Search This Blog

Tuesday, March 22, 2016


தாய்ப்பாலின் மகத்துவம் 19/03/2016

உலகம் முழுவதும், குழந்தைகளுக்கு தாய்ப்பால் தருவதில் தாய்மார்களுக்கு ஒரு தயக்கம் இருந்து கொண்டே இருக்கிறது. இந்த தயக்கம் அதிக வருமானம் கொண்ட நாடுகளில் மிக அதிகமாக இருக்கிறது. குறைந்த வருமானம் கொண்ட நாடுகளில் குறைவாக இருக்கிறது. இந்த தயக்கத்திற்கு காரணமாக இருப்பது தாய்ப்பால் அதிகமாக கொடுத்தால் மார்பகத்தின் கவர்ச்சி குறைந்துவிடும் என்ற நம்பிக்கைதான்.

இந்த நம்பிக்கை இப்போது குறைந்த வருமானம் கொண்ட நாடுகளின் தாய்மார்களை அதிக அளவு தொற்றிக்கொண்டுள்ளது. 37 சதவீத குழந்தைகளுக்குத் தான் 6 மாதம் வரை தாய்ப்பால் கொடுக்கப்படுகிறது. தாய்ப்பால் புகட்டப்படாத குழந்தைகளுக்கு இயற்கையாக தாய்ப்பால் மூலம் கிடைக்கும் நோய் எதிர்ப்பு சக்தி கிடைப்பதில்லை. இது போக தாய்ப்பால் உடல் பருமன், சர்க்கரை நோய், ஆஸ்துமா, ரத்த அழுத்தம், அலர்ஜி, பல் சொத்தை போன்ற நோய்கள் வராமல் குழந்தைகளை பாதுகாப்பதில் மிக முக்கிய பணியாற்றுகிறது.

குழந்தைகளைப் போலவே, தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கும் ஏராளமான நன்மைகள் கிடைக்கின்றன. மார்பக புற்றுநோய், கர்ப்பப்பை புற்றுநோய் வராமல் பாதுகாக்கிறது. தாய்ப்பால் கொடுக்கும் காலங்களில் கரு உருவாகாமல் தடுக்கலாம்.

குறிப்பிட்ட காலம் வரை தாய்ப்பால் கொடுக்காததால் உலகம் முழுவதும் 5 வயதிற்கு உள்பட்ட 8 லட்சத்து 23 ஆயிரம் குழந்தைகள் வருடந்தோறும் இறக்கின்றன. இந்தியாவில் மட்டும் 1 லட்சத்து 56 ஆயிரம் குழந்தைகள் ஆண்டுதோறும் தாய்ப்பால் கிடைக்காமல் இறக்கின்றன என்கிறது உலகப் புகழ் பெற்ற ‘லேன்செட்‘ மருத்துவ இதழ். இந்த இதழ், தாய்ப்பால் தொடர்பாக இந்தியாவில் சமீபத்தில் ஓர் ஆய்வை நடத்தியது.

அந்த ஆய்வு முடிவில், “இந்தியாவில் தாய்மார்கள் அனைவரும் தங்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுத்தால், வருடந்தோறும் நிகழும் 5 வயதுக்குட்பட்ட 1 லட்சத்து 56 ஆயிரம் குழந்தைகளின் மரணத்தை தடுக்கலாம். 36 லட்சம் குழந்தைகளுக்கு வயிற்றுப் போக்கு ஏற்படுவதை தடுக்கலாம். 34 லட்சம் குழந்தைகளுக்கு நிமோனியா வராமல் பாதுகாக்கலாம். மார்பக புற்றுநோய் காரணமாக ஆண்டுதோறும் இறக்கும் 7 ஆயிரம் பெண்களை காப்பாற்றலாம். இந்த நோய்களுக்காக செலவிடப்படும் ரூ.4 ஆயிரத்து 300 கோடி ரூபாயை மிச்சப்படுத்தலாம்“ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, தாய்ப்பால் கொடுப்பதன்மூலம் குழந்தைகளின் மரணத்தை தடுப்பது ஒவ்வொரு தாயின் கையிலும் உள்ளது.

Monday, March 21, 2016


அழி ய லா மா அடை யா ளம்?
மார்ச் 21, 2016 திங்கட்கிழமை 
 
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே தேயிலை தோட்டத்துக்குள் நுழைந்த புலி சுட் டுக் கொல் லப் பட் டுள்ள விஷ யத் தில் பல ருக் கும் வருத் தம் தான். ஆட் கொல்லி புலி அது; கடித்து குதற வந்த புலியை தற் காப் புக் காக சுட் டோம் என் கி றது வனத் து றை யும், போலீ சும். உணவு தேடி திரி யும் புலியை துப் பாக் கி யால் அடக்க நினைப் பது நியா யமா என இன் னொரு தரப் பி னர் ேகட் கின் ற னர்.
இந் தி யா வில் புலி கள் எண் ணிக்கை வேக மாக குறைந்து வரு வ தாக மத் திய அரசு தெரி வித் துள் ளது. தமி ழ கத் தில் 2 ஆண் டில் 24 புலிகள் இறந் துள் ளன. இதில் 10 புலி கள் விஷம் வைத்து கொல் லப் பட் டன. கடந்த ஆண் டில் 6 புலி யும், நடப் பாண் டில் இது வரை 3 புலி யும் இறந் துள் ளன. புலி கொலை யின் பின் ன ணி யில் மனித உயிர் பாது காப்பு பிர தா ன மாக கூறப் ப டு கி றது. கடந்த 11ம் தேதி ஜார்க் கண்ட் மாநி லத்தை சேர்ந்த தொழி லாளி மது வோ ரான் என் ப வர் நீல கிரி கூட லூர் அரு கே யுள்ள ேதவர் சோ லை யில் புலி யால் ெகால் லப் பட் டார். இந்த சம் ப வத் தின் தொடர்ச் சி யாக 8 வய தான, 200 கிலோ எடை கொண்ட ஆண் பு லியை போலீ சார் சுட்டு கொன் ற னர். இந்த புலி யின் இடது கால் காயத் து டன் நடக்க முடி யா மல் சுற் றி யது என் பது கவ னத் தில் கொள்ள வேண் டிய முக் கிய விஷ யம்.
புலி கள் சாதா ர ண மாக தாங் கள் வாழு மி டங் களை விட்டு வெளியே வரு வ தில்லை. கடந்த சில ஆண் டாக புலி கள் எண் ணிக்கை அதி க ரித்து விட வில்லை. இந் திய வரை பட பரப் ப ள வில் ஒப் பி டு கை யில் இந்த எண் ணிக்கை குறை வு தான். புலி கள் இப் ப கு தியை விட்டு வெளியே வரா மல் இருக்க நீல கிரி முது மலை புலி கள் சர ணா லய வடக் குப் புற வெளிச் சுற்று பகு தியை அதி க ரிக்க வேண் டும் என்ற அர சா ணை யும் பிறப் பிக் கப் பட் டது. எல் லையை விரி வு ப டுத் தும் போது பொக் கா பு ரம், மசி னக் குடி போன் ற வை யும் இந்த எல் லைக் குள் வந் து வி டும். வன விலங் கு கள் வாழ் வி டம் அதி க மா கி வி டும். ஆனால் ஏனோ பின் னர் செயல் ப டுத் தப் ப ட வில்லை.
இது போல் கூட லூர் அருகே தேவர் சோலை ஒரு கா லத் தில் மழைக் கா டு க ளாக இருந் தது. ஆனால் தேயிலை தோட் டம் மற் றும் வணிக பயன் பாடு அதி க மா ன தால் இது தன் தன் மையை இழந்து விட் டது. எல்லை விரி வு ப டுத் தி யி ருந் தாலோ, வணிக மயம் குறைந் தி ருந் தாலோ விலங் கு கள் எல் லையை விட்டு வெளியே வந் தி ருக்க வாய்ப் பில்லை. மற் றொன்று விவ சா யி கள் தங் கள் ஆடு, மாடு களை புலி, சிறுத்தை போன்ற வன விலங் கு கள் அடித் துக் கொல் லும் போது அவற் றுக்கு உரிய இழப் பீடு அர சி டம் இருந்து கிடைப் ப தில் சிக் கல் நீடிப் ப தால், விஷம் வைத்து கொல் கின் ற னர். அடித் துக் கொன்ற இறைச் சியை புலி மீண் டும் வந்து உண் ணும் போது பலி யாகி விடு கி றது. இது போன்ற சம் ப வங் க ளும் தடுக் கப் பட வேண் டும்.
வேட் டை யா டும் தன் மையை இழக் கும் அல் லது வய தான விலங் கு கள் வனப் ப கு தியை விட்டு வெளியே வரு கின் றன. சில சம யம் மற் றொரு வனப் ப கு தி யில் இருந்து கொண் டு வ ரப் ப டும் விலங் கு க ளும் அங் கி ருக் கும் விலங் கு க ளால் அடித்து விரட் டப் ப டு வ தும் உண்டு. வனப் ப குதி இடம் சுருங் கி வி டு வ தால் வெளியே வரும் விலங் கு கள் ஆட் கொல் லி யாக மாறு கின் றன. பொது வாக இவ் வாறு ஊருக் குள் வரும் கொடிய விலங் கு கள் மயக்க தோட்டா செலுத் தி தான் பிடிக் கப் ப டும். ஆனால் கொல் லப் பட் டுள் ளது.
புலி பிடிக்க ஏனோ தானோ முயற்சிகளை தான் இன் னும் வனத்துறையும், டைகர் ஸ்கு வார் டும் செய்து வரு கி றது. புலியை பிடிக்க டைகர் ஸ்கு வார்டு போலீ சார் பாது காப்பு கவச ஆடை அணி யா மல் ஆடு பிடிப் பது போல் சென் றது சர்ச்சை ஏற் ப டுத் தி யுள் ளது. பெண் புலி யின் சிறு நீர் வைத் தும், மயக்க ஊசி செலுத் தி யும் வனத் து றை யி னர் செய்த முயற்சி பலிக் காத நிலை யில், மக் க ளின் கோபம் தணிக்க வேட்டை நடத் தப் பட் டி ருக் க லாம் என கூறப் ப டு கி றது.
வனப் ப கு தியை விரி வு ப டுத் து வது ஒன்றே நிரந் தர தீர்வாக அமை யும். வடக்கே முது மலை வனப் ப கு தியை விரி வு ப டுத் தி விட் டால் விலங் கு க ளின் வாழ் விட பரப் ப ளவு அதி க ரித்து, அதற் கேற்ப அவை யும் இடம் மா றி வி டும். மனி தர் க ளுக் கும் தொல் லை கள் இருக் காது. புலி களை காக்க முயற் சிக் கா மல் அழிக்க ஆயு தங் களை தூக் கி னால் தேசிய விலங் கான புலியை புகைப் ப டத் தில் மட்டுமே காணும் அவல நிலை முடி யும்.

Thursday, March 17, 2016


உணவுக்காக ஒரு வங்கி 18/03/2016

ரத்த வங்கி, தாய்ப்பால் வங்கி என்று பல வங்கிகள், அவை சேகரிக்கும் பொருட்களை இருப்பவர்களிடம் பெற்று தேவைப்படுபவர்களுக்கு கொடுத்து வருகிறது. அந்த வகையில் ‘ரொட்டி வங்கி‘ என்ற பெயரில் மராட்டிய மாநிலத்தில் அவுரங்காபாத் என்ற இடத்தில் ஒரு வங்கி இயங்கி வருகிறது. பசியால் வாடும் மக்களுக்கு உணவு தருவதற்காக இந்த வங்கி தொடங்கப்பட்டுள்ளது.

ஜவுளித்தொழில் செய்து வரும் யூசுப் முகதி என்பவர் தான் இதன் நிறுவனர். பசி நிறைந்த மக்கள் ஒரு புறமும், அத்தகைய மக்களுக்கு உதவும் மனநிலையில் இருக்கும் மக்கள் மறுபுறமும் இருப்பதைக் கண்ட யூசுப். இவர்களை இணைக்கும் விதமாக, இந்த வகை வங்கியை ஆரம்பித்தார். காலை 11 மணியிலிருந்து இரவு 11 மணி வரை இந்த வங்கி திறந்திருக்கும்.

பிச்சைக்காரர்களுக்கு இங்கு அனுமதி இல்லை. அவர்களைத் தவிர மற்ற யார் வேண்டுமானாலும் இங்கு வந்து உணவைப் பெற்றுக்கொண்டு போகலாம். பெரும்பாலும் பசியில் வாடும் அடித்தட்டு குடும்பங்களைச் சேர்ந்த மக்களே இந்த வங்கிக்கு வருகிறார்கள்.  இவர்களுக்கு உணவளிக்க விரும்புபவர்கள், இந்த வங்கியில் அன்னதானம் செய்யலாம். அதற்கென்று ஒரு படிவம் தரப்படும். அதில் உணவளிப்பவரின் பெயர், முகவரி ஆகியவற்றைக் கொடுத்து உணவையும் தந்துவிட்டு போகலாம். இந்த பெயர் மற்றும் முகவரி கூட உணவின் தரம் பற்றி சொல்வதற்காகத்தான் வாங்குகிறார்கள்.

சிலர் தினசரி வந்து உணவு தருகிறார்கள். சிலர் எப்போதாவது வந்து தருகிறார்கள். அசைவம், சைவம் என்று எந்த வகை உணவையும் வாங்கிக்கொள்கிறார்கள். இப்படி பெறப்படும் உணவு வகைகள் ரொட்டி வங்கியில் தனி உணவுப் பாக்கெட்டுகளில் அடைத்து குளிர்பதனப் பெட்டியில் வைத்துவிடுகிறார்கள். உணவு என்று பசியோடு  வருபவர்களுக்கு  அதை தருகிறார்கள்.

ஆரம்பத்தில் 250 உறுப்பினர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த வங்கியில், இரண்டே வாரங்களில் உறுப்பினர் எண்ணிக்கை 375 ஆக உயர்ந்துவிட்டது. உறுப்பினர்கள் டெபாசிட் செய்யும் உணவு மட்டுமில்லாமல், ஓட்டல்கள், திருமண மண்டபங்களில் இருந்தும் உணவை கொண்டு வந்து தருகிறார்கள். தற்போது தினமும் 500 பேர் இங்கு உணவு பெற்று பயனடைகிறார்கள்.

வங்கியில் டெபாசிட் செய்யும் பணத்துக்கு வட்டி கிடைக்கும். ரொட்டி வங்கியில் டெபாசிட் செய்யும் உணவுக்கு புண்ணியம் கிடைக்கும் என்று இங்குள்ள உள்ளூர் மக்கள் சொல்கிறார்கள். அதென்னவோ உண்மைதான்..!

Wednesday, March 16, 2016


‘இலுப்பை’யின் சிறப்புகள் 17/03/2016

இலுப்பை மரத்தில், ‘நெட்டிலை இலுப்பை‘ என்றொரு வகை உண்டு. இது 200 முதல் 400 ஆண்டுகள் உயிர் வாழக்கூடியது. கருமையான, தடிப்பான அடிமரத்தைக் கொண்டது. கடந்த 2,000 ஆண்டுகளாக இது சாலையோரங்களிலும், தோப்புகளிலும், கோவில்களுக்கு அருகிலும் வளர்க்கப்பட்டு வந்துள்ளது.

மெதுவாக வளரும் இந்த மரம் மிக அதிக வெப்பநிலை கொண்ட மணற்பாங்கான அல்லது கற்கள் நிறைந்த திறந்தவெளிகளில் காணப்படுகிறது. கோடையில் இலைகள் உதிர்ந்து, புதிய செம்புத்தகடு போன்ற கொழுந்து இலைகள் மிளிரும்.

நெட்டிலை இலுப்பை வேனிற்காலத்தில் பூக்கும். பூக்கள் மஞ்சள் கலந்த வெண்மை நிறம் கொண்டவை, மணம் கொண்டவை, கொத்தாகக் காணப்படுபவை. பூவிதழ்கள் தடித்தவை, ஒன்று சேர்ந்து வட்ட வடிவில் அமைந்தவை பூக்கள் துளைஉடையனவாக இருக்கின்றன.  மகரந்தச் சேர்க்கை நடைபெற்ற பின்பு பூவின் அகவிதழ் தொகுப்பு மரத்தின் உயர்ந்த கிளைகளில் இருந்து காற்றில் சுழன்று, வெண்மைப் பூக்கள் காற்றில் மிகுதியாக வீழ்வது வெண்மையான ஆலங்கட்டி மழை வானில் இருந்து வீழ்வதுபோலத் தோன்றும் பூக்கள் வாடாமல் இருக்கும்போது யானைத் தந்தத்தின் நிறமும், உறுதியும் கொண்டவை. வாடியபின் மீன் தூண்டில் போன்று இருக்கும். இலுப்பையின் அனைத்து உறுப்புகளும் பழங்குடி மக்களால் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன.

 மரக்கட்டை விறகாக மட்டுமின்றி அறைக்கலன்கள், மரச்சாமான்கள், சமையல் பாத்திரங்கள், வண்டிச்சக்கரங்கள், மரப்பெட்டிகள் போன்றவற்றின் தயாரிப்பிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. மரப்பட்டைகள் பொருட்களுக்கு சாயமேற்றவும், காய்ச்சல், தோலரிப்பு, புண்கள், வீக்கம்போன்ற நோய்களை நீக்கவும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இலைகள் கால்நடைத் தீவனமாகவும், வலிகள், எலும்புப்பிடிப்பு நீக்கியாகவும் பயன்படுத்தப் பட்டுள்ளன. குழந்தை ஈன்ற பழங்குடிப்பெண்கள் இலைகளைத் தம்முடைய மார்பகங்களில் கட்டிக்கொண்டு தாய்ப்பால் சுரப்பை அதிகரித்துக்கொண்டனர்.

இதன் விதையிலிருந்து பிழிந்தெடுக்கப்படும் எண்ணெய் இலுப்பை எண்ணெய் எனப்படுகின்றது. இந்த எண்ணெய் விளக்கெரிக்கப் பயன்படுகிறது. “ஆலை இல்லாத ஊருக்கு இலுப்பைப்பூ சர்க்கரை“ என்று ஒரு பழமொழி உண்டு. அந்த அளவிற்கு சுவை கொண்டது இலுப்பைப்பூ.  இலுப்பைப் பயன்பாட்டில் மிக முக்கிய பங்கு வகிப்பது அதன் பூக்கள்தான். பூக்களின் தடித்த அகவிதழ்கள் இனிப்புச்சுவை கொண்டிருப்பதால் பழங்குடியினர் இதை சர்க்கரையைப் போன்று பயன்படுத்தினர். இதழ்களை நேரடியாகவோ, உலர்த்தியோ, அரிசியுடன் சமைத்தோ, வெல்லத்துடன் சேர்த்து உருட்டியோ, தேனில் தொட்டோ உண்டனர். பஞ்ச காலத்திலும், பாலை நிலத்திலும் இது ஒரு முக்கிய உணவாகத் திகழ்ந்தது.

