5 பேருக்கு 697 ஆண்டு சிறை
11 பெண்கள் படுகொலை
மெக்சிகோ, ஜூலை.30- மெக்சிகோவில் சிகுவாகுவா என்ற மாகாணத்தில் 1990-ம் ஆண்டில் இருந்து நூற்றுக்கணக்கான பெண்கள் படுகொலை செய்யப்பட்டு வந்துள்ளனர். இந்த கொலைகள் எல்லாம் ஒரே மாதிரியாக அமைந்தது அங்கு பதற்றத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில், அங்கு எல்லைப் பகுதியில் அமைந்துள்ள சியுடாட் ஜூவரெஸ் நகரில் 11 பெண்களை ஒருவர் பின் ஒருவராக படுகொலை செய்ததாக 5 பேர் பிடிபட்டனர். அவர்கள்மீது வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், இதுவரை இல்லாத சாதனை அளவாக அவர்களுக்கு தலா 697 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தது. இது தொடர்பாக அரசு வக்கீல் அலுவலகம் கருத்து தெரிவிக்கையில், “இந்த குறிப்பிட்ட வழக்கில் குற்றவாளிகள், பெண்களுக்கு வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தை காட்டி அழைத்து வந்து, விபசாரத்தில் ஈடுபடுத்தி பின்னர் கொன்றுள்ளனர்” என்றார். 30/07/2015