Search This Blog

Sunday, February 7, 2016


ஏழை நாடுகள்  (30.01.2016)

பத்து வருடங்களுக்கு முன் இந்தியா பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கி இருந்தது. உலக அளவில் வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் மக்களில் மூன்றில் ஒருவர் இந்தியராக இருந்தார். இந்த தகவலை உலக வங்கி தெரிவித்தது. ஒரு நாளைக்கு 1.25 அமெரிக்க டாலர் வருமானத்திற்கு கீழ் உள்ளவர்களை வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்களாக அது கணித்தது.  அந்த கணக்குப்படி 46 கோடி பேர் இந்தியாவில் வறுமையில் வாழ்வதாக உலக வங்கி தெரிவித்தது. இது உலக அளவிலான ஏழை மக்களில் 33 சதவீதமாகும். அதன்படி உலகில் வறுமையில் வாடுவோர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் இந்தியர். இந்த நிலை இன்று மாறி விட்டது.  இந்தியாவில் 96 கோடி மக்கள் வருமானம் இன்றைக்கும் 2.5 டாலருக்கும் குறைவாக உள்ளது.  ஆனாலும் ஏழை நாடுகள் பட்டியலில் முதல் 10 இடங்களில் இந்தியாவின் பெயர் வரவில்லை என்பது சற்று ஆறுதலான விஷயம்.  உலக அளவில் வறுமையில் முதலிடத்தில் இருக்கும் முதல் 10 நாடுகளின் பட்டியல் இதோ:-  முதலிடத்தில் மால்வி என்ற தென்கிழக்கு ஆப்பிரிக்க  நாடு இருக்கிறது. அதற்கடுத்து, இரண்டாம் இடத்தில் புரூண்டி உள்ளது. மூன்றாம் இடத்தில் மத்திய ஆப்பிரிக்க குடியரசு இருக்கிறது. நான்காம் இடத்தில் நைஜெர் நாடு உள்ளது. ஐந்தாம் இடத்தில் லைபீரியா நாடும், ஆறாம் இடத்தில் மடகாஸ்கரும், ஏழாம் இடத்தில் காங்கோ நாடும், எட்டாம் இடத்தில் காம்பியாவும், ஒன்பதாம் இடத்தில் எத்தியோப்பியாவும், பத்தாம் இடத்தில் கினியா நாடும் உள்ளன.

No comments:

Post a Comment