வங்கிக்கடன்  வசூல் 17/03/2016

பொதுவாக ஏழைகள் என்றாலும், பணக்காரர்கள் என்றாலும் சரி, தங்களது அத்தியாவசிய, அவசர தேவைகளுக்காக நிதிநிறுவனங்களிலும், வங்கிகளிலும் கடன் வாங்குகிறார்கள். அது விவசாயி என்றாலும் சரி, பெரும் செல்வந்தர் விஜய் மல்லையா என்றாலும் சரி, வங்கிகளில் கடன் கொடுப்பதற்காக விதிக்கப்படும் நிபந்தனைகள், விதிகளை ஏற்றுத்தான் கடன் வாங்குகிறார்கள். எனவே, யாராக இருந்தாலும் சரி, கடன் வாங்கும்போது ஒப்புக்கொண்டு கையெழுத்திட்ட நிபந்தனைகளின் அடிப்படையில், கடனை கண்டிப்பாக திருப்பிக்கட்டவேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்கமுடியாது. ஆனால், அதை திரும்ப வசூலிப்பதில் மென்மையான அணுகுமுறைகளுக்கு பதிலாக, தேவைக்கு அதிகமாக கெடுபிடி செய்யும்போதுதான் பிரச்சினை ஏற்படுகிறது.

கடந்தவாரம் தமிழ்நாட்டில் அப்படி ஒரு சம்பவம் நடந்தது. தஞ்சை மாவட்டம், ஒரத்தநாட்டை அடுத்த சோழகன்குடிக்காடு கிராமத்தில் டிராக்டர் வாங்குவதற்காக பாலன் என்ற விவசாயி, ‘கோட்டக் மகேந்திரா’ வங்கியிடம் கடன்பெற்றிருக்கிறார். வாங்கியகடன் ரூ.3 லட்சத்து 80 ஆயிரத்து 430. இதற்கு 6 தவணைகளில் வட்டியும் சேர்த்து, ரூ.4 லட்சத்து 11 ஆயிரத்து 200 கட்டிவிட்டார். அதன்பிறகும், ‘நீ இன்னும் ரூ.1 லட்சத்து 37 ஆயிரத்து 86 கட்டவேண்டும்’ என்று அந்த தனியார் வங்கி நிர்ப்பந்தித்து இருக்கிறது. ‘நெல் அறுவடை முடிந்தவுடன் தந்துவிடுகிறேன்’ என்று அந்த விவசாயி உறுதிமொழி அளித்தும், போலீசாரின் துணையோடு அந்த வங்கி, அவரது டிராக்டரை பறிமுதல் செய்ததோடு மட்டுமல்லாமல், போலீசாரால் அவர் மூர்க்கத்தனமாக தாக்கப்பட்டுள்ளது, எல்லோரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.

இந்த காயம் ஆறுவதற்கு முன்பே, மற்றொரு சோகசம்பவம் அரியலூர் மாவட்டத்தில் நடந்துள்ளது. அரியலூர் மாவட்டம், ஒரத்தூர் பகுதியைச் சேர்ந்த அழகர் என்ற விவசாயி, டிராக்டர் வாங்க ‘சோழமண்டலம் பைனான்ஸ்’ என்ற ஒரு தனியார் நிதிநிறுவனத்திடம் ரூ.7 லட்சம் கடன் வாங்கி, மாத தவணைகளில் ரூ.5 லட்சத்தை கட்டிவிட்ட நிலையில், மீதி தவணைகளைக்கட்ட தாமதம் ஆனதால், அவரை பொதுமக்கள் முன்னால் தாக்கி, டிராக்டரை பறிமுதல் செய்துவிட்டதால், அவமானம் தாங்க முடியாமல் தற்கொலை செய்துகொண்டார். ஆக, தனியார் வங்கிகள், தனியார் நிதிநிறுவனங்களை அரசு ஒழுங்குபடுத்தவேண்டிய அவசர அவசியம் வந்துவிட்டது. மேலும், மாநில அரசின் வேளாண் கூட்டுறவு சங்கங்களிலும், அரசு வங்கிகளிலும் விவசாயிகள் கடன்பெற கடுமையான நிபந்தனைகள், நடைமுறைகள் இருப்பதால்தான், வட்டி அதிகமாக இருந்தாலும், இதுபோல கேட்டதும் கிடைக்கும் தனியார் நிறுவனங்களை விவசாயிகள் நாடுகிறார்கள். எனவே, அரசு வங்கிகளிலும், கூட்டுறவு சங்கங்களிலும் விவசாயிகள் கடன்பெறும் முறைகளை எளிமைப்படுத்த வேண்டும்.

இது ஒருபக்கம் இருக்க, பெரும் செல்வந்தரான விஜய்மல்லையா தொடர்ந்து அவரது நிறுவனங்களில் ஏற்பட்ட நஷ்டங்களால், 17 வங்கிகளுக்கு ரூ.9,091 கோடியே 40 லட்சம் கட்டவேண்டியதிருக்கிறது. இவர் டெல்லி மேல்-சபை உறுப்பினர். மார்ச் 1-ந் தேதி அவைக்கு வந்திருக்கிறார். இவ்வளவு தொகை கட்டவேண்டிய அவர், எல்லோருக்குமே டிமிக்கி கொடுத்துவிட்டு, மார்ச் 2-ந் தேதி டெல்லியில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு இங்கிலாந்து நாட்டில் உள்ள தனது பண்ணை வீட்டில் சுகமாக வாழ்ந்துகொண்டிருக்கிறார். அவரிடம் இந்த ரூ.9 ஆயிரம் கோடிக்கு மேலும் கட்டவேண்டிய பணத்தை வசூலிக்க என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்? என்பதுதான் நீதிமன்றம் மட்டுமல்ல, நாடு முழுவதும் கேட்கப்படும் கேள்வியாகும். சாதாரண ஏழை மக்கள் கடன்வாங்கினால் கியாரண்டி, சொத்து அடமானம் கேட்கும் வங்கிகள், இந்த ரூ.9 ஆயிரம் கோடி கடனுக்கும் இத்தகைய நடைமுறைகளைப் பின்பற்றினவா?, வங்கி அதிகாரிகள் ஏழை-எளிய மக்களுக்கு கடன் வழங்கும்போது பயன்படுத்திய அளவுகோலை பயன்படுத்தினார்களா? என்பதை வெளிப்படையாகத் தெரிவிக்கவேண்டும். வங்கிக்கடன் வழங்குவதில் எளியோருக்கு ஒரு நீதி, வலியோருக்கு ஒரு நீதி என்ற பாகுபாடு கூடாது.

Tuesday, March 15, 2016


தனி மனிதன் உருவாக்கிய காடு 16/03/2016

பழங்குடி இனத்தவர்களுக்கு இயல்பாகவே வனக் காதல் அதிகம். ஜாதவ் பயேங் என்பவருக்கும் அந்த காதல் இருந்தது. அவர்  சிறுவனாக இருந்த போது பிரம்மபுத்திரா நதியில் பெரிய அளவில் வெள்ளம் ஏற்பட்டது. இதில் அதிகம் பாதிக்கப்பட்டது மாஜூலி தீவு. பிரம்மபுத்திரா நதியின் மையத்தில் அமைந்து இருக்கும் ‘மாஜூலி’ தீவுதான், உலகின் மிகப்பெரிய ஆற்றுத் தீவாகும். இந்த தீவில் பாம்புகள் மடிந்ததற்கு காரணம் மரங்கள் இல்லாததுதான் என்பதை ஜாதவ் உணர்ந்தார். அப்போது அவரின் வயது 16.

1980-ல் வனத்துறையினர் அசாம் மாநிலத்தின் ஜோர்ஹாட் மாவட்டம் ‘கோகிலமுக்‘ என்ற இடத்தில் 200 ஹெக்டேர் பரப்பளவில் சமூக காடுகளை உருவாக்க முனைந்தார்கள். அந்த திட்டத்தில் தன்னையும் இணைத்துக் கொண்ட ஜாதவ் மற்ற தொழிலாளர்களோடு இணைந்து மரக்கன்றுகளை நட்டார். வேலை முடிந்ததும் மற்ற தொழிலாளர்கள் அவரவர் ஊருக்கு புறப்பட்டச் சென்று விட்டனர்.  லேசாக துளிர் விட்டு நிற்கும் மரக்கன்றுகளை அப்படியே விட்டு விட்டால், வாடிப்போய்... மரித்துவிடும் என்பதால் அந்த மரங்களைப் பார்த்து பராமரிக்க அனுமதி கேட்டார், ஜாதவ். வனத்துறையும் அனுமதி கொடுத்தது. அதன்பின் ஒருவர் கூட அந்த பக்கம் எட்டிப் பார்க்கவில்லை. சமூக காட்டின் மண்ணை வளப்படுத்துவதற்காக ஜாதவ் ஒரு யுக்தியை கையாண்டார். நமது மண்ணை மண்புழுக்கள் வளப்படுத்துவது போல், அசாமில் சிவப்பு நிற எறும்புகள் மண்ணை வளப்படுத்தும் உயிரினம். அதற்காக தனது ஊருக்குச் சென்று சிவப்பு நிற எறும்புகளை பெருமளவில் பிடித்து வந்து, மணல் திட்டில் விட்டார்.

30 வருடங்களாக எந்த பிரதிபலனும், எதிர்பார்க்காமல் தன்னந்தனியாக தனது குடும்பத்தினருடன் இணைந்து காடு வளர்ப்பதற்காக நகர வாழ்க்கையை விட்டு இந்த காட்டில் வாழத்தொடங்கினார். மாஜூலி தீவில் மரங்களால் ஆன சிறு வீட்டை ஏற்படுத்திக் கொண்டார். அதில் அவரின் மனைவி பினிதா பயேங்க். மகன்கள் சஞ்சய், சஞ்ஜீவ் மற்றும் மகள் மூன்முனி ஆகியோருடன் தற்போதும் வாழ்ந்து வருகிறார். தனது வருமானத்திற்காக 50 பசுமாடுகளை வளர்த்து வருகிறார். பாலின் மூலம் கிடைக்கும் வருமானத்தில் குடும்பத்தை நடத்தி வருகிறார். காலை 3.30 மணிக்கே எழுந்துவிடும். இவர் மாடுகளிடம் பால் கறந்து விற்ற பின் முழு நேரமும் காட்டைப் பராமரிக்கவே நேரத்தை செலவிட்டார். சிறிய உயிரினம் கூட வாழத் தகுதியற்றதாக இருந்த இந்த மணல் திட்டில், மரங்கள் பெருக பெருக பல உயிரினங்கள் வாழும் இடமாக மாறியது.

பக்கத்து காடுகளில் இருந்து வரும் புலிகள் அவரின் வளர்ப்பு ஆடுகளை உணவாக்கி கொண்டன. அப்படி இருந்தும் தனது காட்டில் விலங்குகள் வாழ வேண்டும் என்று நினைக்கிறார். இப்போது இவரின் காட்டில் 5 புலிகள், 3 காண்டா மிருகங்கள் நிரந்தரமாக வாழ்கின்றன. தனது 17-வது வயதில் தொடங்கி 51 வயது வரை மனித குலத்திற்கு தன்னலமற்ற சேவை செய்துள்ள ஜாதவை எவ்வளவு பாராட்டினாலும் தகும். ஆனால் இதை எதையும் காதில் வாங்காத ஜாதவ், ‘நான் உருவாக்கிய காட்டை வனத்துறையினர், நன்றாக பராமரிப்பதாக வாக்கு கொடுத்தால், நான் வேறு இடம் சென்று அங்கேயும் காடு வளர்ப்பில் ஈடுபட தயாராக உள்ளேன்’ என்கிறார், இந்த சாதனை மனிதர்.

ஒரு அரசாங்கம் செய்யத் தயங்கும் வேலையை தனிமனிதனாக இருந்து சாதித்த ஜாதவ் பயேங்கை வாழ்த்துவோம்.

Monday, March 14, 2016


பணத்தைக் கொண்டுபோகவே  முடியவில்லையே? 15/03/2016

தமிழகத்தில் 15-வது சட்டசபைக்கான தேர்தல் மே மாதம் 16-ந் தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் ஏப்ரல் 22-ந் தேதி தொடங்குகிறது. ஆனால், இந்த தேர்தல் அறிவிப்பு மார்ச் மாதம் 4-ந் தேதியே வெளியிடப்பட்டுவிட்டது. 4-ந் தேதி முதலே அதாவது, இந்த தேர்தல் தேதியை டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் அறிவித்ததில் இருந்தே, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிட்டது. 70 நாட்களுக்கு முன்பே தேர்தல் நடத்தைவிதிகள் அமலுக்கு வந்ததால், பல விதிகளின் அமலில் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தாலும், சில விதிகள் கஷ்டத்தையும் ஏற்படுத்துகின்றன. தேர்தலையொட்டி, ஆங்காங்கு சோதனை நடத்த சிறப்பு படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவர்கள் வாகனங்களில் செல்பவர்களை மடக்கிப்பிடித்து சோதனை நடத்துகிறார்கள். சோதனையில், யாராவது ஒருவர் ரூ.50 ஆயிரம் வரை கொண்டுபோனால், இந்த பறக்கும் படையினரும், கண்காணிப்பு படையினரும் அதற்கும் கணக்கு கேட்கிறார்கள். ரூ.50 ஆயிரத்துக்குமேல் பணம் இருந்தால் ஏ.டி.எம். ரசீதை காட்டுங்கள், இந்த பணம் உங்களுக்கு கிடைத்தற்கான ‘பில்’, அல்லது ‘ரசீதுகள்’, அல்லது ‘ஆதாரங்கள்’ ஏதாவது உள்ளதா?, எதற்காக கொண்டுபோகிறீர்கள்? என்று கேட்கிறார்கள். இதுபோல, வங்கிகளோ, நிதிநிறுவனங்களோ பணத்தை எடுத்துக் கொண்டுபோனால் கூட, அதற்கும் உரிய ஆவணங்கள் இருக்கிறதா? என்று சோதனை செய்கிறார்கள்.

சில நேரங்களில் அந்த இடத்தில் உடனே ஆதாரங்கள் எதையும் தாக்கல் செய்யமுடியவில்லை என்றால், அந்த பணத்தைக் கைப்பற்றி மேல் அதிகாரிகளிடம் ஒப்படைத்துவிடுகிறார்கள். உடனடியாக மாவட்ட வருவாய் அதிகாரியை அணுகி, இதற்கான அத்தாட்சிகளை தாக்கல் செய்தால்தான், பணத்தை திரும்ப பெறமுடியும். சில நேரங்களில் உரிய அத்தாட்சிகளை தாக்கல்செய்ய சற்று தாமதமானால் அரசு கருவூலத்தில் போய் அந்த பணத்தைக் கட்டிவிடுகிறார்கள். அதன்பிறகு உரிய ஆதாரத்தை காட்டினாலும், பணத்தை திரும்பப்பெற பலநாட்கள் ஆகிவிடும். இந்த பறக்கும்படை சோதனைகளால் நியாயமான வகையில் முக்கியமான செலவுகளுக்காகப் பணம்கொண்டு செல்பவர்களுக்கு மிகவும் சிக்கல் ஏற்படுகிறது.

இப்போதுள்ள பொருளாதார சூழ்நிலையில் ரூ.50 ஆயிரம் என்பது சாதாரணமாக ஆகும் செலவுகளுக்குத் தேவையான பணம்தான். குடும்பங்களில் திருமணங்களுக்கு 4 பவுன் நகைவாங்கவேண்டுமென்றால் கூட, ரூ.1 லட்சத்துக்குமேல் செலவாகும். இதுபோல, முக்கியமான செலவுகளுக்கு வீட்டிலுள்ள சேமிப்பை எடுத்துக்கொண்டு செல்பவர்களுக்கு உடனடியாக அந்த பணத்துக்கு ஆதாரமாக என்ன ரசீதை காட்டமுடியும்?. மேலும், வியாபாரிகளை எடுத்துக்கொண்டால், அன்றாடம் விற்பனையாகும் தொகையை வங்கியில் போடுவதில்லை. ஒவ்வொரு நாளும் விற்பனையாகும் தொகையை மொத்தமாக கையில் எடுத்துக்கொண்டுதான், மொத்த வியாபாரிகளிடம் போய் சரக்குளை வாங்குவார்கள். அந்த வகையில், ஒரு சிறிய கடையை எடுத்துக்கொண்டாலும், அன்றாடம் சரக்குகளை வாங்க ரூ.50 ஆயிரத்துக்குமேல் எடுத்துச்செல்லவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். இதுபோல, சிறிய தொழில்கள் செய்பவர்களெல்லாம் அவசரமாக பொருட்கள் வாங்க ரூ.50 ஆயிரத்துக்குமேல் கொண்டுபோவது தவிர்க்கமுடியாத ஒன்றாகும். இப்போதெல்லாம் பள்ளிக்கூடங்களில் மாணவர் சேர்க்கை நடந்துகொண்டிருக்கிறது. சில தனியார் பள்ளிக்கூடங்களில் எல்.கே.ஜி. மாணவர் சேர்க்கைக்குக்கூட ரூ.50 ஆயிரத்துக்குமேல் நன்கொடை கொடுக்க பணமாகத்தான் எடுத்துச்செல்ல வேண்டியதிருக்கிறது.

பணம் கொடுத்து ஓட்டுவாங்கும் அரசியல் கட்சிகளைக் கட்டுப்படுத்த நிச்சயமாக இந்த கட்டுப்பாடு தேவைதான். ஆனால், அரசியல் கட்சிகள் கொண்டுசெல்லும் பணத்துக்கும், பொதுமக்களும், வியாபாரிகளும் கொண்டுசெல்லும் பணத்துக்கும் நிச்சயமாக வித்தியாசம் இருக்கிறது. அது அதிகாரிகளுக்கும் நன்றாகத்தெரியும். தேர்தலில் பண நடமாட்டத்தை தடுக்கிறோம் என்ற பெயரில், பொதுமக்களும், வியாபாரிகளும் இன்னல்களுக்கு ஆளாவது என்பது ஏற்புடையதல்ல. எனவே, தேர்தல் கமிஷன் இந்த விஷயத்தில் பணத்தை கொண்டுபோகிற ஆட்கள் யார்?, என்ன காரணங்களுக்காக கொண்டுபோகிறார்கள்? என்று பார்த்து நடவடிக்கை எடுக்கலாம். பொதுமக்களும் கூடுமான வரையில், பணப்பரிமாற்றங்களை வங்கிப்பரிமாற்றங்களாகவே வைத்துக்கொண்டால் எந்த பிரச்சினைக்கும் இடமிருக்காது.

ஸ்கேட்டிங் விளையாட்டில் 6 1/2 வயது சிறுமி சாதனை 14/03/2016
10½ கிலோ மீட்டர் தூரத்தை 41.3 நிமிடங்களில் கடந்தார்

கோவை,மார்ச்.14-
கோவையில் நடைபெற்ற ஸ்கேட்டிங் விளையாட்டில் 6½ வயது சிறுமி, 10½ கிலோ மீட்டர் தூரத்தை 41.3 நிமிடங்களில் கடந்து சாதனை படைத்தார்.

