Search This Blog

Sunday, February 7, 2016


ஓர்  இனத்துக்காக  எழுதிய  நாவல் (01/02/2016)

சமூகத்தின் மீது கொண்ட கோபம், விருப்பு, வெறுப்பு என்ற பல்வேறு கோணங்களை வைத்து நாவல் எழுதப்படுவது வழக்கம். இனத்தை காப்பாற்றுவதற்காக ஒரு நாவல் படைக்கப்பட்டது என்றால் நம்புவதற்கு கடினமாகத்தான் இருக்கும்.

அந்த நாவலின் பெயர் ‘ரிசுரெஷன்’. அதாவது ‘உயிர்த்தெழுதல்’. எழுதியவர் லியோ டால்ஸ்டாய். ரஷியாவில் வாழ்ந்த டுகோபார்ஸ் இனத்தை காப்பாற்றுவதற்காக இந்த நாவலை அவர் எழுதினார்.மொத்தம் 12 ஆயிரம் குடும்பங்களைக் கொண்ட 40 ஆயிரம் மக்கள் மட்டுமே அந்த இனத்தில் இருந்தனர். இடையர்களும், விவசாயிகளும் சேர்ந்து உருவாக்கிய இனம் இது. இவர்கள் அமைதியான வாழ்க்கை வாழ்ந்தார்கள். அகிம்சையை இவர்களிடம் இருந்துதான் மகாத்மா காந்தி கற்றுக் கொண்டார்.

இவர்கள் ராணுவத்தை விரும்பவில்லை. எதற்குமே அரசாங்கத்தை நம்புவதில்லை. அதனால் இவர்கள் அரசுக்கு வரியும் கட்டுவதில்லை. ராணுவத்திலும் சேருவதில்லை. இதனால் அவர்களை ரஷிய அரசு பலவிதத்தில் கொடுமைப்படுத்தியது. டுகோபார்ஸ் இனத்தவர் எந்த கொடுமைகளையும் எதிர்ப்பு காட்டாமல் ஏற்றுக்கொள்வது அரசுக்கு பெரும் தலைவலியாக இருந்தது. அவர்களை சிறையில் தள்ளியது. அதையும் அவர்கள் மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண்டார்கள். கடைசியாக கனடா நாடு இவர்களை தனது நாட்டுப் பிரஜைகளாக ஏற்றுக் கொள்வதாக அறிவித்தது. 6 ஆயிரம் மைல்கள் கொண்ட பசிபிக் கடலை கடந்து செல்வதற்கு அவர்களிடம் பணம் இல்லை.

அந்த பணத்தை பெறுவதற்காக லியோ டால்ஸ்டாய் எழுதியதுதான் ‘உயிர்த்தெழுதல்’ என்ற நாவல். இதன் ராயல்டி பணத்தை வைத்துதான் அவர்களை கனடா நாட்டிற்கு கப்பலேற்றி அனுப்பினார். 2,300 டுகோபார்ஸ் இனத்தவர்கள் முதல் கப்பலில் பயணித்தார்கள். பாதி கடலைக் கடந்தபின் ஒரு குழந்தைக்கு அம்மை நோய் வந்துவிட்டது. அதனால், அந்த கப்பல் பாதியிலேயே திரும்பிவிட்டது.

ஒரு நாளைக்கு 10 மணி நேரம் எழுதி வாரம் வாரம் அத்தியாயத்தை வெளியிட்டார். ரஷிய மக்கள் ஆர்வத்தோடு அந்த நாவலை படித்தனர். மொத்தம் 17 ஆயிரம் ரூபிள் தந்து அந்த மக்கள் இடம் பெயர உதவினார், லியோ டால்ஸ்டாய். தான் நேசித்த மக்களை காப்பாற்ற ஒரு எழுத்தாளர் எழுதிய ஒரே நாவல் இதுதான். இந்த உதவியை மறக்காத அந்த இன மக்கள் டால்ஸ்டாயை தங்களின் குல தெய்வமாகவே வணங்குகிறார்கள்.

No comments:

Post a Comment