Search This Blog

Sunday, February 14, 2016






மறைந்து போன மகாராஜா

 காடுகளில் நான் தான் ராஜா என்று கர்ஜித்து திரியும் சிங்கங்களை எல்லாம் ஜூஜூபி என்று சொல்ல வைக்கும் ஒரு வலிமையான படைப்புதான் மகாராஜா சிங்கம் என்று அழைக்கப்படும் மார்சுபியல் சிங்கம். ஆஸ்திரேலியாவில் சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வரை காட்டை கலக்கிக் கொண்டிருந்த ஒரு உயிரினம்.  இது பார்ப்பதற்கு சிறுத்தைப் போல் இருக்கும். உடல் முழுவதும் சிறுத்தைப் போன்ற வட்ட வட்ட புள்ளிகளும், புலி போல் வரி கோடுகளும் கலந்து இருக்கும் ஒரு படைப்பு. இது மிகப் பயங்கரமான கொடிய உயிரினம். இன்றைக்கு பிரமாண்டமாக தெரியும் ஆப்பிரிக்க சிங்கத்திற்கும், இதற்கும் சண்டை வந்தால், மார்சுபியல் சிங்கம் கொடுக்கும் ஒரு அடியில் ஆப்பிரிக்க சிங்கம் நிலைகுலைந்து போய்விடும்.  இந்த சிங்கத்தின் பலத்துக்கு பற்களும் நகங்களும்தான் முக்கிய காரணம் என்கிறார்கள். தாடைகளின் இருபுறமும் கூர்மையாக காணப்படும் பற்கள், பெரிய மிருகங்களின் சதையைக் கூட எளிதில் குத்திக் கிழித்துவிடும். இதன் நகங்களும் மிகவும் கூர்மையும், பலமும் வாய்ந்தவை.  19-ம் நூற்றாண்டில் இந்த சிங்கங்களின் எலும்புகள் ஆஸ்திரேலியாவின் பல இடங்களில் கிடைத்தன. ஆனால், 2002-ல் தான் இதன் முழுமையான எலும்புக்கூடு ஒரு குகையில் கண்டெடுக்கப்பட்டது. டிம் வில்லிங் என்ற இயற்கை ஆர்வலர் வடமேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள குகை ஒன்றில் மார்சுபியல் சிங்கங்களின் உருவங்கள் வரையப்பட்டிருப்பதை கண்டுபிடித்தார்.  மிகவும் பலமும், குரூரமும் கொண்ட இந்த இனம் எப்படி அழிந்தது? என்பது வியப்பான ஒன்றாகவே இருக்கிறது. அதற்கான ஆய்வுகள் இன்னும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. 

No comments:

Post a Comment