கோவை சிறுமி சாதனை

கோவையை அடுத்த பி.என்.புதூரை சேர்ந்தவர் கமலக்கண்ணன். இவருடைய மகள் கே.தர்ஷினி (வயது 6½). இவர் ஸ்கேட்டிங் விளையாட்டில் சாதனை செய்யும் நிகழ்ச்சி, கோவை ரேஸ்கோர்சில் நேற்று காலை நடைபெற்றது. அப்போது அவர், 10½ கிலோ மீட்டர் தூரத்தை, 41.3 நிமிடங்களில் கடந்து சாதனை படைத்தார். அதைத்தொடர்ந்து காஸ்மோ பாலிட்டன் கிளப் வளாகத்தில் சிறுமிக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இதற்கு தமிழ்நாடு ஸ்பீடு ஸ்கேட்டிங் சங்க பொதுச்செயலாளர் முருகானந்தம் தலைமை தாங்கினார்.

விழாவில் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நிறுவன நிர்வாக ஆசிரியரும், ஆசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நிறுவன இந்திய பிரதிநிதியுமான மன்மோகன்ரவாத் கலந்து கொண்டு, சிறுமி கே.தர்ஷினியின் இந்த சாதனை, இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் மற்றும் ஆசியா புக் ஆப் ரெக்கார்ட்சில் இடம் பெற்றுள்ளது என்று அறிவித்து, அதற்கான சான்றிதழ் வழங்கினார்.

கின்னஸ் சாதனை இலக்கு

இது குறித்து சிறுமி கே.தர்ஷினி கூறியதாவது:-
எல்.கே.ஜி. முதல் ஸ்கேட்டிங் விளையாட்டில் ஈடுபட்டு வருகிறேன். இதுவரை மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று பதக்கம் வென்றுள்ளேன். தற்போது ஸ்கேட்டிங்கில் 10½ கிலோ மீட்டர் தூரத்தை, 41.3 நிமிடங்களில் கடந்து, இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்சில் இடம் பிடித்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. எனக்கு ஊக்கம் அளித்து வரும் பெற்றோர், பயிற்சியாளர்கள் மற்றும் பள்ளி நிர்வாகிகளுக்கு என்னுடைய நன்றி தெரிவித்து கொள்கிறேன். கின்னஸ் சாதனை நிகழ்த்துவது எனது லட்சியம். இவ்வாறு அவர் கூறினார்.

சிறுமி கே.தர்ஷினி கணுவாயில் உள்ள யுவபாரதி பப்ளிக் பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர், ஸ்கேட்டிங் மட்டுமின்றி நீச்சல், ஓவியம் வரைவதிலும் திறமை வாய்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சுற்றுலாவை முடக்கும் தீவிரவாதம் 14/03/2016

சமீபத்தில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் நான்கில் ஒருவர் உள்ளூர் மற்றும் உலக பாதுகாப்பு காரணமாகவும், தொற்று நோய் காரணமாகவும் தங்களின் சுற்றுலா திட்டங்களை மாற்றிக் கொள்கிறார்கள் என்பது தெரியவந்துள்ளது. உலகம் முழுவதும் 2 ஆயிரம் பேர்களிடம் எடுக்கப்பட்ட இந்த ஆய்வில் 77 சதவீதம் பேர் தீவிரவாத செயல்பாடு அதிகம் இருப்பதால் சுற்றுலா செல்வதை தவிர்ப்பதாக குறிப்பிட்டு இருந்தார்கள். அந்த இடங்களில் மேற்கொள்ளப்படும் ராணுவ கெடுபிடிகள், சண்டைகள் காரணமாக செல்ல பிடிக்கவில்லை என்று அவர்களில் 59 சதவீத பேர் தெரிவித்து இருந்தார்கள்.   

தொற்று நோய்கள் காரணமாக 46 சதவீத பேரும், தொடர்ந்து குற்றங்கள் நடைபெறும் இடங்களுக்கு செல்வதில்லை என்று 25 சதவீத பேரும், அரசியல் காரணமாக 25 சதவீத பேரும் சுற்றுலா செல்வதில்லை என்று குறிப்பிட்டிருக்கிறார்கள்.

ஆஸ்திரேலியாவும், நியூசிலாந்தும் சுற்றுலா செல்ல விரும்பும் நாடுகளாக 62 சதவீத பேர் கூறி இருக்கிறார்கள். 10 சதவீதக்கும் குறைவானவர்கள் வடக்கு, மேற்கு மற்றும் மத்திய ஆப்பிரிக்க நாடுகளுக்கும், 20 சதவீதக்கும் குறைவானவர்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்கும் செல்ல விரும்புவதாக சொல்லி இருக்கிறார்கள்.

சுற்றுலாவுக்கான திட்டமிடல்களையும், எங்கு செல்வது என்ற முடிவையும் எதன் அடிப்படையில் எடுக்கிறீர்கள் என்ற கேள்விக்கு, அங்கீகாரம் பெற்ற பயண ஆலோசகர்கள் தரும் தகவல் அடிப்படையில் 55 சதவீத பேரும், சுற்றுலா பத்திரிகைகள், பயணக் கட்டுரைகள் தரும் தகவல்கள் அடிப்படையில் 36 சதவீத பேரும் முடிவு எடுப்பதாக சொல்லி இருக்கிறார்கள். சுற்றுலா தொடர்பான ஆலோசனைகளை நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களிடம் இருந்து 34 சதவீத பேரும், சமூக வலைதளங்களில் இருந்து 17 சதவீத பேரும் பெறுவதாக கூறி இருக்கிறார்கள்.

தீவிரவாதம்  காலூன்றக்கூடாது! 14/03/2016

தமிழ்நாட்டில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவுசெய்து காத்திருப்போரின்  எண்ணிக்கை       87 லட்சத்தை தாண்டிவிட்டது. வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்யாதவர்களின் எண்ணிக்கையும் சேர்த்தால், தமிழ்நாட்டில் ஒரு கோடியே 35 லட்சம் பேர் வேலைவாய்ப்பு இல்லாமல் தவிக்கிறார்கள். திறன்சாராத உடல்உழைப்பு வேலைகள் ஓரளவு தமிழர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்துக் கொண்டிருந்தது. ஆனால், இப்போது வெளிமாநிலங்களிலிருந்து ஏராளமானவர்கள் இந்த வேலைவாய்ப்புகளை பெறுவதற்காக, தமிழ்நாட்டிற்கு வந்து வேலையையும் பெற்றுவிடுகிறார்கள். அவர்கள் மாநிலத்தை ஒப்பிடும்போது, இங்கு கிடைக்கும் சம்பளம் அவர்களுக்கு அதிகமாக இருக்கிறது. ஆனால், தமிழ்நாட்டில் வழங்கும் சம்பளத்தை கருத்தில்கொண்டால், இங்கு அவர்களை வேலையில் அமர்த்துபவர்கள் கொடுக்கும் சம்பளம் தமிழக தொழிலாளர்களுக்கு வழங்கும் சம்பளத்தைவிட குறைவானது என்பதால், அவர்களையே பெரும்பாலும் வேலைக்கு அமர்த்திக்கொள்கிறார்கள்.

சமீபத்தில் எடுத்த ஒரு கணக்குப்படி, தமிழ்நாட்டில் 10 லட்சத்து 67 ஆயிரம் வெளிமாநில தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள். இவர்களில், 27 சதவீதம் பேர் பல்வேறு பொறியியல் தொழிற்கூடங்கள் போன்ற உற்பத்திப்பிரிவுகளில் வேலைபார்க்கிறார்கள். 14 சதவீதம் பேர் ஜவுளி தொழிற்கூடங்களிலும், 11.41 சதவீதம் பேர் கட்டுமான தொழில்களிலும் வேலைபார்க்கிறார்கள். இதுதவிர, ஓட்டல்களில் வேலை பார்ப்போர், காவல்பணியில் ஈடுபடுபவர்கள் என்று ஏராளமானவர்கள் இருக்கிறார்கள். இவர்கள் பெரும்பாலும் மேற்குவங்காளம், ஒடிசா, பீகார், அசாம், ஜார்கண்ட், உத்தரபிரதேசம் போன்ற பல மாநிலங்களிலிருந்து வேலைக்கு வருகிறார்கள். இன்றும் சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்துக்கு சென்றால், தினமும் வெளிமாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டுக்கு சென்றால் வேலைகிடைக்கும் என்ற ஏதோ ஒரு நம்பிக்கையை மனதில் வைத்து அலை அலையாய் வருவதைப்பார்க்க முடியும்.

ஒரு காலத்தில் தமிழ்நாட்டில் உள்ள கிராமங்களில், அரபு நாடுகளில் வேலைக்கு சென்றவர் என்றால், அந்த குடும்பத்துக்கு தனி மவுசு இருப்பதுபோல, வடமாநிலங்களில் உள்ள கிராமங்களில் தமிழ்நாட்டுக்கு வேலைக்கு சென்றவர்களின் குடும்பங்களுக்கு தனி மவுசு உள்ளதாக கூறுகின்றனர். இவர்களெல்லாம் யார்?, இவர்களுக்கு என்ன பின்னணி இருக்கிறது?, அங்கு ஏதாவது குற்றவழக்குகளில் ஈடுபட்டு தப்பித்து வந்திருக்கிறார்களா? என்பது போன்ற எந்த விவரமும் யாருக்கும் சரியாக தெரிவதில்லை. சமீபத்தில் சென்னையில் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த சுரேந்திரயாதவ் என்ற தீவிரவாதியை ஸ்ரீபெரும்புதூர் அருகே தண்டலத்தில் தமிழக ‘கியூ’ பிராஞ்சு போலீசார் கைது செய்திருக்கிறார்கள்.    32   வயதான   இந்த  தீவிரவாதி, 6 மாதங்களுக்கு முன்பு அந்த மாநிலத்தில் கண்ணிவெடி வைத்து 7 போலீசார் கொல்லப்பட்டதற்கு முக்கிய காரணமாக இருந்தவன். ‘மாவோயிஸ்டு’ இயக்கத்தின் மண்டல தளபதியாக செயல்பட்டுவந்தவன். பீகார், சத்தீஷ்கார், ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் 17 கொலை வழக்குகள் இவன் மீது இருக்கிறது. சத்தீஷ்கார் மாநிலத்தில் இவனை பிடித்து கொடுப்பவர்களுக்கு 25 லட்ச ரூபாய் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டிருந்தது. சத்தீஷ்கார், ஜார்கண்ட் மாநில போலீசார் இந்த தீவிரவாதியை வலைவீசி தேடிவந்தனர். ஆனால், எல்லோருக்கும் டிமிக்கி கொடுத்துவிட்டு தண்டலத்தில் வடஇந்திய தொழிலாளர்களுடன் பதுங்கியிருந்ததை, கியூ பிராஞ்சு போலீசார் கண்டுபிடித்து கைதுசெய்தது, பெரிய நிம்மதி பெருமூச்சை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே, மாவோயிஸ்டு தீவிரவாதிகள் தமிழ்நாட்டில் வேரூன்ற திட்டமிட்டிருக்கும் நிலையில், இப்படி ஒரு தீவிரவாதி தமிழக சட்டமன்ற தேர்தலை சீர்குலைக்கும் திட்டத்துடன் பதுங்கியிருந்தான் என்ற தகவலும் வெளிவருகிறது. அமைதி பூங்காவாக திகழும் தமிழ்நாட்டில், தீவிரவாதம் எந்தவகையிலும் காலூன்றிவிடக்கூடாது. எனவே, தமிழக போலீசார் இந்த விஷயத்தில் மிகத்தீவிரமாக கண்காணிப்பு பணிகளை முடுக்கிவிடவேண்டும். வடமாநில சகோதரர்கள் வேலைபார்க்க வருவது சரிதான். வந்தாரை வாழவைப்பதுதான் தமிழ்நாடு. ஆனால், அவர்கள் ஒவ்வொருவரையும் அவர்கள் பின்னணி குறித்து ஆராய எந்தெந்த வகையில், என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்பதை காவல்துறையும், தமிழக அரசும் தீவிரமாக ஆராய்ந்து செயல்படுத்த வேண்டும்.

112 வயது இஸ்ரேலியர், உலகின் வயதான மனிதர்
கின்னஸ் சாதனை படைத்தார்

வாஷிங்டன், மார்ச்.13-

இஸ்ரேல் நாட்டில் வசித்து வருபவர் இஸ்ரேல் கிறிஸ்டல். இவர் போலந்து நாட்டில் ஜார்னவ் நகர் அருகே 1903-ம் ஆண்டு, செப்டம்பர் 15-ந் தேதி பிறந்தவர். 2 உலகப் போர்களை கண்டிருக்கிறார். இரண்டாம் உலகப் போரின்போது, ஆஸ்விட்ச் நகரில் நாஜிக்கள் சித்ரவதை முகாமில் உயிர் தப்பியவர் ஆவார். ஆனால் இவரது மனைவி சாஜா அதில் உயிரிழந்தார். ஜெர்மனி கையகப்படுத்தியபோது, லூட்ஸ் நகரில் அவரது 2 பிள்ளைகளும் உயிரிழந்தனர். 1950-ம் ஆண்டு கிறிஸ்டல் தனது 2-வது மனைவியுடன் இஸ்ரேல் நாட்டில் குடியேறினார். நேற்று முன்தினம் (வெள்ளிக்கிழமை) நிலவரப்படி அவரது வயது 112 வருடங்கள் 178 நாட்கள். இதனால் உலகிலேயே அதிக வயதான மனிதர் என்று அவர் கின்னஸ் சாதனை படைத்தார். அவருக்கு வீடு தேடிச்சென்று கின்னஸ் அதிகாரிகள் சான்றிதழ் வழங்கினர்.

அந்த நிறுவன அதிகாரிகளிடம் பேசிய அவர், “நான் இத்தனை நீண்ட காலம் வாழுவதின் ரகசியம் என்ன என்று எனக்கு தெரியவில்லை. எல்லாமே, நமக்கு மேலே உள்ள ஒரு சக்தியால்தான் நடக்கிறது என்று நான் நம்புகிறவன். அதற்கு காரணம் என்ன என்று நம்மால் ஒருபோதும் தெரிந்து கொள்ள முடியாது. என்னை விட அழகான, வலிமையான, சிறப்பான மனிதர்கள் வாழ்ந்திருக்கிறார்கள். ஆனால் அவர்கள் யாரும் இப்போது இல்லை” என கூறினார்.

இதற்கு முன் உலகிலேயே வயதான மனிதர் என்ற பெயரை பெற்றிருந்தவர் ஜப்பானை சேர்ந்த யாசுதரோ கொய்டே (112 வயது, 312 நாட்கள்). இவர் ஜனவரி மாதம் மரணம் அடைந்தார். அதைத் தொடர்ந்தே கிறிஸ்டல் உலகின் வயதான மனிதர் பெயரை பெறுகிறார்.

ஆயுளை குறைக்கும் ஆஸ்பெஸ்டாஸ் 13/03/2016

மலிவான விலையில் உறுதியான ஒரு கூரையை வாங்க முடியுமா? அது ஆஸ்பெஸ்டாஸாக இருந்தால் முடியும். ஆஸ்பெஸ்டாஸ் எளிதில் தீப்பிடிக்காது என்பதற்காகவே வாகனங்களிலும், கப்பல்களிலும் கூட பயன்படுத்தப்படுகிறது. ‘சர்பன்டைன்‘, ‘ஆம்பிபோல்‘ என்ற இரண்டு விதமான ஆஸ்பெஸ்டாஸ்கள் உள்ளன. ‘சர்பன்டைன்‘ வகையில் ‘கிரைசோலைட்‘  என்ற வெண்மை நிற ஆஸ்பெஸ்டாஸ்தான் உலக அளவில் 95 சதவீதம் பயன்படுத்தப்படுகிறது. உறுதி மட்டுமல்லாமல் வெப்பத்தை தாங்கும் திறனும் இருப்பதால் கட்டுமான பணிகள், மின்சாதனங்கள் உள்பட 3 ஆயிரம் வேலைகளில் இது பயன்படுத்தப்படுகிறது.

இந்த ஆஸ்பெஸ்டாஸ் எப்படி மனித ஆயுளை குறைக்கிறது என்று பார்த்தால் ஆச்சரியமாக இருக்கும். ஆஸ்பெஸ்டாஸ் இழைகள் கண்ணுக்கு தெரியாத மிக நுண்துகள்களாக மாறக்கூடியவை. இந்த துகள்கள் கண்ணுக்கு தெரியாது. மைக்ரோஸ்கோப் மூலம் பார்த்தால் மட்டுமே தெரியும். இவை எப்போதும் காற்றில் கலந்தே இருக்கும். ஆஸ்பெஸ்டாஸ், உற்பத்தி செய்யும் இடத்தில் மட்டுமல்ல, குப்பையில் தூக்கி எறியும்வரை சுற்றுச்சூழலை தொடர்ந்து மாசுப்படுத்திக்கொண்டே இருக்கிறது. இந்த துகள்கள் காற்றில் கலந்து விட்டால், வேறு எங்கும் தங்குவதில்லை. இதனால் சுவாசித்தலின் போது மிக சுலபமாக மனித நுரையீரலுக்குள் புகுந்து தங்கிக்கொள்கிறது.  விபத்துக்களில் உயிரிழப்பவர்களை விட, ஆஸ்பெஸ்டாஸ் துகள்கள் பாதிப்பால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகம். இங்கிலாந்தில் உள்ள ஆஸ்பெஸ்டாஸ் உற்பத்தி செய்யும் இடத்தில் உருவாகும் துகள்களை நீக்குவதற்காகவே அனுமதி பெற்ற ஒப்பந்தக்காரர்கள் இருக்கிறார்கள். அமெரிக்காவில் இந்த துகள்களை நீக்க விண்வெளி வீரர்களை போன்ற பாதுகாப்பு கவச உடை, சிறப்பு சுவாச வசதி பெற்று துகள்களை நீக்குகிறார்கள்.

 இதன் பாதிப்பு எப்படி தெரியும்? மூச்சிறைப்பு, நெஞ்சிறுக்கம், வறட்டு இருமல், விரல்கள் ஊனமடைதல் ஆகியவை இந்தநோயின் அறிகுறிகள். நுரையீரல் சுவர்கள் புண்ணாகித்தடித்துப்போகும். இதற்கு மருந்தே கிடையாது. இது மார்புச்சளி, இதயம் செயலிழத்தல், நுரையீரல் புற்றுநோய் போன்றவற்றை ஏற்படுத்தும். பாதிக்கப்பட்டவர்கள் 18 முதல் 24 மாதங்களுக்குள் உயிரிழப்பார்கள். சுவாசத்தில் ஊடுருவும் இந்த துகள்கள் உடலில் நுழைந்து ரத்த ஓட்டத்தில் கலந்து சிறுநீரகத்தையும் பாதிப்படையச் செய்கிறது.

