் போனால் நரிக்குறவர்கள் பேசும் வக்போலி மொழியும், சௌராஷ்டிர மக்கள் பேசும் சௌராஷ்டிர மொழியும் பல லட்சம் மக்கள் பேசுவதை நாம் அறிவோம். அந்த மொழி பேசும் மக்கள் இன்றளவும் அவர்களது குழந்தைகளுக்கு அவரவர் மொழியை தாய்மொழியாக கற்பித்தும் பேசியும் வருகின்றனர். ஆனால் நமது தமிழர்களில் பலர் தங்கள் குழந்தைகளுக்கு தமிழ் கற்றுக் கொடுப்பதிலும், தமிழில் பேசுவதிலும் விருப்பம் இல்லாமல் இருக்கிறார்கள். விழா மேடையில் தமிழில் பேசத் தெரியாமல் நின்ற சிறுவனைக் கண்டதும் எனக்கு இவ்வாறு தோன்றியது. தமிழில் பேசத் தெரியவில்லை என்றால் வீட்டில் தமிழ் இல்லை என்பதுதானே அர்த்தம்..? அதனால் நண்பர்களே நாமாவது சேர்ந்து நல்ல தமிழை பேச-கற்பிக்க முயற்சி செய்வோம். வேறு எந்த மொழியாக இருந்தாலும் அதையும் நல்லமுறையில் பேச பயிற்சி எடுப்போம்.
பின்னர் ஆவலோடு எதிர்பார்த்த இன்னிசை நிகழ்வு தொடங்கியது. ஜனனி ஜனனி எனத் துவங்கி செந்தமிழ்க்கருள் ஞான தேசிகனை என நுழைந்து அம்மா என்றழைக்காத உயிரில்லையே என உணர்ச்சிப் பிழம்பாக பாடல் துவங்கியது. GV சைந்தவி, சத்யபிரகாஷ், ரவிசங்கர், ஆகியோருடன் இசைக்கலைஞர்கள் பங்கேற்க நல்ல தமிழில் பெண்மணி ஒருவர் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார். தொடர்ந்து தெய்வமகள் திரைப்பட பாடலை சைந்தவி பாட விழா களைகட்டியது.(3) பளிங்கினால் ஒரு மாளிகை (கறுப்புப்பணம்).., (4) ஒரு இனிய மனது இசையை அனைத்துச் செல்லும்(ஜானி).., (5) ஓம் சிவோஹம் (நான் கடவுள்).., (6) ஐயையோ ஆனந்தமே (கும்கி)..., (7) வீட்டுக்கு வீட்டுக்கு வாசப்படி வேணும்(கிழக்கு வாசல்)..., (8) என் வானிலே ஒரே வெண்ணிலா (ஜானி).., (9) மச்சானைப் பார்த்தீங்களா (அன்னக்கிளி).., (10) வராக நதிக்கரை ஓரம் (சங்கமம்)..., (11) பூமாலையே தோள் சேரவா (பகல்நிலவு).., (12) மலர்களே.. மலர்களே.. இது என்ன கனவா (லவ் பேர்ட்ஸ்).., (13) நிலா அது வானத்து மேலே (நாயகன்).., (14) பொன் ஒன்று கண்டேன் (படித்தால் மட்டும் போதுமா).., (15) இன்னும் கொஞ்ச நேரம் இருந்தாத்தான் என்ன. (மரியான்) (16) பூக்கள் பூக்கும் தருணம் (மதராசப் பட்டிணம்).., என பாடல்கள் ரசிகர்களை மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தியது. உதித் நாராயணன் பாடியிருந்தால் கர்ணன் திரைப்பட பாடல் "உள்ளத்தில் நல்ல உள்ளம்.. " எப்படியிருக்கும் என்பதையும் பாடிக் காட்டி நகைச்சுவை செய்தனர் மேடைப் பாடகர்கள். தொடர்ந்து சிற்றுண்டி இடைவேளை வந்தது. அதன் பின்னர் இங்கு கொலம்பஸில் இருக்கும் எனது நண்பர்களின் வீட்டுக்கு இரவு 7.30க்கு செல்ல ஏற்கனவே ஒத்துக் கொண்டிருந்தேன். எனவே நாங்கள் கிளம்பும் நிலையாகிவிட்டது.
