Search This Blog

Sunday, February 7, 2016


ஒரே ஒரு  மாணவிக்காக   ஓடும் ரெயில்

ஒரு தேசத்தின் அரசாங்கம் மக்களை எப்படி காப்பாற்ற வேண்டும்? எப்படி உதவ வேண்டும் என்பதில் வளர்ந்த நாடுகள் மிகக் கவனமாக உள்ளன. அந்த நாடுகள் எப்போதும், அந்த நாட்டு மக்களுக்காகவே செயல்படுகிறது. அதிலும் ஜப்பான் மற்ற நாடுகளுக்கு முன்னோடியாக திகழ்கிறது. அப்படி ஒன்றுதான் ஒரேஒரு பள்ளி மாணவிக்காக ஒரு ரெயில் இயங்குவது. நமது ஊரில் பள்ளி நிர்வாகம் கூட ஒரு மாணவிக்காக ஒரு ஆட்டோவை கூட இயக்காது. ஆனால், ஜப்பான் ஒரு மாணவிக்காக மட்டும் தினமும் 80 கி.மீ. தொலைவுக்கு ஒரு ரெயிலை இயக்கி வருகிறது. காணா என்ற அந்த மாணவி பள்ளி இறுதி வகுப்பு படித்து வருகிறார்.

இவர் ஜப்பானின் வடக்கு தீவில் உள்ள ஹொக்காடியொ என்ற கிராமத்தில் இருந்து 80 கி.மீ. தொலைவில் உள்ள தனது பள்ளிக்கு ரெயில் மூலம் சென்று வருகிறார். இந்த தீவுக்கு இப்போது படகு போக்குவரத்து அதிகம் இருப்பதால் ரெயிலை யாரும் பயன்படுத்துவதில்லை. அதனால் இந்த ரெயில் தடத்தை 2012-ல் மூடிவிட ரெயில்வே நிர்வாகம் முடிவெடுத்தது. அப்போதுதான் இந்த கிராமத்தில் உள்ள ‘காமிஷிரதகி’ ரெயில் நிலையத்தில் இருந்து ‘ஷின்அசகவா’ ரெயில் நிலையம் வரை ஒரேஒரு மாணவி மட்டும் தினமும் பயணம் செய்வது தெரிய வந்தது. உடனே தனது மூடுவிழாவை தள்ளிப் போட்டது நிர்வாகம்.

அதோடு நின்று விடாமல் மாணவியின் பள்ளி நேரத்துக்கு ஏற்றபடி ரெயிலின் நேரத்தையும் மாற்றி அமைத்தது. முதலில் 50 கி.மீ. வரை சென்று வந்த மாணவி மேற்படிப்புக்காக வேறு பள்ளியில் சேர்ந்தார். உடனே ரெயில் நிர்வாகமும், அந்த பள்ளி இருக்கும் ஊர் வரை ரெயிலை நீடித்து இயக்கியது. அதாவது, 30 கி.மீ. கூடுதலாக, இப்போது இந்த ரெயில் ஒரு மாணவிக்காக 80 கி.மீ. தொலைவு சென்று வருகிறது. ஜப்பான் ரெயில் தடங்கள் நமது ரெயில் தடங்கள் போல் இல்லை. வருடத்தில் 6 மாதங்கள் பனித்துகள்கள் கொட்டி ரெயில் தண்டவாளத்தை இரண்டடி உயரத்திற்கு மூடிவிடும்.  தினமும் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் அந்த பனித்துகள்களை அகற்ற வேண்டும். இந்த ஒரு மாணவி பயணிப்பதற்காக தினமும் 300-க்கும் மேற்பட்ட ரெயில்வே ஊழியர்கள் இந்த 80 கி.மீ. பாதையில் உழைக்கிறார்கள்.

மாணவியின் படிப்பு வரும் மார்ச் மாதம் 26-ந்தேதியுடன் முடிவடைகிறது. அன்று தான் இந்த ரெயிலின் கடைசி ஓட்டம் என்று ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. ஒரேஒரு மாணவிக்காக இத்தனை பெரிய உழைப்பைத் தரும் ஜப்பானை பாராட்டாமல் இருக்க முடியாது.

No comments:

Post a Comment