2000-ம் ஆண்டு வரை உலகில்  அதிக அளவு உற்பத்தியையும், ஏற்றுமதியையும் செய்து வந்த கனடா, பிரான்ஸ் போன்ற நாடுகள் தற்போது ஆஸ்பெஸ்டாசுக்கு தடைபோட்டு விட்டன. இவற்றை தொடர்ந்து சுவிட்சர்லாந்து, டென்மார்க், ஆஸ்திரியா, ஐக்கிய அரபு நாடுகள், போலந்து, பிரிட்டன், ஐஸ்லாந்து, சுவீடன், நெதர்லாந்து போன்ற 50-க்கும் மேற்பட்ட நாடுகள் ஆஸ்பெஸ்டாசுக்கு தடைவிதித்து விட்டன. இங்கு இன்னம் தடை வராவிட்டாலும், ஆஸ்பெஸ்டாஸ் உபயோகிக்காமல் இருப்பது நல்லது. வேறுவழியின்றி பயன்படுத்தித்தான் ஆக வேண்டும் என்ற கட்டாயம் வரும்போது, அதன் மீது நன்றாக பெயின்ட் அடித்துவிடுங்கள். எப்போதும் ஈரத்தன்மையோடு இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள். இவற்றால் பெரிய அளவில் நன்மை இல்லையென்றாலும், ஓரளவு பாதிப்பை குறைக்க முடியும். புதிய ஆஸ்பெஸ்டாஸை விட பழைய ஆஸ்பெஸ்டாஸில்தான் பாதிப்பு பல மடங்கு அதிகம்.

மாசி மாத நெல்லிக்கனியின் சிறப்பு 12/03/2016

நெல்லிக்கனியை அதியமானுக்கு அவ்வை கொடுத்த கனி என்பர். நெல்லிக்கனி மார்கழி, தை மாதங்களில் நன்றாக விளைந்திருக்கும். அதன் பிறகு நான்கு மாதங்கள் வரை விற்பனைக்கு வரும். அதன் பிறகு வராது. மாசி மாதத்தில் வரும் நெல்லியை சிறப்பித்துச் சொல்வர்.

இதை சர்வரோக நிவாரணி என்று சொல்லலாம். இது மலமிளக்கி. தாகத்தை தணிக்க வல்லது. இதயத்திற்கு நன்மை தரும். நெல்லிக்காயை கோடைக்காலத்தில் ஏற்படும் பித்த அதிகரிப்பை தணிக்க பயன்படுத்தலாம்.

நெல்லிக்கனி போதிய அளவு கிடைக்காவிட்டால் நெல்லிக்கனி கிடைக்கும் போது நெல்லி பானம் தயாரித்து வைத்துக் கொள்ளலாம். இதற்கு காய்ந்த நெல்லிக்கனிகளை சுத்தம் செய்து கொட்டையை எடுத்து விட்டு இரவில் நீரில் ஊற வைக்க வேண்டும். மண்பாணை அல்லது கண்ணாடி பாத்திரம் ஊற வைப்பதற்கு ஏற்றது.

மறுநாள் காலையில் ஊறிய நீரை ஒரு துணியில் வடிகட்டி கொஞ்சம் உப்பு சேர்த்து குடிக்கலாம். சிலருக்கு கோடை கொடுமையாக இருக்கும். பித்தம் அதிகமாகும். சிலருக்கு பசி எடுக்காது. தண்ணீர் அடிக்கடி குடிப்பார்கள். இந்த பிரச்சினைகளை தணிக்க மேற்கூறிய நெல்லி பானத்தை குடிக்கலாம்.

நெல்லிக்கனியை போல வைட்டமின் சி நிறைந்த கனி வேறு இல்லை. ஆரஞ்சு சாற்றை விட 20 மடங்கு சக்தி வாய்ந்தது. ஒரு நெல்லிக்கனி ஒன்றரை ஆரஞ்சு பழத்தில் இருந்து கிடைக்கக் கூடிய சி வைட்டமினை தருகிறது. இந்திய மக்கள் தொகையில் பெரும்பாலானவர்களுக்கு வைட்டமின் சி குறைவு. இதனாலேயே நோய்கள் தொற்றுகின்றன.

நெல்லிக்கனியை தொடர்ந்து உண்டு வருவதால் நோய் தாக்குதலை தவிர்க்கலாம். நெல்லிக் கனி ஒரு முக்கியமான பழ உணவு. இது மருந்தாகவும் இருப்பதால் இதனை தவிர்க்காமல் உண்பது நல்லது.

அரசியலில்  இதெல்லாம் சகஜமப்பா...! 12/03/2016

வருகிற ஏப்ரல் 4-ந் தேதி முதல் மே 16-ந் தேதி வரை மேற்குவங்காளம், அசாம், தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடக்கிறது. மேற்குவங்காளத்தில் ஏப்ரல் 4, 11, 17, 21, 25, 30, மே 5 ஆகிய தேதிகளில் நடக்கிறது. அசாம் மாநிலத்தில் ஏப்ரல் 4, 11 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக நடக்கிறது. ஏனெனில், இந்த மாநிலங்களில் தேர்தல் நேரங்களில் வன்முறை வெடிக்கலாம் என்பதற்காக பாதுகாப்பு ஏற்பாடுகளில் தீவிர கவனம் செலுத்தவேண்டிய நிலை இருக்கிறது. ஆனால், பாரதத்தாயின் செல்ல மகள்களான தமிழ்த்தாயும், கேரள அம்மேயும் குடியிருக்கும் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரள மாநிலங்கள் எப்போதுமே அமைதி தவழும் மாநிலங்களாகும். எனவே, இந்த மாநிலங்களில் மட்டும் மே 16-ந் தேதி ஒரே நாளில் தேர்தல் நடத்தி முடிக்கப்படும் என்பது நிச்சயமாக பெருமைப்படத்தக்க விஷயமாகும்.

பொதுவாக, தேர்தல் என்றாலே, நிரந்தர நண்பர்களும் இல்லை, நிரந்தர எதிரிகளும் இல்லை என்ற வகையில், நேற்று வரை ஒரு கூட்டணியில் அங்கம் வகித்தவர்கள், இன்று அதற்கு நேர் எதிர் போவது வழக்கமான ஒன்றுதான். ஆனால், காங்கிரஸ் கட்சியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியும் கொள்கை ரீதியாகவே இருவேறு திசையில் நிற்பவர்கள். கேரளாவை எடுத்துக் கொண்டால், 1970-களிலேயே கூட்டணி அரசியலுக்கு வித்திட்டது இந்த மாநிலம்தான். இங்கு எப்போதுமே காங்கிரஸ் தலைமை யிலான ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணிக்கும் இடையில்தான் போட்டியிருக்கும். இருவரும் மாறி மாறித்தான் ஆட்சியமைத்து கொண்டிருப் பார்கள். இப்போது முதல் முறையாக பா.ஜ.க.வும் களத்தில் இறங்கியிருக்கிறது. ஆக, காங்கிரசும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியும் நீயா?, நானா? என்ற வகையிலேயே கேரளாவில் இவ்வளவு நாளும் மட்டுமல்லாமல், இப்போதும் தேர்தல் களத்தில் நிற்கிறது.

ஆனால், அதே காங்கிரஸ் கட்சியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியும் மேற்குவங்காளத்தில் மட்டும் கைகோர்க்கும் நிலையை பார்க்கும்போது, “அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா” என்று சொல்ல வேண்டியிருக் கிறது. மேற்குவங்காளத்தில் இதுவரை யாராலும் வீழ்த்த முடியாது என்ற வகையில்தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கோலோச்சிக் கொண்டிருந்தது. ஆனால், கடந்த சட்டமன்ற தேர்தலில் இந்த வரலாற்றையே மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி புரட்டிப் போட்டுவிட்டது. கடந்த சட்டசபை தேர்தலில் மொத்தம் உள்ள 294 இடங்களில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 184 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 42 இடங்களிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி 40 இடங்களிலும் வெற்றி பெற்றிருந்தது. ஓட்டு சதவீத எண்ணிக்கையை பார்த்தால், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 39.8 சதவீத வாக்குகளையும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி 30.08 சதவீதத்தையும், காங்கிரஸ் கட்சி 8.91 சதவீத வாக்குகளையும் பெற்றிருந்தது. எதிரிக்கு எதிரி நண்பன் என்ற மந்திரத்தை இந்த தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியும், காங்கிரஸ் கட்சியும் கையில் எடுத்துக் கொண்டன. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை எதிர்க்க, மார்க்சிஸ்டும், காங்கிரசும் கூட்டணி வைக்கவில்லை. ஆனால், உடன்பாடு வைத்திருக்கிறோம் என்று இரு தரப்பிலும் செயல்கள் நடக்கிறது. கூட்டணி என்றால் என்ன?, உடன்பாடு என்றால் என்ன?. ஒருவர் நிற்கும் தொகுதியில் அடுத்தவர் நிற்காமல் ஒருவருக் கொருவர் ஆதரவாக இருப்பதுதானே?. இப்போது 294 தொகுதிகளில் மார்க்சிஸ்ட் கட்சி 116 தொகுதிகளுக்கு மட்டுமே வேட்பாளர்களை அறிவித்துள்ளது. ஆனால், ‘ஒரேமேடையில் ஏறி பிரசாரம் செய்யமாட்டோம்’ என்று மட்டும் சப்பைக்கட்டு கட்டியிருக்கிறார்கள். கேரளாவில் விரோதிகளாகவும், மேற்குவங்காளத்தில் நண்பர்களாகவும் காங்கிரசும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியும் களம் இறங்குவதுதான், அரசியல் அரங்கில் இப்போது பேச்சாக இருக்கிறது.

தர்மபுரி பஸ் எரிப்பில் 3 மாணவிகள் பலி 
அ.தி.மு.க.வினர் 3 பேரின் தூக்கு தண்டனை ரத்து 12/03/2016

ஆயுள் தண்டனையாக குறைப்பு

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு

3 மாணவிகள்  பலியான  தர்மபுரி  பஸ் எரிப்பு வழக்கில், அ.தி.மு.க.வினர்  3 பேருக்கு    விதிக்கப்பட்ட   தூக்கு  தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து சுப்ரீம் கோர்ட்டு நேற்று தீர்ப்பு கூறியது.

புதுடெல்லி, மார்ச்.12-<p></p>கொடைக்கானல், ‘பிளசன்ட் ஸ்டே’ ஓட்டலுக்கு விதியை மீறி சலுகை அளித்த வழக்கில் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து, கடந்த 2000-ம் ஆண்டு பிப்ரவரி 2-ந் தேதி சென்னை தனிக்கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

3 மாணவிகள் பலி

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் அ.தி.மு.க.வினர் போராட்டங்களில் ஈடுபட்டனர். அப்போது, தர்மபுரியை அடுத்த இலக்கியம்பட்டி அருகே கோவை வேளாண் பல்கலைக்கழக மாணவ- மாணவிகள் பயணம் செய்த பஸ்சை, அ.தி. மு.க.வினர் தீ வைத்து கொளுத்தினர். இந்த சம்பவத்தில் சென்னையைச் சேர்ந்த ஹேமலதா, நாமக்கல்லைச் சேர்ந்த கோகிலவாணி, விருத்தாசலத்தைச் சேர்ந்த காயத்ரி ஆகிய 3 மாணவிகள் தீயில் கருகி பலி ஆனார்கள்.

 3 பேருக்கு தூக்கு தண்டனை.
இந்த வழக்கை விசாரித்த சேலம் கோர்ட்டு முனியப்பன், நெடுஞ்செழியன், மாது என்ற ரவீந்திரன் ஆகியோருக்கு தூக்கு தண்டனையும், 25 பேருக்கு தலா 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து 2007-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தீர்ப்பு கூறியது. அதே ஆண்டு டிசம்பர் மாதம் சென்னை ஐகோர்ட்டு இந்த தண்டனையை உறுதி செய்தது.

குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. கடந்த 2010-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் இந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, குற்றவாளிகள் 3 பேருக்கும் விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை உறுதி செய்து தீர்ப்பு வழங்கியது.

மறுஆய்வு மனு தாக்கல் இதைத்தொடர்ந்து முனியப்பன், நெடுஞ்செழியன் மாது என்ற ரவீந்திரன் ஆகியோர் சுப்ரீம் கோர்ட்டில் மறுஆய்வு மனு தாக்கல் செய்தனர். அதில், “இந்த வழக்கில் 2 நீதிபதிகள் அடங்கிய அமர்வு தூக்கு தண்டனை வழங்கி இருக்கிறது. 2 நீதிபதிகள் அடங்கிய அமர்வு தூக்கு தண்டனை குறித்து முடிவெடுக்க முடியாது. 5 பேர் கொண்ட அமர்வு இந்த வழக்கை விசாரித்து உரிய தீர்ப்பு வழங்க வேண்டும். மேலும் மறுஆய்வு மனு மீது திறந்தவெளி விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும். எங்களுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை குறைக்க வேண்டும்” என்று கூறி இருந்தனர்.

விசாரணை

இந்த மறுஆய்வு மனுவை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், அருண் மிஸ்ரா, பிரபுல்ல சி பந்த் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது.மூத்த வக்கீல்கள் நாகேஸ்வர ராவ் மற்றும் சுசில் குமார் ஆகியோர் குற்றவாளிகள் தரப்பில் ஆஜர் ஆனார்கள். குற்றவாளிகள் தரப்பில் முன்வைத்த வாதத்தில், “இந்த சம்பவம் திட்டமிட்டு நடத்தப்பட்டது அல்ல. அந்த பகுதியில் கலவரம் ஏற்பட்டபோது அதன் காரணமாக எதிர்பாராதவிதமாக நடைபெற்றதாகும். எனவே 3 பேருக்கும் மரண தண்டனை என்பது அதிகபட்ச தண்டனை. இதனை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும்” என்று கூறப்பட்டது. மேலும், ஆயுள் தண்டனை குறித்து சுப்ரீம் கோர்ட்டின் பல்வேறு தீர்ப்புகளில் அளிக்கப்பட்ட விளக்கங்கள் அப்போது முன்வைக்கப்பட்டன. உதாரணத்துக்கு ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்ட பிறகு, ஆயுள் தண்டனையின் காலஅளவு என்ன என்பது பற்றியும், குற்றவாளிகளை மாநில அரசு விடுதலை செய்வது குறித்து எழுந்த வாதங்கள் பற்றியும் குறிப்பிடப்பட்டது. 

தமிழக அரசு வக்கீல் வாதம். தமிழக அரசின் சார்பில் வக்கீல் யோகேஷ் கன்னா ஆஜர் ஆனார். அவர் தன்னுடைய வாதத்தின் போது கூறியதாவது:- இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே வழங்கிய தீர்ப்பில், குற்றத்தில் இவர்களின் செயல்பாடுகள் அனைத்து வகையிலும் தண்டனைக்கு உரியதாகவே இருந்துள்ளதாக கூறி உள்ளது. அந்த தண்டனை என்பது தூக்கு தண்டனையா? அல்லது ஆயுள் தண்டனையா? என்பதை அரிதிலும் அரிதான கோட்பாட்டின் அடிப்படையில் பரிசீலித்து இந்த குற்றத்துக்கு உரிய தண்டனையை வழங்க வேண்டும். இந்த வழக்கு மறுஆய்வுக்கான பரிசீலனைக்கு ஏற்புடையது அல்ல. எனவே மறுஆய்வு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும். இவ்வாறு யோகேஷ் கன்னா கூறினார்.

ஆயுள் தண்டனையாக குறைப்பு.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கினார்கள்.

நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறி இருப்பதாவது:-

அரசியல் தலைவர் ஒருவருக்கு தண்டனை விதிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நடந்த கலவரத்தின் போது, பொது சொத்துகளுக்கு நாசம் விளைவிக்கும் வகையில் நடந்த சம்பவம் இது. இந்த கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்கள், குற்றவாளிகளுக்கு எந்த வகையிலும் தொடர்பு இல்லாதவர்கள். எனவே இதனை திட்டமிட்டு செய்த செயலாக கருத முடியாது.

கலவரம் நடந்த நேரத்தில் பொது சொத்தை நாசமாக்கும் நோக்கில் செய்த செயல். உணர்ச்சிவசப்பட்டு செய்த தவறு. எனவே, மறுஆய்வு மனு ஏற்கப்படுகிறது. குற்றவாளிகள் மூவருக்கும் ஏற்கனவே விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை குறைக்கப்பட்டு ஆயுள் தண்டனையாக மாற்றப்படுகிறது.

இவ்வாறு நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறி உள்ளனர்


அமெரிக்காவில் மனைவி உள்ளிட்ட 5 பேரை சுட்டுக்கொன்றவருக்கு மரண தண்டனை  நிறைவேற்றப்பட்டது 11/03/2016

ஆஸ்டின், மார்ச்.11-
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் வசித்து வந்தவர் கேய் வெஸ்புரூக் (வயது 58). இவரது மனைவி குளோரியா. இவர்கள் இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில் மனைவியுடன் சமரசம் செய்து கொண்டு சேர்ந்து வாழலாம் என்ற எண்ணத்தில், வெஸ்புரூக் சம்பவத்தன்று ஹூஸ்டன் நகரில் உள்ள மனைவியின் வீட்டுக்கு சென்றார். அங்கு வேறு சில நபர்கள் இருப்பதை அவர் கண்டார். அவர்களுடன் அவர் மது அருந்தினார்.

அதைத் தொடர்ந்து மனைவியின் படுக்கை அறைக்கு சென்றார். அங்கு அவரது மனைவி வேறு ஒரு ஆணுடன் செக்ஸ் உறவில் ஈடுபட்டிருந்ததை கண்டு ஆத்திரம் அடைந்தார். வெளியே வேகமாக வந்த அவர், தனது வாகனத்தில் வைத்திருந்த வேட்டைத் துப்பாக்கியை எடுத்துச்சென்று, மனைவியின் வீட்டில் கண்ணில் பட்டவரையெல்லாம் சுட்டுத்தள்ளினார்.

இந்த கொடூர சம்பவத்தில் அவரது மனைவி உள்பட 5 பேர் கொல்லப்பட்டனர். இது தொடர்பான வழக்கில் வெஸ்புரூக் கைது செய்யப்பட்டார். அவருக்கு மரண தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பு அளித்தது. அப்பீல் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இதையடுத்து ஹண்ட்ஸ்வில்லேயில் உள்ள சிறையில் அவருக்கு விஷ ஊசி போட்டு நேற்று முன்தினம் உள்ளூர் நேரப்படி இரவு 8.04 மணிக்கு அவரது தண்டனை நிறைவேற்றப்பட்டது.

அமெரிக்காவில் 1976-ம் ஆண்டு மரண தண்டனை நிறைவேற்றுவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை அகற்றப்பட்ட பின்னர் வெஸ்புரூக் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட 535-வது நபர் என்பது குறிப்பிடத்தக்கது.