சமீபத்தில் ஒருநாள் தமிழ்நாட்டு டி.வி. செய்தியில் பார்த்தேன். காய்கறி விலையேற்றம் குறித்து ஒரு பெண்ணிடம் பேட்டி எடுக்கிறார் நிருபர். அந்தப் பெண் ," வெஜிடபுல்ஸ் ரேட் எல்லாம் ரொம்ப ஹை ஆயிட்டே போகுது. பேமிலிய ரன் பண்றது ரொம்ப டிபிகல்ட் ஆக இருக்கு " என்று பேசுகிறாள். எந்த விலங்கும் கூட இன்னொரு விலங்கின் மொழியில் பேச முயற்சி செய்வதில்லை - பேசுவதை பெருமையாகக் கருதுவதும் இல்லை. " காய்கறி விலையெல்லாம் கூடிகிட்டே போகுது. குடும்பம் நடத்த சிரமமாக இருக்கு " என எளிய தமிழில் பேச முடியவில்லையா..? அல்லது பேச விருப்பம் இல்லையா..? என்பதே பெரியதொரு கேள்வி. அட அப்படியாவது நல்ல ஆங்கிலத்திலாவது பேசத் தெரியுமா என்றால் அந்த மொழிவளமும் கிடையாது., தெரியாது என்பது ஒரு கசப்பான உண்மை. செம்மொழி என்னும் பெருமை உடையது நமது மொழி. வரிவடிவம் இல்லாத பல மொழிகள் உலகில் உள்ளன. இந்தியாவில் சொல்லப் போனால் நரிக்குறவர்கள் பேசும் வக்போலி மொழியும், சௌராஷ்டிர மக்கள் பேசும் சௌராஷ்டிர மொழியும் பல லட்சம் மக்கள் பேசுவதை நாம் அறிவோம். அந்த மொழி பேசும் மக்கள் இன்றளவும் அவர்களது குழந்தைகளுக்கு அவரவர் மொழியை தாய்மொழியாக கற்பித்தும் பேசியும் வருகின்றனர். ஆனால் நமது தமிழர்களில் பலர் தங்கள் குழந்தைகளுக்கு தமிழ் கற்றுக் கொடுப்பதிலும், தமிழில் பேசுவதிலும் விருப்பம் இல்லாமல் இருக்கிறார்கள். விழா மேடையில் தமிழில் பேசத் தெரியாமல் நின்ற சிறுவனைக் கண்டதும் எனக்கு இவ்வாறு தோன்றியது. தமிழில் பேசத் தெரியவில்லை என்றால் வீட்டில் தமிழ் இல்லை என்பதுதானே அர்த்தம்..? அதனால் நண்பர்களே நாமாவது சேர்ந்து நல்ல தமிழை பேச-கற்பிக்க முயற்சி செய்வோம். வேறு எந்த மொழியாக இருந்தாலும் அதையும் நல்லமுறையில் பேச பயிற்சி எடுப்போம்.
விழாவில் தமிழ்ச்சங்கம் சார்பில் ஒரு கையேடு அளிக்கப்பட்டது.அதில் "மனித மாண்பு" என்ற தலைப்பிலும், "சான்றான்மையும் வள்ளுவரும்" என்ற தலைப்பிலும் திரு அழகப்பன் கனகசபாபதி
அவர்கள் தந்திருந்த தொகுப்பினைப் படித்து மகிழ்ந்தேன். அந்தக் கையேட்டில் தமிழ்நாடு மதுரையில் 1899ஆம் ஆண்டு திரு.பாண்டித்துரை தேவரால் துவங்கப்பட்ட முதலாம் தமிழ்ச் சங்கம் பற்றிய குறிப்புக்களையும் அறிந்து கொள்ள முடிந்தது. மேலும் மதுரை தமிழ்ச் சங்கத்தில் நிறைவேற்றப்பட்ட 15 நோக்கங்களையும் அறிந்து கொள்ளவும் முடிந்தது. கொலம்பஸ்
தமிழ்ச்சங்கம் - தமிழ்ப்பள்ளி பற்றியும் தெரிந்து கொள்ள முடிந்தது.
விழாவில் Eureka Foundation க்கு 10.000 டாலர்கள் நன்கொடை வழங்கியதையும்
கண்டேன். உள்ளபடியே மெய் சிலிர்த்துப் போனேன். நமது இந்திய மதிப்பில்
சுமார் 6 லட்ச ரூபாய்களை நன்கொடை வழங்கிய கொலம்பஸ் தமிழ்ச் சங்க
நிர்வாகிகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்களும் நன்றியும்
சொல்கிறேன்.
