Search This Blog

Monday, February 8, 2016

பிப்ரவரி ரஷ்ய புரட்சி 
 

 ரஷியாவில் ஜார் மன்னர்கள் நீண்ட நெடுங்காலமாக கொடுங்கோலாட்சி புரிந்து வந்தனர். 1900-ம் ஆண்டின் தொடக்கத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக புரட்சி வெடிக்க ஆரம்பித்தது. அந்த சமயத்தில் முதல் உலகப்போர் தொடங்கியது. உடனே கொடுங்கோலாட்சியை தளர்த்திக் கொண்டு மக்களை போரில் பங்கேற்க அழைத்தார் அப்போதைய ஜார் மன்னர்.  போர் முடிந்ததும் தனது கொடூர முகத்தை மீண்டும் காட்டினார். 1917-ல் தொழிலாளர்கள் கலகம் செய்ய ஆரம்பித்தனர். எங்கும் வேலை நிறுத்தம், போராட்டம் என உழைப்பாளர்களின் எதிர்ப்பு கிளம்பியது. விளாடிமிர் லெனின் தலைமை தாங்கிய இந்த புரட்சிக்கு ‘பிப்ரவரி புரட்சி‘ என்று பெயர்.   கலகக்காரர்கள் மீது ரஷிய ராணுவத்தை ஏவி விட்டார் அப்போதைய ஜார் மன்னர் நிக்கோலஸ். ஆனால், எதிர்பாராதவிதமாக ராணுவத்தின் பெரும் பகுதி புரட்சியாளர்களுடன் கைக்கோர்த்துக் கொண்டன.  ஜார் மன்னரை தூக்கி எறிந்துவிட்டு, ‘ரஷியன் புரொவிஷனல் கவர்ன்மெண்ட்‘ என்ற பெயரில் இளவரசர் ஒருவரும் கம்யூனிஸ்டு இயக்கத்தைச் சேர்ந்த ஒருவரும் இணைந்து ஆட்சி செய்யத் தொடங்கினார்கள். லெனின் வலது கையாக செயல்பட்ட ட்ராட்ஸ்கி கைது செய்யப்பட்டார். மறுபடியும் புரட்சி தொடங்கியது. இதற்கு ‘அக்டோபர் புரட்சி‘ என்று பெயர்.  இடைக்கால ஆட்சி தொடங்கிய 8 மாதங்களில் இதுவும் சரிப்படாது என்று அதையும் தூக்கி எறிந்து லெனின் ஆதரவு சக்திகளான போல்ஷவிக்குகள் ரஷியாவை உழைப்பாளர்களே ஆட்சி செய்யலாம் என்ற முடிவுக்கு வந்தனர்.  ஜார் மன்னர்களின் ஆட்சியை மறுபடி கொண்டுவர நினைத்த ரஷிய முதலாளிகள், வெண்படை என்ற பெயரில் சண்டை இட்டார்கள். ராணுவ வீரர்கள், தொழிலாளர்கள், இளைஞர்கள், விவசாயிகள் உள்ளிட்டோரை கொண்டிருந்த செங்கொடி படை, அதை எதிர்த்து கிட்டத்தட்ட 7 வருடங்கள் போரிட்டது.  வெண்படைக்கு வெளிநாட்டு ராணுவங்களின் ஆதரவு இருந்தும் கூட செம்படை வெண்படையை தோற்கடித்தது. இந்த செம்படைதான் பிறகு ரஷிய ராணுவமாக உருவெடுத்தது. ஒரு மாபெரும் மக்கள் புரட்சியால் மாபெரும் கம்யூனிஸ்டு தேசமாக மலர்ந்த சோவியத் யூனியன், பரிதாமாக சிதறுண்ட வரலாறும் உண்டு.

No comments:

Post a Comment