வேகமாகப் பரவும்  வெடிகுண்டு- கள்ளத்துப்பாக்கி  கலாசாரம் 11/03/2016

தமிழ்நாடு காலம்காலமாக அமைதி பூங்காவாக திகழ்ந்து வந்தது. பெரும்பாலும் தமிழர்களுக்கு வன்முறையில் நம்பிக்கை கிடையாது. வயல்களில், காடுகளில், ஏன் பல நிறுவனங்களில் காவல் பணியில் உள்ளவர்கள்கூட ஒரு கைத்தடியை வைத்துக்கொண்டுதான் இருப்பார்கள். துப்பாக்கி என்பது எல்லோராலும் நிச்சயமாக வாங்கமுடியாது. துப்பாக்கி வைத்துக் கொள்வதற்கு கண்டிப்பாக லைசென்சு வாங்கவேண்டும். இந்த லைசென்சை பெறுவது எளிதல்ல. மாவட்ட கலெக்டருக்கு விண்ணப்பம் அனுப்பினால், ‘இவருக்கு எதற்கு துப்பாக்கி?, அது இவருக்கு தேவைதானா?’ என்றெல்லாம் துருவி, துருவி விசாரணை நடத்தித்தான் கொடுப்பார்கள். அதுவும் இப்போது காடுகளில்  வேட்டை யாடமுடியாது என்ற நிச்சயமான நிலை வந்தபிறகு, துப்பாக்கி மீதான ஆர்வம் மக்களிடையே குறைந்துவிட்டது.

அந்தக்காலங்களில்  சில   நேரங்களில்   சமூகவிரோதிகளால் அரிவாள், கத்தி பயன்படுத்தப்படுவது உண்டு. ஆனால், அதெல்லாம் அபூர்வமாக இருந்தது. இந்த நிலையெல்லாம் இப்போது மாறி, தமிழ்நாட்டுக்குள் கள்ளத்துப்பாக்கி, வெடிகுண்டு கலாசாரம் நுழைந்தது, பெரிதும் கவலையளிக்கிறது. 3 நாட்களுக்கு முன்பு தூத்துக்குடி மாவட்டத்தில் இருகோஷ்டியினருக்கிடையே மாறிமாறி நிகழ்ந்துகொண்டிருக்கும் கொலைகளின் தொடர்ச்சியாக, ஒரு கோஷ்டி மற்றொரு கோஷ்டியை தீர்த்துக்கட்ட ஒரு காரிலும், 5 மோட்டார் சைக்கிள்களிலும் வந்து, அடுத்தடுத்து 3 நாட்டு வெடிகுண்டுகளை வீசி, கத்தி, அரிவாளால் தாக்கி, 2 பேரை படுகொலை செய்திருக்கிறார்கள். ஒருவர் தலையை துண்டித்து எடுத்துச்சென்று  வெகுதூரம்   கொண்டுசென்று  போட்டுவிட்டு சென்றிருக்கிறார்கள். இதுபோல, தலைநகராம் சென்னையிலேயே கள்ளத்துப்பாக்கி விற்பனை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. முன்பெல்லாம் கையில் அரிவாள், கத்தியை வைத்துக்கொண்ட குண்டர்கள், இப்போது ஹைடெக்குக்கு மாறி, .22 எம்எம், அல்லது 9 எம்எம் ரக கைத்துப்பாக்கிகளை பயன்படுத்த தொடங்கிவிட்டார்கள். இவர்களுக்கு இந்த துப்பாக்கிகளெல்லாம் வெளிமாநிலங்களிலிருந்து கிடைக்கிறது. சென்னையில் 5 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தியதில், வெளிமாநிலங்களில் இருந்து ரூ.5 ஆயிரத்துக்கு வாங்கிவந்து, ரூ.50 ஆயிரம் முதல் ரூ.2 லட்சம் வரை விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சென்னை நகரிலேயே இப்படி சர்வசாதாரணமாக துப்பாக்கி விற்பனை நடக்கும்போது, மற்ற இடங்களில் எப்படி இருக்கும்? என்று எண்ணிப்பார்க்கவே அச்சமாக இருக்கிறது. இத்தகைய கைத்துப்பாக்கிகள் மேற்குவங்காளம், பீகார் மாநிலங்களில் இருந்து ரெயில் மூலமாகவும், லாரிகளிலும் கடத்தப்பட்டுவருவது போலீஸ் புலன் விசாரணையில் தெரியவந்துள்ளது. நிச்சயமாக இது அதிர்ச்சியளிக்கக்கூடிய சம்பவங்களாகும். விவசாய தோட்டங்களில் காட்டுப்பன்றிகள்   அட்டகாசத்தை    ஒழிக்க   வெடிகுண்டுகளை   பயன் படுத்தத்தொடங்கி, இப்போது மனித  உயிர்களை  பறிக்க பயன்படுத்துவது வரை வந்துவிட்டது. தேர்தலையொட்டி, சோதனைச்சாவடிகள் வைத்திருக்கிறோம், போலீசாரின் கண்ணில் இருந்து எதுவும் தப்பமுடியாது என்று கூறிக்கொண்டிருக்கும் நேரத்தில், தூத்துக்குடி மாவட்டத்தில் வெடிகுண்டுகளோடு தைரியமாக காரில் வந்துகொண்டிருந்த நிலையில், போலீசார் இன்னும் கண்காணிப்புடன்  செயல் படவேண்டிய கட்டாயம் வந்துவிட்டது. தென்மாவட்டங்கள் முழுவதும் வன்முறையில் ஈடுபடுவதற்கு வெடிகுண்டுகளை பயன்படுத்தும் மோசமான கலாசாரம் வளர்ந்து வருகிறது. எந்த ஊர் என்றாலும், தென்மாவட்டங்கள் மட்டுமல்லாமல், வடமாவட்டங்களில் தோட்டக்காவலுக்கும் வெடிகுண்டுகள் வைத்திருக்கும் பழக்கம் வந்துவிட்டது. தமிழ்நாடு முழுவதும் வெடிகுண்டுகள் தாராளமாக கிடைப்பது ஒருபக்கம் கவலையளித்தாலும், கள்ளத்துப்பாக்கி நடமாட்டமும் இருப்பது வேதனையளிக்கத்தக்க வகையில் இருக்கிறது. <p></p>காவல்துறையும், குறிப்பாக கியூ பிராஞ்ச் போலீசாரும் இதில் இனி தீவிரமாக தங்கள் பணிகளை முடுக்கிவிட்டு, வெடிகுண்டு கலாசாரம், கள்ளத்துப்பாக்கி கலாசாரத்துக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். வெடிகுண்டு தயாரிப்பதற்கான பொருட்கள் விற்பனையை கட்டுப்படுத்த என்னென்ன நடவடிக்கைகளை எடுக்கலாம்? என்று ஆராய்ந்து, இதுபோன்ற பொருட்கள் விற்பனை செய்பவர்களிடம் அடிக்கடி சோதனை நடத்தவேண்டும். யாரிடமாவது வெடிகுண்டு கைப்பற்றப்பட்டால் கடும் தண்டனை விதிக்கப்பட்டால்தான், மற்றவர்களுக்கும் பயம் இருக்கும். முளையிலேயே இந்த வெடிகுண்டு, கள்ளத்துப்பாக்கி கலாசாரத்தை கிள்ளி எறிந்தால்தான், வேகமாக வளர்ந்து நிலைமை மோசமாவதற்குள் தடுக்கமுடியும்.
துளசி மகிமை 10/03/2016

கல்லீரலில் பிரச்சினை உள்ளவர்களுக்கு தண்ணீர் உணவு எது சாப்பிட்டாலும் வாந்தி வரும். இவர்களுக்கு கல்லீரலில் பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது என்று அறிந்துகொள்ள வேண்டும்.

கல்லீரல் பாதிப்புக்கு இயற்கை மருத்துவத்தில் நல்ல மருந்துகள் உள்ளன. கல்லீரலை வலுவூட்டி சீராக செயல்பட வைப்பது மாதுளை. அதேபோன்று துளசியும் நலல மருந்து. துளசி இலை, ஏலக்காய், சுக்கு சேர்த்து நசுக்கி 1 தம்ளர் நீரில் கலந்து காய்ச்சி, அரை தம்ளராக வடிகட்டி தேவையானால் சிறிது பால், தேன் கலந்து பருகிவர உடலுக்கு எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். கல்லீரல் பாதிப்புகள் அகலும். துளசி கஷாயம், ஆஸ்துமா வராமலும், வளர விடாமலும் தடுக்கும்.

கல்லீரல் மண்ணீரலில் கோளாறுகள் ஏதேனும் இருந்தால், துளசியை இரவில் ஊறவைத்து, காலையில் அதை வடிகட்டி அந்த நீரை மட்டும் சாப்பிட்டு வாருங்கள். தொடர்ந்து சாப்பிட்டால் ஈரல் கோளாறுகள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் மறைந்து விடும்.

வாரம் ஒருநாள் கீழாநெல்லி, கரிசலாங்கண்ணி, கொத்தமல்லி ஆகிய 3 கீரைகளையும் நெய், சீரகம், பாசிப்பருப்புடன் சமையல் செய்து பகல் உணவில் சாப்பிட்டு வர கல்லீரல் சேதமடையாமல் வலிமையுடன் செயல்படும். கல்லீரலைச் சார்ந்து செயல்படும் மண்ணீரல் கணையம், சிறுநீரகம் ஆகிய உறுப்புகளும் நஞ்சுமயம் ஆகாமல், சிதைவின்றி ஊக்கமாகச் செயல்படும். குறிப்பாக புகை, மது, இரவு கண் விழிப்பு, அதிக காரம், அதிக காபி பழக்கமுள்ளவர்களுக்கு வரக்கூடிய கல்லீரல் அழற்சி, கல்லீரல் சிதைவு ஆகியவை வராமல் தடுக்கும்.
வாரத்துக்கு  ஒருநாள்  கைத்தறி  அல்லது  கதர் 10/03/2016

“சின்னச்சின்ன இழை பின்னி, பின்னிவரும் சித்திரக்கைத்தறி சேலையடி, நம்ம தென்நாட்டில் எந்நாளும் கொண்டாடும் சேலையடி” என்று ‘புதையல்’ என்ற படத்துக்காக கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் 1957-ல் எழுதிய பாடல் இன்றளவும் கைத்தறி வாரவிழாக்களில் பாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், கைத்தறி நெசவாளர்கள், கதர் தொழிலில் ஈடுபட்டுள்ள நெசவாளர்கள் தங்கள் உடல் உழைப்பில் வாழ்க்கை சக்கரத்தை நகர்த்த தயாரிக்கும் கைத்தறி, கதர்துணிகளை அணிவதன் மூலம், கிராமப்புறங்களில் வறுமைக்கோட்டுக்கு கீழே இருக்கும் இந்த தொழிலாளர்களின் குடும்பத்தில் பசிப்பிணியை போக்க உதவமுடியும். இந்த நெசவாளர்களின் இன்னல்களைப் போக்கும் விதமாகத்தான், மறைந்த அண்ணா தன் தோளில் கைத்தறி துணிகளைச் சுமந்துகொண்டு, காஞ்சீபுரம் நகரில் வீதிவீதியாகச் சென்று விற்றார். பெருந்தலைவர் காமராஜர் முதல் அனைத்து தேசிய தலைவர்களும் கதர் தவிர வேறு எந்த துணியும் எந்த உபயோகத்துக்கும் பயன்படுத்தியது இல்லை. இன்றும் காங்கிரஸ் என்றால் கதர் துணியை அணிவதுதான் ஒரு அடையாளமாக இருக்கிறது.

பா.ஜ.க.வைப் பொருத்தமட்டிலும் பல தலைவர்கள் கதர், கைத்தறி துணிகளையே அணிந்து வருகிறார்கள். பிரதமர் நரேந்திரமோடி கைத்தறி தொழிலுக்கு ஊக்கம் அளித்து வருகிறார். என்றாலும், நாகரீக உலகில் இப்போது கைத்தறி, கதர்துணிகளை அணிபவர்கள், விரும்புபவர்களின் எண்ணிக்கை பெருமளவில் குறைந்துவிட்டதால், இந்த தொழில்கள் நசிந்துபோய்விட்டது. இந்த தொழிலில் ஈடுபடும் குடும்பங்களுக்கு வேறுவேலை எதுவும் செய்யத்தெரியாது. அவர்கள் வாழ்க்கைக்கு வழிகாட்ட மத்திய அரசாங்கத்தில் பணியாற்றும் 42 லட்சம் ஊழியர்களையும், வாரத்துக்கு ஒருநாள், அதாவது வாரக்கடைசியில் வெள்ளிக்கிழமையன்று மட்டும் அணியச்சொல்லலாமா?, அல்லது விருப்பப்பட்டவர்களை மட்டுமாவது அணியச்சொல்லலாமா? என்று மத்திய அரசாங்கம் பரிசீலித்துக்கொண்டு இருக்கிறது.

நாடு முழுவதும் கதர் நெசவுத்தொழிலில் ஈடுபட்டுள்ள நெசவாளர்களுக்கு உதவும் வகையில், காதி தொழிலை மேம்படுத்தும் ஒரு முயற்சியாக மத்திய அரசாங்க ஊழியர்கள் கைகொடுக்க காதி மற்றும் கிராமத்தொழில்கள் ஆணையம், மத்திய அரசாங்கத்துக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. மத்திய அரசாங்க ஊழியர்கள் ஒவ்வொருவரும் ஆளுக்கு ஒரு ஆடை வாங்கினால்போதும் விற்பனைபெருகும். ஒருமுறை அணிந்து பார்த்தால் உடலுக்கு இதமாகவும், மனதுக்கு மகிழ்வாகவும் இருக்கும். ஏற்கனவே பல மத்திய அரசாங்க அலுவலகங்களில் மேஜைவிரிப்பு போன்ற துணிவகைகளை கதர்துறையிலேயே வாங்குகிறார்கள். தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் கதர் நெசவாளர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவு. கைத்தறி நெசவாளர்களின் எண்ணிக்கைதான் அதிகம். எனவே, கதரும் வேண்டும், கைத்தறி துணியும் வேண்டும் என்றவகையில், இரு தொழில்களையும் வளர்க்க மத்திய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும். இதில், மத்திய அரசாங்கத்தோடு விட்டுவிடாமல், அடுத்து ஆட்சிக்குவரும் தமிழக அரசும் கைத்தறி, கதர்தொழிலை வளர்க்க இதுபோன்ற முயற்சிகளை அரசு ஊழியர்கள் மட்டுமல்லாமல், தனியார் ஊழியர்கள், பள்ளிக்கூட, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் என்று எல்லோரையும் ஊக்குவிக்க வேண்டும்.

சேலம் மாவட்டத்தில் 2002-ம் ஆண்டு நடந்த கைத்தறி வாரவிழாவின்போது, அப்போது கலெக்டராக இருந்த டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், அவர் மனைவி கிருத்திகா, மகன் அரவிந்த் ஆகியோர் அந்த ஒருவாரமும் கைத்தறி வேட்டி, சட்டை, சேலை அணிந்து அனைத்து இடங்களுக்கும் வந்ததால், மக்களும் அதை பின்பற்றி அங்கு கைத்தறி விற்பனை அதிகரித்தது. அதுபோல, அரசியல்வாதிகள், உயர் அதிகாரிகள் குறைந்தபட்சம் வாரத்துக்கு ஒருநாளாவது இந்த ஆடைகளை அணியவேண்டும். ஆனால், கதர், கைத்தறி ஆடைகள் இன்றைய நாகரீக உலகுக்கு ஏற்றவகையில் புதிய டிசைன்கள், புதிய ரகங்களில் இல்லையே என்ற குறை நியாயமான குறையாக இருக்கிறது. அந்த குறையைப் போக்குவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டால், விவசாயத்துக்கு அடுத்தபடியாக கதர், கைத்தறி தொழிலாளர்களும் வேலைவாய்ப்பு பெறமுடியும், வருமானமும் ஈட்டமுடியும் என்ற நிலையை உருவாக்கமுடியும், கிராமப் பொருளாதாரமும் வலுவடையும்.


உலகில் மிகப் பெரிய அறுவை சிகிச்சை 09/03/2016

மருத்துவம் பெரிதாக முன்னேறாத அந்தக் காலத்தில், எல்லாவகை நோய்களுக்கும் உள் மருந்து மட்டுமே தரப்பட்டது. உடலின் வெளியில் ஏற்படும் காயங்கள், கட்டிகள் போன்றவற்றிற்கும் உள் மருந்தே கொடுக்கப்பட்டது. சூரணம், லேகியம் தான் உள் மருந்து. கட்டிகள் போன்ற வியாதிகள் அகற்றப்படாமல் மருந்து மூலம் குணமாகிவிடும் என்றே நம்பப்பட்டது. இந்த கொடிய நோய்களால் பாதிக்கப்பட்டு அதிக எண்ணிக்கையில் மக்கள் இறந்தனர்.

அறுவை சிகிச்சை முறைகள் 16-ம் நூற்றாண்டில் தொடங்கின. முதன் முதலாக இங்கிலாந்தில் ஒரு நோயாளியின் நுனி நாக்கில் இருந்த சிறு கட்டி ஒன்றை அறுவை சிகிச்சை மூலம் அகற்றினார்கள். உலகில் முதன்முதலாக நடந்த இந்த அறுவை சிகிச்சைக்கு தேவைப்பட்ட கருவிகள் ஒரு எரியும் மெழுகுவர்த்தி, குறடு ஒன்று, வலி மிகுதியால் நோயாளி துள்ளி விழாமல் அழுத்திப் பிடித்துக்கொள்ள இரண்டு பேர் இருந்தனர். இவர்களை வைத்துதான் அந்த அறுவை சிகிச்சை நடந்தது. அதன் பின்பு விஞ்ஞான வளர்ச்சியால் மருத்துவம் படிப்படியாக முன்னேறியது. அறுவை சிகிச்சையிலும் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டது. இதற்கு உதாரணமாக அமெரிக்காவில் நடந்த அறுவை சிகிச்சையை சொல்லலாம். இது மிகச் சிறந்த கடினமான அறுவை சிகிச்சை என்று உலகமே ஒத்துக்கொண்டது.

 1978-ல் மே மாதம் கலிபோர்னியா பல்கலைக்கழக மருத்துவர்களால் 30 வயது பெண்ணின் கருப்பையில் இருந்த கட்டி அகற்றப்பட்டது. இது என்ன பெரிய விஷயமா என்று கேட்பவர்களுக்கு, அந்தக் கட்டியின் எடை 90 கிலோ என்பது தான் பதில். இந்தக் கட்டியை உடைத்த போது அதில் இருந்து 74 லிட்டர் நீர் வெளியேறியது. பின்பு 18 கிலோ எடை கொண்ட சதைப் பிண்டமாக அந்தக் கட்டி இருந்தது. அறுவை சிகிச்சைக்கு முன்பு 172 கிலோ எடையிருந்த அந்த பெண் சிகிச்சை முடிந்ததும் 82 கிலோவாக எடை குறைந்தார். ஏழு மருத்துவர்களால் செய்யப்பட்ட, இந்த அறுவை சிகிச்சை தான் உலகிலேயே பெரியது என்று சொல்லப்படுகிறது.

குழந்தைகளுக்கு பொம்மை வேண்டாம் 08/03/2016

குழந்தைகளை சந்தோஷப்படுத்துவதற்காக பல வண்ணங்களிலும், பல மாடல்களிலும் ஏராளமான பொம்மைகள் கிடைக்கின்றன. குழந்தைகளின் மகிழ்ச்சிக்காக நாமும் தொடர்ந்து இத்தகைய பொம்மைகளை குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுத்துக்கொண்டே இருக்கிறோம்.