தமிழ் வாழ்க.. தமிழர் ஒற்றுமை உணர்வு ஓங்குக.
தமிழ் வாழ்க.. தமிழர் ஒற்றுமை உணர்வு ஓங்குக.
Tuesday, April 1, 2014
பாரதியார் நகராட்சி உயர்நிலைப்பள்ளி.
திருநெல்வேலி டவுண்
மருத்துவ விடுப்பு விண்ணப்பம்
1.) விண்ணப்பதாரரின் பெயர் :-
2.) பதவியின் பெயர் :-
3.) பணிபுரியும் துறை :- பாரதியார் நகராட்சி உயர்நிலைப்பள்ளி.
திருநெல்வேலி டவுண்
4.)ஊதியம் :-
5.) அ .) விண்ணப்பிக்கும் விடுப்பின் தன்மை.:-
ஆ.) விடுப்பின் கால அளவு. :-
இ.) விடுப்பில் செல்லும் நாள். :-
ஈ.) மருத்துவச் சான்றிதழின் அடிப்படையில்
விடுப்பு விண்ணப்பிக்கப்பட்டிருப்பின்
மருத்துவர் சான்றிதழ் இணைக்கப்பட்டுள்ளதா..?
6.) விடுப்பில் செல்லக் காரணம். :-
7.) ஞாயிறு மற்றும் அரசு விடுமுறைகளை
முன்னிணைக்க / பின்னிணைக்க
உத்தேசிக்கப்பட்டுள்ளதா ..? :-
8.) இதற்கு முன் விடுப்பு விண்ணப்பிக்கப்பட்டு
இருந்தால் அவ்விடுப்பின் தன்மை. :-
9.) விடுப்பு முடிந்து பணியில் சேரும் நாள். :-
10.) விடுப்பில் இருக்கும்போது முகவரி :-
11.) தமிழ்நாடு விடுப்புவிதிகளில் விதி 15A யின் கீழ் உள்ள விதிமுறை 4 -ன் படி விடுப்பு முடிந்து பணியில் நான் சேரவில்லை எனில் விடுப்புக் காலத்திற்குப் பெற்ற ஊதியத்தினை நான் திரும்ப செலுத்திவிடுவேன் என உறுதியளிக்கின்றேன்.
நாள்:- விண்ணப்பதாரரின் கையொப்பம்
Saturday, March 29, 2014
Friday, March 28, 2014
"எதை இழந்தீர்கள் என்பதல்ல; என்ன மிச்சம் இருக்கிறது என்பதே முக்கியம்!"
தி நோட்டீஸ் போர்டு (தகவல் பலகை- நிச்சயம் கவனிக்கப்படவேண்டியது .
அது 2005-ம் ஆண்டு. வீல் சேரில் அமர்ந்தபடி தொலைக்காட்சி நிலையத்துக்கு செவிலியர்கள் துணையுடன் வந்தார் 63 வயதான ஸ்டீபன் ஹாக்கிங். கை, கால், வயிறு, தலை என உடலின் எந்தப்பாகமுமே செயல்படாத நிலை. அவரது வீல் சேரில், வலது கண் அசைவின் மூலமாக இயங்கும் கம்ப்யூட்டரும், வாய்ஸ் ஸின்தைசரும் இருந்தது. பிரிட்டிஷ் டே டைம் டாக் ஷோ நிகழ்ச்சி நடத்-திய ரிச்சர்ட் மற்றும் ஜூடி கேட்ட கேள்விகளுக்கு கம்ப்யூட்டர் மூலம் எளிதாகப் பதில் சொன்னார் ஸ்டீபன்.