குழந்தைகள் விளையாடும் இந்த பொம்மைகள் பி.வி.சி. என்று சொல்லப்படுகிற ‘பாலிவினைல் குளோரைடு’ என்ற பொருளில் இருந்து தயாரிக்கப்படுகிறது. பாட்டில், நிப்பிள், ரப்பர் வாத்துக்கள், பல் முளைக்கும் போது கடிப்பதற்காக கொடுக்கப்படும் சிறு விளையாட்டுப் பொருட்கள் எல்லாம் இந்த பொருளால் தயாரிக்கப்படுபவைதான்.

பி.வி.சி. என்பது சாதாரணமாக வளையும் தன்மை கொண்ட பொருள் கிடையாது. அதனால், இந்த பி.வி.சி.யை வளைப்பதற்காக இதனுடன் பதாளேட் பிளாஸ்டிசைசர் என்கிற ஒரு பொருளை சேர்கிறார்கள். இது சேரும் போது பிவிசி வளையும் தன்மை பெறுகிறது. இப்படியாக வளையும் தன்மைக் கொண்ட வினைல் பொருட்கள் பல ஆண்டுகளாக உடையாமலும் வண்ணம் மாறாமலும் இருக்கும்.

வளைப்பதற்காக சேர்க்கப்படும் பதாளேட்  என்ற பொருள் விளையாட்டுப் பொருட்களின் எடையில் பாதியளவு கலந்திருக்கும். இது பிவிசியுடன் வேதி முறையில் இணைக்கப்படுகிறது. பதாளேட் பொருட்களை குழந்தைகள் வாயில் கடித்து விளையாடினால் அது கசிந்து வாய்க்குள் போகும். பிளாஸ்டிசைசர் குழந்தைகளின் எச்சிலில் கரையக்கூடியது.

இப்படி கரைந்த பிளாஸ்டிசைசர்கள் ரத்தம், நுரையீரல், கல்லீரல் ஆகிய இடங்களில் கொழுப்பாக சேமிக்கப்படுகிறது. இது என்னை மற்றும் கொழுப்பில் கரையக்கூடியது. இவை தரும் தீமைகள் பற்றி ஏராளமான ஆய்வுகள் நடத்தப்பட்டது. அதில் மனித உடலில் சிறுநீரகம் மற்றும் கல்லீரலில் புண்களை ஏற்படுத்தும் தன்மைக் கொண்டது. மேலும் ஆண் பெண் இனப்பெருக்க உறுப்புகளில் பிரச்சினையை ஏற்படுத்தும். விந்து உருவாவதில் இடையூறு செய்யும். கல்லீரல், சிறுநீரகம் ஆகிய இடங்களில் கேன்சரையும், மோனோநியூக்கிளியர் செல்லுக்கேமியாவையும் உருவாக்குவதாக தெரிவிக்கிறது.

குழந்தைகளுக்கு ஏற்படும் இந்த தீமைகளை கருதி அரசு ஏதாவது நடவடிக்கை எடுத்து பிவிசி மூலம் தயாரிக்கப்படும் குழந்தைகள் விளையாட்டுப் பொருட்களை நிறுத்த வேண்டும். குழந்தைகளுக்கு பெரும் கெடுதல் தருகிற வினைல் மற்றும் பிளாஸ்டிசைசர் உபயோகப்படுத்துவதை தயாரிப்பு நிறுவனங்கள் நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுப் பெற்று வருகின்றன. கூடுமானவரை நாம் நமது குழந்தைகளுக்கு பிவிசி விளையாட்டுப் பொருட்களை வாங்கிக்கொடுக்காமல் தவிர்ப்பதே நல்லது.

Saturday, March 12, 2016


கடல்வழி சுற்றுலா 08/03/2016

திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது” என்பார்கள். ஆனால், நிச்சயிக்கப்படும் திருமணங்கள் எங்கு, எப்படி நடக்கும் என்பதை, அவரவர்தான் முடிவுசெய்கிறார்கள். இப்போதைய இளைஞர்கள் தங்கள் திருமணம் வித்தியாசமான முறையில் நடக்கவேண்டும் என்று விரும்புகிறார்கள். ஆகாயத்தில் பறந்துசெல்லும் பலூன்களில் அமர்ந்து, மேகக்கூட்டங்களிடையே திருமணம் செய்வதை சிலர் சாதனையாக நினைக்கிறார்கள். வடநாடுகளில் திருமணம் நடந்தவுடன், மணமக்கள் ஹெலிகாப்டரில் பறந்து மணமகன் வீட்டிற்கோ, மணமகள் வீட்டிற்கோ செல்வதை கவுரவமாக நினைக்கிறார்கள். இந்தியாவை பொறுத்தமட்டில், வெளிநாடுகளைப்போல, கடலில் மிதந்துகொண்டிருக்கும் கப்பலில் திருமணம் செய்வது நிறைய இளைஞர்களின் கனவாக இருக்கிறது. ஏனெனில், வெளிநாடுகளில் இத்தகைய சாகச திருமணங்கள் அதிலும் குறிப்பாக, கடலில் செல்லும் படகுகளிலும், கப்பல்களிலும் நடக்கும் திருமணங்கள் நமது இளைஞர்களை வெகுவாக ஈர்த்துள்ளது. ‘அந்தநாள் என்று வருமோ’ என்று ஏங்கிக்கொண்டிருந்தவர்களுக்கு, நிச்சயமாக முடியும் என்ற நம்பிக்கையை மத்திய கப்பல் துறை அமைச்சகமும், கப்பல்துறை மந்திரி நிதின் கட்காரியும் ஏற்படுத்துவதற்கான முயற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

இந்துமகா சமுத்திரத்திலோ, வங்காள விரிகுடாவிலோ, அரபிக்கடலிலோ செல்லும் சொகுசு கப்பலில் திருமணங்கள் நடத்தும் வசதியை உருவாக்கலாம். அந்த கப்பலிலேயே விருந்துக்கான வசதி மற்றும் பொழுதுபோக்கு வசதிகளை ஏற்படுத்தலாம் என்று திட்டமிடப்பட்டுள்ளது. முதல்கட்டமாக சென்னையிலிருந்து, இதுபோல மும்பைக்கு ஒரு சொகுசுகப்பலை விட்டு, அந்த கப்பலில் இதற்கான வசதிகள் அனைத்தையும் ஏற்படுத்த தனியார் கப்பல் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. விரைவில் இதுகுறித்து ஒரு முடிவு எடுக்கப்படும் என்று நிதின் கட்காரியே அறிவித்துள்ளார். இந்தியாவை பொறுத்தமட்டில், 7 ஆயிரத்து 500 கி.மீட்டர் நீளத்திற்கு கடற்கரை இருக்கிறது. இதில் 7-ல் ஒரு பங்கு தமிழ்நாட்டில்தான் இருக்கிறது. அதாவது, ஆயிரத்து 76 கி.மீ. நீளகடற்கரை தமிழ்நாட்டில் இருக்கிறது. எண்ணூர், சென்னை, தூத்துக்குடி ஆகிய மூன்று பெரிய துறைமுகங்களும், 7 சிறிய துறைமுகங்களும் மற்றும் 10 தனியார் முதலீட்டு துறைமுகங்களும் இருந்தாலும், கடல்வழி போக்குவரத்தையோ, சொகுசு கப்பல் சுற்றுலாவையோ, வெளிநாட்டு, உள்நாட்டு சுற்றுலா பயணிகள் பெரிதும் விரும்பும் கடல்வழி சாகச விளையாட்டுகளையோ, கடல்வழி சுற்றுலாவையோ இன்னும் சுற்றுலாத்துறை மேம்படுத்தவில்லை. துபாய்க்கு செல்லும் சுற்றுலா பயணிகள் கூட அங்குள்ள சொகுசு படகுகளுக்கு இரவு உணவுக்காக சென்றால், கடலில் மிதந்து கொண்டே பொழுதுபோக்குக்காக பாடல்-நடனங்களையும் பார்க்கமுடியும், நல்ல உணவுகளையும் உண்ணமுடியும் என்ற வகையில், அங்குபோவது கட்டாயம் என்ற நிலையை உருவாக்கிவிட்டது.

அண்டை மாநிலமான கேரளாவில் கூட தற்போது தண்ணீரில் இறங்கும் கடல் விமானத்தை வெகு விரைவில் அறிமுகப்படுத்தவதற்கான முயற்சிகள் நடக்கிறது. விமானத்தளம் போன்று இந்த கடல் விமானம் வந்து இறங்க தண்ணீர் தளமாக ஒரு இடம் அடையாளம் கண்டுகொள்ளப்பட்டு, ஏற்கனவே கொச்சிக்கும் - லட்சத்தீவுக்கும் இடையே இந்த விமானத்தின் சோதனை ஓட்டம் முடிந்துவிட்டது. தமிழ்நாட்டில் இவ்வளவு வாய்ப்புகள் இருந்தும், சுற்றுலாத்துறை அதை சரியாக பயன்படுத்தவில்லை என்ற ஒரு நிலை இருக்கிறது. தேர்தல் முடிந்து அடுத்து ஆட்சிக்குவரும் அரசு, இதில் தீவிர கவனம் செலுத்தி உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை அதிக அளவில் ஈர்க்கும் வகையில், கடல்வழி விளையாட்டுகள், சொகுசு கப்பல்கள், பயண கப்பல்கள், துபாய் போல மிதக்கும் ஓட்டல்கள் என்று பல கடல்வழி சுற்றுலா வசதிகளுக்கான முயற்சிகளை ஆராய்ந்து அறிமுகப்படுத்த வேண்டும். சுற்றுலா என்பது பண்பாட்டு பரிமாற்றம் என்பது மட்டுமல்லாமல், அரசுக்கும் அதிக அளவில் வருமானம் ஈட்டித்தரும் என்பதால், தமிழக அரசின் சுற்றுலாத்துறை, போக்குவரத்து துறை, சிறு துறைமுகங்கள் துறை, விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் இதில் தீவிர கவனம் செலுத்தவேண்டும். இதுபோன்ற சுபகாரியங்களை நடத்தும் சிறிய கப்பல்களை தமிழக சுற்றுலாத்துறையின் சார்பில் விடலாமே!.

எழுத்துக்களின் உருவாக்கம் 07/03/2016

பேச்சு வழக்கை மொழி என்று கூறினர். அந்த மொழியைத் தொடர்ந்து எழுத்து உருவானது. எழுத்தை முதலில் கண்டுபிடித்தது மெசபடோமியாவில்தான் என்பது மொழி ஆய்வாளர்களின் கருத்து.

கி.மு. 4000 ஆண்டிலேயே களிமண்ணை பேப்பர் போல் பயன்படுத்தி, அதில் சட்டங்கள், உடன்பாடுகள், அட்டவணைகள் போன்றவை எழுதப்பட்டன. போகப் போக பேசுகிற மொழியை பிரித்து ஒவ்வொரு எழுத்துக்கும் ஒரு குறியீடுகள் கண்டுபிடிக்கப்பட்டன.

காகிதம் என்று ஒன்று இல்லாத காரணத்தால் ஈரக் களிமண்ணை பரப்பி அதில் எழுத்தாணியால் எழுதி, அது உலர்ந்தவுடன்  ஈரக் களிமண்ணை அதன் மீது வைத்து பேக்கிங் செய்து விடுவார்கள். அதை உடைத்து விடாமல் மிக ஜாக்கிரதையாக கொண்டு சென்று சேர்க்க வேண்டும். பெற்றுக்கொண்டவர் பார்சலை லேசாக தட்டி உதிர்த்தால் போதும். உள்ளே உள்ள விஷயத்தை படிக்கலாம்.

ஆயிரக்கணக்கான குறியீடுகளை வேகமாக களிமண்ணில் எழுத கல்வியறிவு அதிகமாக தேவைப்பட்டதால், பள்ளிக்கூடங்கள் ஆரம்பிக்கப்பட்டன. அங்கு சட்டம், மருத்துவம், அரசியல் போன்ற விஷயங்களை எழுதுவதற்கு தனித்தனியாக பயிற்சி அளிக்கப்பட்டது.

இப்படியாக எழுத்து என்பது முழு வடிவம் பெற 800 ஆண்டுகள் பிடித்தன. மொழி, மனிதனின் கைவசப்பட்டவுடன், அடுத்த கட்டமாக இலக்கியம் பிறந்தது. கி.மு.2000 ஆண்டில் பாபிலோனியர்களால் எழுதப்பட்ட சிறுகதைகள், புராணங்கள், சுற்றுலா தகவல்கள், மன்னர் மேற்கொண்ட வேட்டைகள் போன்றவை தொல்பொருள் ஆராய்ச்சிகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

பழமொழிகளைக்கூட பாபிலோனியர்கள் விட்டு வைக்கவில்லை. அந்த காலத்தில் அழகு நிலையங்கள் பெண்கள் கூடும் இடமாக இருந்து இருக்க வேண்டும். ஒரு களிமண் குறிப்பில் அழகு நிலையங்கள் இருந்தால், அங்கே கிசுகிசுவும் கூடவே இருக்கும் என்கிற பழமொழி ஒரு கல்வெட்டில் கிடைத்து இருக்கிறது. இன்றளவும் பின்பற்றப்படும் ‘வியாபாரத்தில் நண்பர்கள் கிடையாது‘ என்ற பழமொழியும் களிமண் குறிப்பில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

நத்தை  வேகத்தில்  நகரும்  ரெயில்வே  திட்டங்கள் 07/03/2016

ஆங்கிலேயர், இந்தியாவை ஆண்ட நேரத்தில், அவர்கள் தந்த அருட்கொடை ஒன்று என்றால், அது  ரெயில்வே பாதைதான். 1853-ம் ஆண்டு இந்தியாவின் முதல் பயணிகள் ரெயில் மும்பையிலிருந்து தானேக்கு ஓடியது. ஆனால், அதற்கு முன்பே, இந்தியாவில் 1935-ம் ஆண்டு சென்னை சிந்தாதிரிப்பேட்டையிலிருந்து செங்குன்றம் வரை பரிசோதனைமுறையில் ரெயில்பாதை அமைக்கப்பட்டு, இந்தியாவின் முதல் சரக்குரெயில் இந்த பாதையில்தான் ஓடியது. இவ்வளவு பெருமை படைத்த தமிழ்நாட்டில், ரெயில்வே திட்டங்களை பொறுத்தமட்டில் பெரிய அளவில் புதிய திட்டங்கள் நிறைவேற்றப்படாதது மிகவும் வருந்தத்தக்கது.

ஆங்கிலேயர் ஆட்சியில் ‘மீட்டர் கேஜ்’ ரெயில்பாதை போட்டிருந்தார்கள், அதை அகல ரெயில்பாதை அதாவது, ‘பிராட் கேஜ்’ ஆக மாற்றும் திட்டங்கள் கூட இன்னும் முழுமையடையாதது, தமிழ்நாடு வஞ்சிக்கப்படுகிறதோ? என்ற எண்ணத்தை உறுதிப்படுத்துகிறது. நெல்லையிலிருந்து திருச்செந்தூர் வரை அகல ரெயில்பாதை போடும் பணிகூட மெல்லமெல்ல நகர்ந்து, 2008-ம் ஆண்டுதான் போக்குவரத்து தொடங்கியது. ரெயில் பயணத்தில் ‘‘சிக்கு புக்கு சிக்கு புக்கு ரெயிலே’’ என்று மலைப்பாதையில் பயணம் செய்யும் சுகமே தனிசுகம்தான் என்று சொல்வார்கள். மேட்டுப்பாளையத்திலிருந்து ஊட்டி வரை ஒரு ரெயில்பாதை இருக்கிறது. அதுபோல, தென்மாவட்டங்களில் செங்கோட்டை-கொல்லம் இடையே 49.38 கி.மீ. தூரத்தில் செல்லும் பயணம் மேற்கு தொடர்ச்சிமலையில் எழில் கொஞ்சும் பசுமை காடுகளுக்கு நடுவே செல்லும்போது ரம்மியமாக இருக்கும். வழியில் 5 இடங்களில் மலைகளை குடைந்து குகைகள் வழியாக செல்ல வேண்டியதிருக்கும். இந்த ரெயில் பாதையில்தான் சென்னை எழும்பூரிலிருந்து கொல்லம் செல்லும் ‘கொல்லம் மெயில்’ ஓடிக் கொண்டிருந்தது. இந்த கொல்லம் மெயில் 1904-ம் ஆண்டிலிருந்து ஓடிக் கொண்டிருந்தது. விருதுநகரிலிருந்து தென்காசி, செங்கோட்டை வழியாக கொல்லம் செல்லும் இந்த ரெயிலில் செல்வதற்கு பயணிகளிடையே மிகுந்த ஆர்வம் இருந்தது. இதுபோல, திருச்செந்தூர்-நெல்லை-தென்காசி வழியாக இந்த பாதையில் சென்ற ‘மீட்டர் கேஜ்’ ரெயில்கள் சபரிமலை பக்தர்களுக்கும், முருக பக்தர்களுக்கும் பெரும் இணைப்பாக முன்பு இருந்தது.

முதலில் கொல்லம் வரை ஓடிய இந்த ரெயில், 1918 முதல் கொல்லம்-திருவனந்தபுரம் வரை ஓடத்தொடங்கியது. இந்த ரெயில்தான் ‘மீட்டர் கேஜ்’ ரெயிலில் முதலாவதாக குளுமை வசதி செய்யப்பட்ட ரெயில் பெட்டிகளையும், முதல் வகுப்பு ரெயில் பெட்டிகளையும் இணைத்துக் கொண்டு ஓடிய ரெயில் என்று பெயர் பெற்றது. இந்த ரெயில் பாதையை அகல ரெயில்பாதையாக ஆக்குவதற்கு 2000-ம் ஆண்டிலிருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டது. எவ்வளவோ ரெயில் பாதை திட்டங்கள் நாடு முழுவதும் வேகமாக நிறைவேற்றப்பட்டுக் கொண்டிருந்த நிலையில், இந்த ரெயில் பாதைத்திட்டம் மட்டும் நத்தை வேகத்தில் நகர்கிறதே என்ற வருத்தம் எல்லோருக்கும் இருந்தது. இந்த நிலையில், 16 ஆண்டுகளுக்கு பிறகு, அடுத்த ஆண்டு மார்ச் மாதம் இந்த பாதையில் ரெயில் ஓடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது, ‘பெட்டர் லேட் தேன் நெவர்’, தாமதமானாலும் பரவாயில்லை என்ற உணர்வை ஏற்படுத்துகிறது. ஆக, இனி சென்னையையும், கேரள தலைநகராம் திருவனந்தபுரத்தையும் இணைப்பதற்கு 3 வழிகளில் ரெயிலில் போக முடியும். ஏறத்தாழ 50 கி.மீ. ‘மீட்டர் கேஜை’ அகல ரெயில் பாதையாக்க 16 ஆண்டுகள் காத்திருக்க வேண்டுமா? என்பதுதான் தமிழக மக்களின் கேள்வி. இதுபோல, மதுரையிலிருந்து போடி வரை சென்று கொண்டிருந்த 86 கி.மீ. ‘மீட்டர் கேஜ்’ ரெயில்பாதையை, அகல ரெயில்பாதையாக்குகிறோம் என்று சொல்லி, 2010-ல் ரெயில்களை நிறுத்தி தண்டவாளங்களை பிடுங்கி விட்டு, அகல ரெயில் பாதையாக்கும் பணிகளும் நகராமல் இருக்கிறது. இதனால் இந்தப்பகுதியில் உள்ள மக்கள் அனைவரும் ரெயிலையே மறந்து விட்ட சூழ்நிலை இருக்கிறது. இதுபோல, தமிழ்நாட்டில் அறிவித்தும், நிறைவேற்றப்படாமலும் அல்லது போதிய நிதி ஒதுக்காமல் சுணங்கிக் கொண்டிருக்கும் வகையிலும், நிறைய திட்டங்கள் இருக்கிறது. ஒவ்வொன்றையும் பட்டியலிட்டு, எல்லா திட்டங்களையும் மாட்டுவண்டி வேகத்தில் இல்லாமல், உண்மையான ரெயில்வேகத்தில் நிறைவேற்ற எல்லாதரப்பிலும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

உடல் பருமனால் ஏற்படும் வியாதிகள் 06/03/2016

இன்றைக்கு உலகம் முழுக்க எல்லா நாடுகளிலுமே குண்டான மனிதர்கள் தான் பெரும்பான்மையாக இருக்கிறார்கள். உடல் உழைப்பு இல்லாதது தான் இதற்கு முக்கிய காரணம். நல்ல உடல் நலமும், மனநலமும் ஒரு மனிதனின் வாழ்க்கைக்கு மிக முக்கியம்.உடல் உழைப்புக்கு அடுத்தபடியாக, அதிகமாக உண்பது உடல் பருமனுக்கு காரணமாக அமைகிறது. இந்த இரண்டு காரணங்களும் ஒன்று சேரும் போது,  உண்ணும் உணவு கொழுப்பாக மாறி, உடலில் தேங்கி உடல் பருமனை அதிகரிக்கிறது. உடல் பருமனை பொதுவாக ‘பி.எம்.ஐ.‘ என்ற குறியீட்டால் குறிப்பது வழக்கம். சாதாரண ஒரு மனிதனின் பி.எம்.ஐ. 18-க்கும் 24-க்கும் இடையில் இருக்க வேண்டும். இது ஆரோக்கியமான உடல். பி.எம்.ஐ. 25-க்கு மேல் போனால் அதிக உடல் எடை உடையவர் என்றும், பி.எம்.ஐ. 35-க்கு  மேல் இருந்தால் மிக அதிக உடல் எடை, பருமன் உடையவர் என்றும் பிரிக்கிறார்கள்.இதுதவிர வேறு காரணங்களும் உண்டு. மூளையின் அடிப்பகுதியில் ஏற்படும் கட்டி, அட்ரீனல் கணையத்தில் ஏற்படும் கட்டிகள், தைராய்டு சுரப்பியால் ஏற்படும் குறைபாடு, குறிப்பிட்ட சில வியாதிகளுக்காக தொடர்ந்து எடுக்கும் சில மருந்துகள் இவற்றால் உடல் எடையும், பருமனும் கட்டுக்கடங்காமல் அதிகரிக்கும். சில நேரங்களில் எந்த பரிசோதனையிலும் கண்டுபிடிக்க கூட முடியாமல் போகலாம். உடல் எடை, பருமன் அதிகரிப்பதால் பல பிரச்சினைகள் வரலாம். அதில் முக்கியமாக இளம் வயதில் சர்க்கரை, ரத்த அழுத்தம், இதயம், நுரையீரல் ஆகிவை சம்பந்தப்பட்ட வியாதிகள், உடலை தாங்கும் மூட்டில் ஏற்படும் தேய்மானம் போன்றவை குறிப்பிடத்தக்கவை. எனவே அதிக உடல் பருமன் உள்ளவர்களுக்கு அன்றாட வாழ்க்கை பாதிப்பதோடு, அதனால் ஏற்படும் வியாதிகளால் பல பிரச்சினைகள் வரலாம். எனவே உடல் பருமன் உடையவர்களுக்கு எடையுடன் சேர்த்து, மற்ற வியாதிகளுக்கும் சிகிச்சை தேவைப்படுகிறது.பொதுவாக பி.எம்.ஐ. 35 உடன் சர்க்கரை போன்ற வியாதிகள் இருந்தால் அவர்களுக்கு சில குறிப்பிட்ட அறுவை சிகிச்சை தேவைப்படலாம். இரைப்பை மாற்றுப்பாதை, இரைப்பையின் கொள்ளளவை குறைக்கும் அறுவை சிகிச்சைகள், லேப்ராஸ்கோபி மூலம் செய்யப்படுகின்றன. இந்த வகை சிகிச்சைகளுக்கு பின் அதிகபட்ச எடை குறைவதோடு, எப்போதும் எடை அதிகரிப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கொசு, யாரை கடிக்காது? 05/03/2016

உலகத்தின் ஆதி உயிரினங்களுள் ஒன்று கொசு. அது நமக்குத் தரும் தொல்லைகள் சொல்லி மாளாது. 2.5 மில்லி கிராம் மட்டுமே எடைகொண்ட கொசுவுக்குப் பற்கள் மட்டும் 47 உள்ளனவாம்.3 ஆயிரம் வகை கொசுக்கள் இருந்தாலும், 80 வகை கொசுக்கள் மட்டுமே நம் ரத்தத்தை உறிஞ்சுகின்றன. ஒரு கொசு, முட்டையிலிருந்து, முழு வளர்ச்சி அடைந்த கொசுவாக மாறுவதற்கு தேவைப்படும் காலம், 5 நாட்கள் மட்டுமே முட்டையிலிருந்து வெளிவந்த சில நிமிடங்களுக்குப் பின், கொசுக்கள் இனப் பெருக்கம் செய்ய முடியும். மேலும், கொசுவுக்கு முள் போன்ற கூரிய முனையுடைய இரத்த உறிஞ்சுக்குழல் உண்டு. உலகின் அபாயகரமான பூச்சியினம் என்று பெரும் பாலான நாடுகளில் அறிவிக்கப் பட்டது கொசு தான். ஆண் கொசுவைவிடப் பெண் கொசுவே பெரியது. ஆண் கொசு சைவம். இலை தழைகளையே அது உணவாக உட்கொள்கிறது. கடிப்பதும் ரத்தம் குடிப்பதும்  பெண் கொசுதான்.அதேபோல், கொசுக்கள் பெண்களைத்தான் அதிகமாக கடிக்கின்றன. காரணம் அவர்கள் உடலிலுள்ள ஈஸ்ட்ரோஜென்கள், கொசுக்களை கவருகின்றன. பெண் தான் பெண்ணுக்கு எதிரி என்பது கொசுக்கள் விஷயத்திலும் உண்மையே. அதேநேரம் ‘வைட்டமின் பி‘ கொசுவின் எதிரி. இந்த வைட்டமின் பி சத்து உடலில் அதிகமாக இருப்பவர்களை கொசு நெருங்குவதில்லை.கொசுக்களை விரட்ட நாம் பயன்படுத்தும் பொருட்களில் கொசுக்களை அழிக்கும் ரசாயனம் அலெத்ரின் சார்பு பொருட்கள் உள்ளன. இது கொசுக்களை மட்டும் அழிப்பதில்லை மனிதனின் சுவாசப்பையில் நச்சுப்பொருளாகக் கலந்து நாளடைவில் மார்புச்சளி, தும்மல் தலைவலி போன்ற கேடுகளை உண்டாக்குகின்றன. உடலில் தேங்காய் எண்ணெய் அல்லது வேப்ப எண்ணெய் தடவிக் கொண்டால் இரவில் கொசுக்கள் மட்டுமல்ல வேறு சில பூச்சிகளும் நம்மை கடிக்காது.

இனி மக்கள்தான் எஜமானர்கள் - சட்டசபை தேர்தல் 05/03/2016

தமிழகத்தின் 15-வது சட்டசபையை உருவாக்குவதற்கான தேர்தல் தேதி மே 16 என்றும், ஓட்டு எண்ணிக்கை 19-ந் தேதி என்றும் அறிவிக்கப்பட்டுவிட்டது. இதே தேதிதான் கேரளாவுக்கும், புதுச்சேரிக்கும் தேர்தல் தேதியாகும். தமிழகத்தில் முதல் சட்டசபை 1952-ம் ஆண்டு முதல் 1957 வரையிலும், 2-வது சட்டசபை 1957 முதல் 1962 வரையிலும், 3-வது சட்டசபை 1962 முதல் 1967 வரையிலும் இயங்கியது. இந்த மூன்று சட்டசபைகளிலும் காங்கிரஸ் கட்சிதான் பெரும்பான்மையாக இருந்து ஆட்சியை அமைத்தது. 4-வது சட்டசபை தேர்தல் 1967-ம் ஆண்டு நடந்தது. இதில் மறைந்த அண்ணா தலைமையில் தி.மு.க. ஆட்சி அமைத்தது. இடையில் அவர் மறைந்தவுடன் கருணாநிதி முதல்-அமைச்சரானார். ஆனால், இந்த சட்டமன்றம் 5 ஆண்டுகள் முழுமையாக இயங்காமல், அவர்களாலேயே 1971-ல் கலைக்கப்பட்டது. மீண்டும் 5-வது சட்டசபை 1971 முதல் 1976 வரை தி.மு.க.வின் பெரும்பான்மையோடு இயங்கியது. நெருக்கடிநிலை பிரகடன நேரத்தில் அந்த சட்டசபையும் கலைக்கப்பட்டது. அடுத்து 1977-ம் ஆண்டு நடந்த 6-வது சட்டசபை தேர்தலில் மறைந்த முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். தலைமையிலான அ.தி.மு.க. வெற்றிபெற்று ஆட்சி அமைத்தது. 1980-ம் ஆண்டு அவர் ஆட்சி கலைக்கப்பட்டது.

7-வது சட்டசபை தேர்தல் 1980-ல் நடந்து 1984 வரை அ.தி.மு.க.வின் பெரும்பான்மையோடு இயங்கியது. 1985-ம் ஆண்டில் எம்.ஜி.ஆர். உடல்நலக்குறைவு காரணமாக அமெரிக்காவில் சிகிச்சைப்பெற்று வந்தநேரத்திலே 8-வது சட்டசபைக்கான தேர்தல் நடந்தது. அந்த தேர்தலிலும் அ.தி.மு.க. வெற்றிபெற்று, 1987-ம் ஆண்டு எம்.ஜி.ஆர். மறைந்தவுடன், 1988 தொடக்கத்தில் கலைந்தது. 1989-ம் ஆண்டு 9-வது சட்டசபைக்கான தேர்தலில் தி.மு.க. வெற்றிபெற்று 1991-ம் ஆண்டுவரை ஆட்சியில் இருந்தது. 1991-ம் ஆண்டு அந்த ஆட்சி கலைக்கப்பட்டது. மீண்டும் 10-வது சட்டசபைக்கான தேர்தல் 1991-ம் ஆண்டு நடந்து அதில் ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. வெற்றிபெற்று ஆட்சி அமைத்தது. இந்த சட்டமன்றம் முழுமையாக 5 ஆண்டுகள் இயங்கியது. 1996-ம் ஆண்டில் 11-வது சட்டசபைக்கான தேர்தலில் தி.மு.க. வெற்றிபெற்று 2001-ம் ஆண்டுவரை பதவியில் இருந்தது. மீண்டும் 2001-ம் ஆண்டு நடந்த 12-வது சட்டசபைக்கான தேர்தலில் அ.தி.மு.க. வெற்றிபெற்று ஆட்சி அமைத்தது.

அடுத்து 2006-ம் ஆண்டில் 13-வது சட்டசபைக்கான தேர்தல் நடந்தது. இதில், தி.மு.க. வெற்றிபெற்று 2011 வரை கருணாநிதி தலைமையில் ஆட்சி அமைத்தது. மீண்டும் 2011-ம்  ஆண்டு  14-வது  சட்டசபைக்கான தேர்தலில் அ.தி.மு.க. வெற்றிபெற்று ஜெயலலிதா தலைமையில் ஆட்சி அமைத்தது. 15-வது சட்டசபைக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு நேற்று முதல் தேர்தல் நடத்தைவிதிகள் அமலுக்கு வந்துவிட்டன. புதிய திட்டங்கள் அறிவிக்கப்படவோ, செயல்படுத்தப்படுவோ கூடாது. தற்போது அனைத்து கட்சிகளின் பார்வையும் மே 16-ந் தேதியை நோக்கித்தான் இருக்கிறது. எல்லா அரசியல் கட்சிகளுக்கும் தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளில் உள்ள 5 கோடியே 80 லட்சம் வாக்காளர்கள்தான் எஜமானர்கள். தமிழ்நாட்டில் 162 தொகுதிகளில் ஆண் வாக்காளர்களைவிட, பெண் வாக்காளர்களின் எண்ணிக்கைதான் அதிகமாக இருக்கிறது. இதுபோல, இளைஞர்களின் ஓட்டும் கணிசமாக இருக்கிறது. பொதுவாக ஆண்களின் ஓட்டு பரவலாக பிரிவதற்கு வாய்ப்பிருக்கிறது. ஆனால், பெண்களின் ஓட்டும், இளைஞர் சமுதாயத்தின் ஓட்டும் பெரும்பாலும் ஒருபக்கமாக சாயும் என்பதால், இவர்களை குறிவைத்தே தேர்தல் அறிக்கைகளும் பிரசாரங்களும் இருக்கும். பிரசாரங்களில் அனல் பறக்கட்டும். ஆனால், தனிப்பட்ட தாக்குதல்களைக்கொண்ட ஆக்ரோஷங்கள் வேண்டாம், மாணவர்களின் தேர்வு நேரம் என்பதால், அவர்களுக்கு இடைஞ்சல் செய்யும் வகையில் ஆர்ப்பாட்ட பிரசாரம் வேண்டாம் என்பதே அரசியல் கட்சிகளுக்கு பொதுமக்கள் விடுக்கும் வேண்டுகோளாகும். இந்த தேர்தலில் நாங்கள்தான் ஆட்சி அமைக்கப்போகிறோம் என்று எல்லா அணிகளும் சொல்கிறார்கள். ஆனால், யார் ஆட்சி அமைத்தாலும், அது புதிய வரலாறு, புதிய சாதனையாகத்தான் இருக்கும்.

தேசபக்தி  வளரட்டும் 01/03/2016

“தாயிற் சிறந்த கோவில் இல்லை” என்பது காலம்காலமாக போற்றி வணங்கும் நிதர்சன உண்மையாகும். தாய்ப்பாசத்துக்கு ஈடு இணையே கிடையாது. அதுபோல, தாயைப்போற்றி வணங்கவேண்டும் என்பது யாரும் சொல்லிக்கொடுக்கத் தேவையில்லாத ஒரு உணர்வாகும். தாயைப் பழித்தவனை எந்த ஒரு இந்தியனும் விடவேமாட்டான். அந்த வகையில், நாம் பிறந்த இந்த நாட்டை தாய்க்கு இணையாகவே நாட்டுப்பற்று உள்ள ஒவ்வொருவரும் கருதுகிறார்கள். அதனால்தான், இந்திய நாட்டை தாய் நாடு என்று ஒவ்வொரு இந்தியனும் பெருமைபட அழைக்கிறான். தான் பிறந்த நாட்டை தாய் நாடாகக் கருதுவதால்தான், நாட்டை ‘பாரத மாதா’ என்று வணங்குகிறார்கள். ஆனால், இந்த நாட்டிலேயே பிறந்துவிட்டு, நாட்டுக்கு விரோதமாக செயல்படும் போக்கு ஆங்காங்கு முளைவிட்டுக்கொண்டு இருக்கிறது. நாட்டுக்கு விரோதமாக, நாட்டின் பாதுகாப்புக்கு பங்கம் விளைவிக்கும் செயலைச் செய்தவர்களை, செயற்கரிய செயலைச் செய்தவர்களாக, அவர்கள் புகழ்பாடும் செயலைச்செய்யும் போக்கு வளர்ந்துவருவது கவலைக்குரியது. எடுத்துக்காட்டாக, பாராளுமன்றத்தைக் குண்டுவீசி தகர்க்க முயன்ற சதிகாரன் தூக்கிலிடப்பட்ட நாளையே, நினைவில் போற்றத்தக்க நாளாக ஒரு பல்கலைக்கழகத்திலேயே கொண்டாடினார்கள் என்றும், தேசவிரோத கோஷங்களை எழுப்பினார்கள் என்றும் பலத்த விமர்சனங்கள் கூறப்படுகின்றன. நாட்டின் பாதுகாப்புக்கு ஊறு விளைவித்த ஒருவரை, மாணவர்களே அதுவும் பல்கலைக்கழகத்திலேயே கொண்டாடலாமா? என்று ஒருபக்கம் பலத்த எதிர்ப்பு கூறப்படுகிறது.

இதுமட்டுமல்லாமல், இந்தியா சுதந்திரம் அடைந்த நாளில் இருந்து, இந்த நாட்டுக்கு சொந்தமான காஷ்மீரை எப்படியும் கைப்பற்றிவிடவேண்டும் என்ற ஆக்ரோஷத்தில், பாகிஸ்தான் எல்லையில் போரிட்டு வருகிறது. மேலும், இந்தியாவுக்குள் பாகிஸ்தானில் பயிற்சிபெற்ற தீவிரவாதிகளை அலை அலையாய் அனுப்பி, பல வன்முறைச்செயல்களை அரங்கேற்றுகிறது. எந்த காஷ்மீரைக் காப்பாற்ற எண்ணற்ற ராணுவ வீரர்கள் தங்கள் இன்னுயிரை தியாகம் செய்தார்களோ, அந்த காஷ்மீரில் சமீபத்தில் இளைஞர்கள் ஒரு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். அதில் பாகிஸ்தான் கொடிகளை கையில் ஏந்தியிருக்கிறார்கள் என்ற தகவலும், இந்தியாவுக்கு எதிரான கோஷங்களைக் கிளப்பினார்கள் என்ற தகவலும், நாட்டுப்பற்று மிக்க நல்லோர் ஒவ்வொருவரின் ரத்தத்தையும் கொதிக்க வைக்கிறது. இந்த நிலையில், இந்த நாட்டு சுதந்திரத்துக்காக நமது முன்னோர்கள் எந்த அளவு ரத்தத்தைச் சிந்தி தியாகங்கள் செய்தார்கள் என்பதையும், தேசபக்தியையும் அனைவரிடையேயும் குறிப்பாக, மாணவர் சமுதாயத்தினரிடையேயும் புகட்டுவது இன்றியமையாததாகிவிட்டது. இதற்கு ஒரு நல்ல தொடக்கத்தை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி ஸ்மிரிதி இரானி செய்துவிட்டார். இந்தியாவில் 46 மத்திய பல்கலைக்கழகங்கள் இருக்கின்றன. இந்த பல்கலைக்கழகங்களில் தினமும் 207 அடி உயரமுள்ள கொடிக்கம்பத்தில் எல்லோருக்கும் நன்றாக தெரியும் வகையிலும், பெருமைசேர்க்கும் வகையிலும் தேசியக்கோடியை ஏற்றவேண்டும் என்றும், இதுபோல அனைத்து கேந்திரிய வித்யாலயா பள்ளிக்கூடங்களிலும் தினமும் தேசியக்கொடியை ஏற்றவேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. நிச்சயமாக இந்த முயற்சி மாணவர்களிடையே வலிமையான இந்தியா, ஒற்றுமையான இந்தியா என்ற வகையில் தேசபக்தியை வளர்க்கும். தேசியக்கொடியை ஏற்றும்போதும், அதைப்பார்க்கும்போதும் தானாடாவிட்டாலும், தன் தசை ஆடும் என்பதுபோல, தன்னையறியாமல் ஒவ்வொருவருக்கும் தாய்நாட்டின் மீது பக்தி ஏற்படும். இந்த நல்ல முயற்சியை மத்திய பல்கலைக்கழகங்களோடு விட்டுவிடக்கூடாது. நாட்டில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், பள்ளிக்கூடங்களிலும் செயல்படுத்தவேண்டும்.