‘‘பெருவெடிப்பு எனப்படும் ‘பிக் பாங்’ ஏற்படும் முன்னர், அண்ட வெளியில் என்ன இருந்தது?’’ என்று கேட்டார் ரிச்சர்ட். ‘‘வட துருவத்தின் வடக்கில் என்ன இருக்குமோ அது!’’ என்று சாதுர்யமாகப் பதில் சொல்லி அனைவரையும் அசத்தினார் ஸ்டீபன். கை தட்டிப் பாராட்டியவர்கள், ‘‘வாழ்க்கை எப்படி இருக்கிறது?’’ எனக் கேட்டார்கள். ‘‘முன்னைவிட சுவாரஸ் யமாகவும், சவால் நிறைந்ததாகவும், சந்தோஷ-மாகவும் இருக்கிறது’’ என்றார். ‘‘இந்த உடல்நிலையுடன் உண்மையில் சந்தோஷமாக இருக்க முடியுமா?’’ என்று தயங்கித் தயங்கிக் கேட்டார்கள். ‘‘எதை இழந்தீர்கள் என்பதல்ல; என்ன மிச்சம் இருக்கிறது என்பதே முக்கியம்!’’ என்றார் ஸ்டீபன் ஹாக்கிங்.
பிரிட்டனில் 1942-ம் வருடம் பிறந்த ஸ்டீபன், படிப்பில் படு சுட்டியாக இருந்தார். ஆக்ஸ்போர்டு யூனிவர்சிட்டியில் மூன்றாவது வருடம் படித்துக்கொண்டு இ-ருந்தபோது, தன் உடல் தளர்ந்திருப்பதை உணர்ந்தார். காரணமின்றி அடிக்கடி கீழே விழுந்தார். 21-வது வயதில் உடலெங்கும் தசை மாதிரிகளை வெட்டி எடுத்துப் பரிசோதித்தும், மருத்துவர்களால் தெளிவான முடிவுக்கு வரமுடிய-வில்லை. ஆனால், இரண்டு அல்லது மூன்று வருடத்துக்கு மேல் உயிர் வாழ முடியாது என்பதை மட்டும் தீர்மானமாகச் சொன்னார்கள்.
துயரத்திலிருந்த ஸ்டீபனுக்கு எதிர் வார்டில் ஒரு சிறுவன் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டான். சில நாட்களிலேயே எதிர்பாராமல் நிகழ்ந்த அந்தச் சிறுவனின் மரணம், ஸ்டீபனுக்கு பயம் தருவதற்குப் பதிலாகத் தைரியம் கொடுத்தது. அந்தச் சிறுவனைவிட தான் மிகவும் அதிர்ஷ்டசாலி என்பதை உணர்ந்தார். உடல் தன் கட்டுப்பாட்டில் இல்லாவிட்டாலும் மூளையும் சிந்தனையும் முழு உற்சாகத்துடன் இருப்பதை உணர்ந்தார். வீல் சேரில் இருந்தபடியே பல்கலைக் கழக ஆய்-வினை முடித்துப் பேராசிரியர் ஆனார். திருமணம் முடிந்து, இரண்டு குழந்தைகளும் பிறந்தன.
ஏ.எல்.எஸ். எனக் கண்டறியப்பட்ட நரம்பு நோய் முற்றியதால், 1985ம் வருடம் அவரது உடல் முழுமையாகச் செயலிழந்தது. ஆனாலும், நம்பிக்கை இழக்காமல் வலக் கண்ணை மட்டுமே அசைத்து எழுத்துக்களை அடையாளம் காட்டிப் பாடம் நடத்தியதுடன், வரலாற்றுத் திருப்புமுனையான புத்தகம் ஒன்றும் எழுதினார். ‘எ ப்ரீஃப் ஹிஸ்டரி ஆஃப் டைம்’ என்கிற அந்தப் புத்தகம் ஸ்டீபனின் புகழை உச்சிக்கு உயர்த்தியது. கலிபோர்னியாவைச் சேர்ந்த கணினி நிபுணர் ஒருவர் ஸ்டீபனின் கண்ணசைவுக்கு இயங்கும் கம்ப்யூட்டர் சாஃப்ட்வேர் கண்டு-பிடித்து, வீல் சேரில் பொருத்தித் தர, சிரமம் குறைந்து அதிகமாகச் சிந்தித்து நிறைய எழுதிக் குவித்தார் ஸ்டீபன்.
‘காலம் எப்போது தொடங்கியது? எப்போது முடியும்? காலத்தை பின்னோக்கிச் சென்று காண முடியுமா? விண்வெளிக்கு எல்லை உண்டா?’ என எல்லோர் மனதிலும் இருக்கும் கேள்விகளுக்கு அறிவியல் ரீதியாகப் பதில் சொல்லி மலைக்கவைத்த ஸ்டீபன் ஹாக்கின் ஸின் வாழ்வு, மருத்துவர்களுக்கு இன்றும் ஒரு புதிர்தான். உடல் நிலை மோசமான காலகட்டத்தில் மனைவியும், குழந்தைகளும் அவரை விட்டுப் பிரிந்தனர். ஸ்டீபன் அப்போதும் மனம் தளராமல், தன்னை அன்புடன் கவனித்துக்கொண்ட செவிலியை இரண்டாவதாகத் திரு மணம் முடித்தார்.