பிஞ்சு மனதில் விதைக்கப்படும் தேசபக்தி, அவர்கள் வளரும்போது அசைக்கமுடியாத ஆலமரம் போல ஆழமாக வேரூன்றி இருக்கும். தேசியக்கொடி ஏற்றுவதோடு நின்றுவிடாமல், பாடத்திட்டங்களிலும் தேசபக்தியை உருவாக்கும் வகையில் பாடங்களைச் சேர்க்கவேண்டும். நிச்சயமாக இது கல்வி நிறுவன வளாகங்களில் தேசவிரோத சக்திகளின் நடவடிக்கைகளை அடக்கி ஒடுக்கும். கல்வி நிறுவனங்களோடு விட்டுவிடாமல், அனைத்து அரசு அலுவலகங்களிலும் தேசியக்கொடியை தினமும் ஏற்றவேண்டும்.

குறையும் உணவு உற்பத்தி 04/03/2016


உலகம் முழுவதும் மாறிவரும் பருவநிலை மாறுபாட்டினால் உணவு உற்பத்தி 18 சதவீதமாக குறையும் வாய்ப்பு உள்ளது என்று சமீபத்திய ஆய்வறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது. இந்த ஆய்வறிக்கையின் தகவல் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுற்றுச்சூழல் ஆராய்ச்சியாளர்களான டேவிட் லெக்கிளாரி, மைக்கேல் ஓபர்ஸ்டீனர் ஆகியோர் உலக அளவிலான சுற்றுச்சூழல் குறித்த ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

உலகம் முழுவதும் சுற்றுச்சூழலில் ஏற்பட்ட மாசு காரணமாக, பருவநிலையில் ஏராளமான மாற்றங்கள் ஏற்பட்டு உள்ளன. ஒருசில இடங்களில் பருவ மழை பொய்த்துவிட்டது. மற்ற இடங்களில் காலம் தவறி மழை பெய்து வருகிறது. இதனால் உணவு உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது.

ஒவ்வொரு நாட்டிலும் தொழிற்சாலை உற்பத்தியை அதிகரிப்பதற்காக ஏராளமான மரங்களும் காடுகளும் அழிக்கப்பட்டு வருகின்றன. இதனால் வான் மண்டலத்தில் கரியமில வாயுவின் அளவு அதிகரித்து வருகிறது. மக்களும், மரங்களும் சுவாசிப்பதற்கு தேவையான ஆக்சிஜனின் அளவும் குறைந்துவிட்டது. இதனால் அந்தந்த நாடுகளின் பருவநிலைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

இதுபோக மீதமுள்ள நீர்நிலைகளும் மாசுபட்டு வருகின்றன. இதைத் தடுப்பதற்கு, அந்தந்த நாடுகளுக்கு நீர்ப்பாசனத்துக்கும், சேமிப்பதற்கும் தேவையான அனைத்து கட்டமைப்பு வசதிகள் 25 சதவீதத்துக்கும் மேலாக மேற்கொள்ளப்பட வேண்டும். தகுந்த காலத்தில் இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்றால், வரும் 2050-ம் ஆண்டுக்குள் உலகம் முழுவதும் 18 சதவிகிதத்துக்கும் அதிகமான உணவு உற்பத்தி குறையும் வாய்ப்பு உள்ளது. இது தான் அந்த ஆய்வறிக்கையின் சாராம்சம்.

வனத்துறை  கற்றுத்தரும்  பாடம் 04/03/2016

தமிழக வனத்துறைக்கு 161 ஆண்டுகால பாரம்பரியம் உண்டு. 1855-ம் ஆண்டு சென்னை மருத்துவக்கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றிய டாக்டர் எச்.எப்.சி. கிளஹார்னுக்கு தாவரவியலில் இருந்த நிகரற்ற திறமையைக் கண்டு அப்போது இருந்த கவர்னர் ஹாரிஸ் பிரபு, டாக்டர் கிளஹார்னை அழைத்து, அரசுக்கு தனியாக ஒரு வனத்துறையை உருவாக்கும் பொறுப்பை கையில் கொடுத்தார். அதை திறம்பட செய்தவர் டாக்டர் கிளஹார்ன். 1869 வரை அவர்தான் வனத்துறை இன்ஸ்பெக்டர் ஜெனரலாக பணியாற்றினார். அவருக்குப்பின் ஏராளமான அதிகாரிகள் குறிப்பாக, ஆனைமலையில் ஹுகோ வுட் போன்ற அதிகாரிகளின் அளப்பரிய பணியினால்தான், தமிழக வனத்துறை செழித்து வளர்ந்தோங்கியது. தற்போது தமிழக வனத்துறை தலைவரான முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் என்.கிருஷ்ணகுமார் தலைமையில், உயர் அதிகாரிகளான வி.கணேசன், ராஜீவ் கே.ஸ்ரீவத்சவா ஆகியோரை ஆசிரியர் குழுவாகக்கொண்ட ஒரு குழு, ஆங்கிலத்தில் ‘ஹால் ஆப் பேம்’ அதாவது, ‘புகழ் பெற்றவர்கள் மண்டபம்’ என்று ஒரு நூலை உருவாக்கி உள்ளனர். இந்த நூலில், டாக்டர் கிளஹார்ன் முதற்கொண்டு சமீபகாலம்வரையில் தமிழக வனத்துறையை மேம்பட உருவாக்கும் பணியில் இருந்த பிராண்டிஸ், பெட்டோம், லாட்ஜ், கவுலி பிரவுன், கேம்பிள், ஹுகோ வுட், பிஷர், சி.ஆர்.ரங்கநாதன், வி.எஸ்.கிருஷ்ணசாமி, சி.ஏ.ஆர்.பத்ரன், டி.ஜெயதேவ், கே.ஆண்டியப்பன், கே.வெங்கட கிருஷ்ணன், டி.அச்சயா, எம்.ஏ.பாட்ஷா, எஸ்.கொண்டாஸ், ஜே.வில்சன், எஸ்.சங்கரமூர்த்தி, எஸ்.சண்முகசுந்தரம், வி.கிருஷ்ணமூர்த்தி, எம்.கிருஷ்ணன், ரிச்சர்டு ராட்கிளிப், இ.ஆர்.சி.டேவிதார், கே.எம்.மாத்யூ ஆகிய 25 தன்னலமற்ற சேவை புரிந்தவர்களின் செயல்கள் குறிப்பிடப் பட்டுள்ளன.

ஹுகோ வுட் ஆனைமலையில் வனத்துறை அதிகாரியாக பணியாற்றியவர். தமிழ்நாட்டில் தேக்குமரங்கள் செழிப்பாக ஓங்கி வளர்ந்து உயர்ந்து நின்றுகொண்டிருப்பதற்கு இவர்தான் மூலகாரணம். தினமும் காலையில் நடைபயணத்தின்போது தன் கால்சட்டையின் 2 பைகளின் நிறைய தேக்கு விதைகளை போட்டுக்கொண்டு காடுகளுக்குள் சென்று வாக்கிங் ஸ்டிக்கை வைத்து ஒரு குத்து குத்தி ஒரு விதையை போட்டு மூடிவிட்டு செல்வாராம். அவ்வாறு அவர் உருவாக்கிய காட்டில்தான் தனது கல்லறை இருக்கவேண்டும் என்று விரும்பிய அவரது விருப்பத்துக்கேற்ப, 1933-ம் ஆண்டு அவர் காலமானவுடன், அவர் வளர்த்த காடுகளுக்குள்ளேயே அவரது உடல் புதைக்கப்பட்டு இன்றளவும் கல்லறை இருக்கிறது. ‘என்னை நீங்கள் பார்க்க விரும்பினால், தயவு செய்து சுற்றிப்பாருங்கள்’ என்று எழுதப்பட்டுள்ளது. சுற்றிப்பார்த்தால் அவர் வளர்த்த காடுகள்தான் இருக்கின்றன. இன்றும் வனத்துறையில் புதிதாக வேலையில் சேருபவர்கள் எல்லோரையும் ஹுகோ வுட் கல்லறைக்கு அழைத்துச்சென்று காட்டுகிறார்கள். வனத்துறையில் இந்த 25 பேர்களைபோல, தமிழக அரசில் 36 துறைகள் இருக்கின்றன. ஒவ்வொரு துறையிலும் இந்த 25 பேர்களைபோல சிறப்பாக பணியாற்றியவர்கள் பலர் இருப்பார்கள். காவல்துறையை எடுத்துக்கொண்டால், மறைந்த போலீஸ் உயர்அதிகாரிகள் பராங்குச நாயுடு, ராஜரத்தினம், தேவசகாயம், ஸ்டிரேசி, எப்.வி.அருள், எஸ்.ஸ்ரீபால், இப்போது சந்தன கடத்தல் வீரப்பனை சுட்டுக்கொன்று புகழ்பெற்ற விஜயகுமார் என்று எவ்வளவோ அதிகாரிகள் தமிழ்நாட்டில் இருந்திருக்கிறார்கள். புதிதாக பயிற்சிபெறும் போலீசார் முதல் அதிகாரிகள்வரை உள்ள அனைவருக்கும், பணியில் இருப்பவர்களுக்கும் இதுபோன்ற அதிகாரிகள் சிக்கலான சமயங்களில் அதை எப்படி சமாளித்து பணியை திறம்பட ஆற்றினார்கள் என்பதை விளக்கும் நூல் வெளியிடப்பட்டால், சிறந்த வழிகாட்டியாக இருக்கும். ஆனால், வனத்துறைபோல ஆங்கிலத்தில் மட்டும் வெளியிடாமல், தமிழிலும் வெளியிட்டால், கடைநிலை ஊழியர்களுக்கும், நிச்சயமாக அவர்களுக்கு முன்னால் பணியாற்றிய சீரிய பணிகளை அந்த துறைக்காக ஆற்றியவர்களின் அனுபவங்களை பாடங்களாக புரியவைக்க முடியும். தமிழ்நாட்டில் உள்ள 13 லட்சத்து 98 ஆயிரத்து 798 அரசு ஊழியர்களுக்கும், ஒவ்வொரு துறையிலும் அந்த துறையை மேன்மையாக வைத்திருக்க உதவியவர்களின் தியாகங்களை, சீரிய பணிகளை கற்றுக்கொடுக்க வனத்துறை வழிகாட்டிவிட்டது. மற்றவர்களும் பின்பற்றவேண்டும்.

Tuesday, March 1, 2016


விரல் நுனியின் மகத்துவம் 01/03/2016

 மனிதனுக்கு விரல் நுனியின் மகத்துவம் தெரிவதில்லை. விரல் நுனியை மிக சாதரணமாக நினைக்கிறார்கள். ஆனால், அந்த விரல் நுனியை மட்டுமே நம்பி தினமும் பல காரியங்களை நாம் செய்து வருகிறோம். முக்கியமாக பார்வையற்றவர்கள், அரிசியா? உமியா? என்று தொட்டுப் பார்த்து கண்டுபிடிப்பது, விரல் நுனியில் உள்ள அடர்த்தியான கொழுப்பு அறைகள் நிரம்பிய திசுக்களும், அவற்றை போர்த்தியுள்ள பிரத்யேகமான தோலும் சேர்ந்து தான் இவற்றை செய்கின்றன.

விரல் முனை எலும்பு நகத்தின் நுனி வரை நீளுவதில்லை. கிட்டத்தட்ட நகத்தின் பாதி பகுதியில் அது நின்று விடுகிறது. அந்த எலும்புக்கு மேல் பகுதியில் தான் குஷன் போன்ற திசுக்கள் உள்ளன. இவற்றின் தனித்தன்மையால் தான் நாம் வேகமாக ரூபாய் நோட்டுகளை எண்ண முடிகிறது. கிட்டார் போன்ற இசைக்கருவிகளை மீட்ட முடிகிறது.

நாம் வளர, வளர, நம் விரல் நுனியின் செயல் திறனும் வளர்ந்து கொண்டே இருக்கும். சிறுவயதில் சாக்பீஸ் கொண்டு எழுதும் போது, எவ்வளவு முறை சாக்பீஸை உடைத்திருப்போம். ஆனால், பெரியவர்களாக ஆன பிறகு சாக்பீசால் சரளமாக தொடர்ந்து எழுத முடிகிறதே..! அது எப்படி?

விரல் நுனியின் செயல் திறன் வளர்ச்சியால், திறமை வளர்ந்தாலும் விரல் நுனியின் உருவம் பெரிதாவதில்லை. அப்படி பெரிதாகவும் கூடாது. அதிகம் புகைப்பவர்கள், மது அருந்துபவர்களின் விரல் நுனிகள் திடீரென்று பெரிதாவது இயல்பு. அதேபோல் கல்லீரல் கோளாறுகளால் விரல் நுனிகள் அசாதாரணமாக பெரிதாவது உண்டு.  ஒவ்வொரு விரல் நுனியும் உணர்ச்சி மிகுந்தவைதான். இவற்றில் மிக அதிகமான ரத்த ஓட்டம் உண்டு. அதனால்தான் ரத்த பரிசோதனைக்கு பல நேரங்களில் விரல் நுனியில் இருந்தே ரத்தம் எடுக்கிறார்கள். தவிர உணர்வு நரம்புகளும் இங்கு குவிந்துள்ளன.

கட்டை விரல் மற்றும் ஆள்காட்டி விரல்களின் நுனிகள் மிகவும் அதிக அளவில் உணர்சிகளை மூளைக்கு அனுப்பும் சக்தி கொண்டவை. கண்களை மூடிக்கொண்டு நாணயத்தின் ஒரு பக்கத்தை விரல் நுனியால் தடவிப் பார்த்து அது பூவா, தலையா என்று சரியாக் சொல்ல முடிவது இதனால்தான்.

விரல் நுனியில் துருப் பிடித்த ஊசியோ, முள்ளோ குத்தி விட்டால் ‘செப்டிக்‘ ஆகி ஒரு பழுத்த இலந்தம் பழம் போல் ஆகி விடுகிறது. அத்துடன் விண்ணென்று தெறிக்கும் வலியும் சேர்ந்து கொள்ளும். இதை அகற்ற உடனடியாக ஆன்டிசெப்டிக் மருந்துகளை அளித்து, பிறகு சிறிய அறுவை சிகிச்சை மூலம் அங்குள்ள சீழை வெளியேற்றி விட வேண்டும். இல்லாவிட்டால் விரல் நுனி தனது உருவத்தையும், மெத்தென்ற தன்மையையும் இழக்க நேரிடும். எனவே விரல் நுனி இன்றியமையாதது என்பது புரிகிறதல்லவா!

ராசிகளை கண்டறிந்தவர்கள் 02/03/2016

எகிப்தின் ஒரு பகுதியாக இருந்தது, அஸ்சிரிய பேரரசு. அதனை வீழ்ச்சியுறச் செய்த நெபோபோலேசர் கி.மு.625-ல் தமது ஆட்சிப் பகுதியை பாபிலோனிய அரசாக அறிவித்துக் கொண்டார். பின்னர் பாபிலோனியா என்ற பெயர் மாறி ‘கால்டியா‘ என்று அழைக்கப்பட்டது. நெபோபோலேசருக்குப் பின் அவருடைய மகன் நெப்யூசட்னெசர் மன்னரானார்.

பாபிலோனிய ஆட்சியில் மிகப் புகழ் பெற்ற காலகட்டம் இவருடையதுதான். இவர் மீடிய இளவரசியை மணந்து மீடிய அரசை நட்பாக்கிக் கொண்டார். இதன்மூலம் வடஎல்லை,  பாதுகாப்பு மிக்கதாக ஆனது. அவர் கார்க்கிமிஷ் போரில் எகிப்தையும் அதன் ஆதரவாளர்களையும் தோற்கடித்தார். ஜெருசலேமை சூறையாடி யூதர்கள் பலரை சிறைபிடித்தார். இவரது ஆளுகையில் யூப்ரடீஸ் பள்ளத்தாக்கு, சிரியா, பாலஸ்தீனம் முதலியவை உட்பட்டிருந்தன.

இவர் சிறந்த போர் வீரர் மட்டுமல்ல பல வியக்கவைக்கும் கட்டிடங்களையும் கட்டினார். இவர் காலத்தில் களிமண்ணே கட்டிடப் பொருளாக இருந்தது. அதைக் கொண்டே மிகப்பெரிய கட்டிடங்களை கட்டினார். அரண்மனை மாடிகளில் அழகிய தோட்டங்களை அமைத்தார். உலகில் முதல் மாடித் தோட்டத்தை அமைத்தவர் இவர்தான்.

தூரத்தில் இருந்து பார்க்கும்போது இவை ஆகாயத்தில் தொங்கிக் கொண்டிருக்கும் தோட்டங்கள் போல் காணப்படும். அதனால் இதை பாபிலோனிய தொங்கும் தோட்டம் என்று அழைத்தார்கள். பண்டைய ஏழு அதிசயங்களில் இதுவும் ஒன்றாக இருந்தது.

அறிவியலிலும், மருத்துவத்திலும், ஜோதிடத்திலும் கால்டியர்கள் வல்லவர்களாக இருந்தனர். 12 ராசி சக்கரங்களை அமைத்தவர்கள் இவர்கள்தான் என்கிறது வரலாறு. நட்சத்திரங்களால் பூலோக வாசிகளின் வாழ்க்கை பாதிக்கிறது என்று நம்பினர். கிரகணங்களை முன்கூட்டியே கணக்கிட்டுக் கூறினர்.

நெப்யூசட்னெசருக்குப் பின் வாரிசு பிரச்சினை எழுந்தது. சுயநலப் பிறப்புகள் ஒன்று கூடி உள்நாட்டு குழப்பத்தை ஏற்படுத்தினர். இறுதியில் நபெனிடஸ் என்ற அறிஞர் மன்னராக்கப்பட்டார். இவர் அரச விவகாரங்களில் அக்கறை செலுத்தவில்லை. கி.மு. 539-ல் பாரசீக பேரரசர் சையாஸ் பாபிலோனியாவை கைப்பற்றி பாரசீகத்துடன் இணைத்துக் கொண்டார்.