‘‘இந்த நோயால் பாதிக்கப்பட்டதால்தான் வெளி உலக கவனச் சிதறல்கள் இல்லாமல், முழுக் கவனமும் செலுத்தி என்னால் புத்தகங்கள் எழுத முடிகிறது. உண்மையில் நான் அதிர்ஷ்டம் செய்தவன்’’ என்று ஸ்டீபன் நம்பிக்கையுடன் பேசக் காரணம், ‘எதை இழந்தீர்கள் என்பதல்ல; எது மிச்சம் இருக்கிறது என்பதே முக்கியம்!’ என்கிற மந்திரச் சொல்லின் மகத்துவம்தான
Tuesday, March 25, 2014
கோர எண்ணங்களின் விளைவால் கோரமாகிப் போன பூவுக்கு என்ன ஆறுதல் சொல்வதென்றே தெரியவில்லை. சட்டம் தண்டிக்காததை தர்மம் தண்டிக்கும் என்று நம்புவதைத் தவிர நமக்கு வேறு என்ன வழி இருக்கிறது...?
சோனாலி முகர்ஜி.. வயது 26
சோனாலி முகர்ஜி.. வயது 26 . இவர் சமீபத்தில்,, மத்திய அரசிடம்- “எனக்கு அரசு உதவி செய்ய வேண்டும்.. அல்லது என்னைக் கருணை கொலை செய்ய வேண்டும் ” என்று கோரிக்கை விடுத்திருக்கிறார். ஏன் ?
கல்லூரி மாணவியான இவர்,, தேசிய மாணவர் படையிலும் ஆர்வமுடன் செயல்பட்டு வந்தவர்.. துணிச்சல் மிக்கவர்.. இவர் தினமும் கல்லூரிக்குச் செல்லும்போது, மூன்று
வாலிபர்கள் பின் தொடர்ந்து வந்து தொல்லைகள் கொடுத்ததைத் தாங்கமுடியாமல்-,
இனிமேலும் இப்படிச் செய்தால், நான் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க
வேண்டிவரும் என்று எச்சரித்திருக்கிறார். உடனே கோபம் கொண்ட அந்த இளைஞர்கள், உனது அழகான முகத்தைச் சிதைத்தால்தான் நீ சரிப்படுவாய் என்று கூறி, ஒர் இரவில்,, (2006 APRIL 22) மொட்டை மாடியில் உறங்கிக்கொண்டிருந்த
இவர் மீது ஆசிட்டை ஊற்றிச் சென்றுவிட்டனர்..
இன்று இவருடைய முகத்தைப் பார்ப்பவர்கள் அதிர்ந்து போவார்கள்….
கண்பார்வை பறிபோனது. ஒரு பக்கக் காது கேட்காது.. இன்னும் எத்தனையோ வலிகள், அவஸ்தைகளோடு கடந்த ஆறு வருடங்களாக நடைபிணமாக வாழ்ந்து வருகிறார். இதில் இன்னொரு அதிர்ச்சியான விஷயம். இவர் மீது ஆசிட் ஊற்றிய மூவரில் ஒருவரை இளம் குற்றவாளி என்று சொல்லிக் கோர்ட் விடுதலை செய்து விட்டதுதான் கொடுமை.
பாதிக்கப்பட்ட இந்தப் பெண் கூறுகிறார்……
“குற்றவாளிகள் சுதந்திரமாக நடமாடுகிறார்கள். நான் அவர்களின் மிரட்டலுக்குப் பயந்து வேறு ஊருக்குக் குடி பெயர்ந்துவிட்டேன்…. இந்த தேசத்தில் நீதியின் லட்சணத்தைப் பார்த்தீர்களா ?”
இவரின் அன்றைய புகைப்படத்தையும், ஆசிட் வீச்சுக்குப் பிந்தைய புகைப்படத்தையும் இங்கு இணைத்துள்ளேன்..
உங்களுக்கு என்ன தோன்றுகிறது?
இவர் மீது ஆசிட்டை ஊற்றிச் சென்றுவிட்டனர்..
இன்று இவருடைய முகத்தைப் பார்ப்பவர்கள் அதிர்ந்து போவார்கள்….
கண்பார்வை பறிபோனது. ஒரு பக்கக் காது கேட்காது.. இன்னும் எத்தனையோ வலிகள், அவஸ்தைகளோடு கடந்த ஆறு வருடங்களாக நடைபிணமாக வாழ்ந்து வருகிறார். இதில் இன்னொரு அதிர்ச்சியான விஷயம். இவர் மீது ஆசிட் ஊற்றிய மூவரில் ஒருவரை இளம் குற்றவாளி என்று சொல்லிக் கோர்ட் விடுதலை செய்து விட்டதுதான் கொடுமை.
பாதிக்கப்பட்ட இந்தப் பெண் கூறுகிறார்……
“குற்றவாளிகள் சுதந்திரமாக நடமாடுகிறார்கள். நான் அவர்களின் மிரட்டலுக்குப் பயந்து வேறு ஊருக்குக் குடி பெயர்ந்துவிட்டேன்…. இந்த தேசத்தில் நீதியின் லட்சணத்தைப் பார்த்தீர்களா ?”
இவரின் அன்றைய புகைப்படத்தையும், ஆசிட் வீச்சுக்குப் பிந்தைய புகைப்படத்தையும் இங்கு இணைத்துள்ளேன்..
உங்களுக்கு என்ன தோன்றுகிறது?
Monday, March 17, 2014
120 வயது வரை ஆயுள்
" ஷ்ரங்கதாரா " என்ற பழைமையான ஆயுர்வேத நூல் மனித வாழ்க்கையின் லட்சியமே 120 வயது வரை வாழ்வதுதான் என்கிறது. இந்த வாழ்க்கையில் ஒவ்வொரு பத்து வயதிலும் ஏதோ ஒன்றை இழக்க நேரிடுகிறது. அதன் விபரமாவது:-
10 வயதில் குழந்தைத்தனம் போகிறது.
20 வயதில் வளர்ச்சி போகிறது.
30 வயதில் மினுமினுப்பு போகிறது.
40 வயதில் புத்திசாலித்தனம் போகிறது.
50 வயதில் தோல் ஆரோக்கியம் போகிறது.
60 வயதில் பார்வை குறைந்து போகிறது.
70 வயதில் வீ ரியம் போகிறது.
80 வயதில் உடல் வலிமை போகிறது.
90 வயதில் பாலியல் ரீதியான பாகுபாடு போகிறது.
100 வயதில் உணர்வு உறுப்புகளின் திறன் போகிறது.
110 வயதில் அனைத்துப் புலன்களின் செயல்பாடு போகிறது.
120 வயதில் ஒவ்வொன்றாக இழந்து உயிரே போய் விடுகிறது.
இவ்வாறாக "ஷ்ரங்க்கதாரா" விவரிக்கிறது.
வேலையே மனிதனின் மகத்துவம்.
வேலை செய்யாவிடில் , அவன் ஒன்றுமில்லை.
அவனால் ஒன்றும் அடைய முடியாது,
ஒன்றும் சாதிக்க முடியாது.
நீ ஏழையானால் - வேலை செய்.
நீ பணக்காரனானால் தொடர்ந்து - வேலை செய்.
நீ சந்தோஷமாக இருந்தால்,
வேலையே குறியாக இரு.
சும்மாயிருந்தால் சந்தேகத்திற்கும் ,
பயங்களுக்கும் வழிவகுக்கிறது.
ஏமாற்றங்கள் ஏற்படும்போது - வேலை செய்.
உனது ஆரோக்கியத்திற்கு
ஆபத்து வந்தால் - வேலை செய்.
நம்பிக்கை தளரும்போதும் - வேலை செய்.
கனவுகள் தகர்க்கப்படும் போதும் ,
நம்பிக்கை அறவே போன போதும்
வேலை செய்
உன் வாழ்வே ஆபத்தில் இருப்பதாக
நினைத்து வேலை செய்.
அது உண்மையில் அப்படித்தான்.
வேதனை எதுவரினும் வேலை செய்.
விசுவாசத்துடன் வேலை செய்.
நம்பிக்கையுடன் வேலை செய்.
சரீர மற்றும் மன நோய்களுக்கு
வேலை செய்வதுதான் மாபெரும் மருந்து.
Saturday, March 15, 2014
வலைப்பதிவுகள் ( Blogs ) வரலாறு
இணையம் வருவதற்கு முன்பு அச்சுப் பத்திரிகைகள் மட்டுமே மக்கள் தொடர்பு சாதனங்களாக கோலோச்சின. இணையத்தில் நமது சிந்தனைகளை எழுதுவதற்குரிய வாய்ப்புக்கள் கிடைத்தால் எப்படி இருக்கும் என்ற எண்ணத்தில் உருவானதுதான் Blogs என்ற வலைப்பதிவுகள்.
சுருக்கமாகச் சொன்னால் " பிளாக் " என்பது தனிமனிதர்கள் நிர்ணயிக்கும் இணையதளம். இதில் அந்த நபர் தனக்கு விருப்பமான கருத்துக்கள் , படைப்புக்கள் , படங்கள் , வீடியோக்கள் , என வலைப்பதிவின் வசதிக்கேற்ப பயன்படுத்திக் கொள்ளலாம். இதை ஆங்கிலத்தில் Blogs என்கிறார்கள். இந்த Blogs உருவானதே ஒரு சுவாரஸ்யமான கதை.
ஜான் பர்கர் என்பவர் 1997 டிசம்பர் 17 இல் "வெப்-பிளாக் " என்ற வார்த்தையை அறிமுகப்படுத்தினார். 1999 இல் பீட்டர் மெர்ஹோல்ஸ் என்பவர் பீட்டர் மி.காம் என்ற வலைத்தளத்தில் வெப்-பிளாக் என்பதை வீ-பிளாக் என்று நகைச்சுவையாக இரண்டாகப் பிரித்து எழுதினர். அதைப்பார்த்த பைரா லேப்ஸில் வேலை பார்த்து வந்த ஈவன் வில்லியம்ஸ் என்பவர்க்கு பொறி தட்டியது. அவர் வெறுமனே பிளாக் என்ற வார்த்தையைப் பிடித்துக் கொண்டார்.
"பிளாக்" என்றால் எழுதுவது. "பிளாக்கர்" என்றால் எழுதுபவர் என்றும் அர்த்தம்.அப்படி அவர் ஆரம்பித்த " பிளாக்கர் " தான் இன்று உலகம் முழுவதும் சூப்பர் டூப்பர் ஹிட்டாகிப் போனது.அதற்கு முன்பு அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்த வலைப்பதிவுகள் ஒரு சின்னத் தகவல் பலகையாகவோ, சின்னக் குழுக்களின் விஷயங்களைப் போடும் ஓர் இடமாகவோ தான் இருந்தன. பிளாக்கர் தான் வலைப்பதிவை எளிதாக்கி உலகமெங்கும் பரவலாக்கிவிட்டது. அந்தக் காலகட்டத்தில் ஒப்பன் டைரி , லைவ் ஜெர்னல் என்று இரண்டு முக்கியமான தளங்கள் இருந்தன.
1999-ல் பிளாக்கர் அறிமுகமானாலும் 2002-ல் தான் சூடுபிடிக்க ஆரம்பித்தது. பலரும் வலைப்பதிவை ஆரம்பிக்க பிளாக்கரின் பெயர் எல்லா இடங்களிலும் பரவ ஆரம்பித்தது.ஆண்டே அதை GOOGLE நிறுவனம் வாங்கி விட்டது.
முதலில் வெறுமனே தனியார் உரையாடல்களாய் இருந்த வலைப்பதிவுகள் உண்மையான வீச்சைப் புரிந்து கொண்ட பின்னர் பல வகைகளிலும் பயன்பட ஆரம்பித்தன. குறிப்பாக அரசியல்வாதிகளுக்கு தேர்தல் நேரத்தில் செலவில்லாத விளம்பர உத்தியாகவும் தகவல் பரிமாற்று தளமாகவும் வலைப்பதிவுகள் செயல்பட ஆரம்பித்தன.பிரிட்டன் லேபர் கட்சித் தலைவர் டாம் வாட்சன் ஆரம்பித்த வலைப்பூ அரசியல் வலைப்பதிவுகளுக்கு ஒரு முன்னோடி என்றே சொல்லலாம்.
Friday, March 14, 2014
Subscribe to:
Posts (Atom)