வானிலையின் மிகப்பெரிய மாற்றங்கள்
28/01/2016
செயற்கைக் கோள்கள் பொதுவாக 650 - 1500 கிலோ மீட்டர் உயரத்தில் நீண்ட வட்டத்தில் சுற்றி வருகின்றன. பொதுவாக இவை ஒரு தடவை பூமியைச் சுற்றி வர 100 நிமிடங்கள் எடுத்துக்கொள்கின்றன. ஒரு நாளில் சுமார் 14½ முறை சுற்றுவதாக கணக்கிட்டு உள்ளனர்
1974-ம் ஆண்டு ஏப்ரல் 3, 4-ந் தேதிகளில் மட்டும் அமெரிக்காவின் 12 மாநிலங்களில், சுமார் 148 முறை சூறைக் காற்று அடித்து கதி கலங்க வைத்துள்ளது. இந்தியாவில் தற்போது 20 கிலோ மீட்டர் உயரம் வரையில் காற்றைப் பற்றிய புள்ளி விவரங்களைச் சேகரிக்க இயலும்.
மின்னல் அடிக்கும்போது குடை பிடித்து நடப்பது விபத்தில் முடியும். கடும் மழையில் காருக்குள் அமர்ந்திருப்பது மிக பாதுகாப்பானது ஆகும். மேலும் சூறைக்காற்றை வங்காளிகள் ‘பைசாகி பேரழிவு‘ என்றும் மற்ற வட நாட்டினர் ‘யானையின் தும்பிக்கை‘ எனவும் அழைக்கின்றனர்.
சென்னையில் பதிவான மிகக் குறைந்த வெப்பம் 15.6 டிகிரி செல்சியஸ். இது 1969-ம் ஆண்டு ஜனவரி 27-ந் தேதி பதிவானது. இன்று உலகம் முழுவதும் சுமார் 12,500 வானிலை ஆராய்ச்சி மையங்கள் கணினி மூலம் இயக்கப்பட்டு, தட்பவெப்ப தகவல்கள் வெளியிடப்படுகின்றன. கீழ்மட்ட அளவில் காணப்படும் கருமேகங்களை ‘நிப்போ ஸ்ட்ராட்டஸ்’ என அழைக்கின்றனர். இவை 10 முதல் 15 நிமிடம் வரை மழை தரும் சக்தி படைத்தவை.
விமானம் 30 ஆயிரம் அடிக்கு மேல் பறக்கும்போதுதான் நகருவதே தெரியாமல் செல்லும். 1935-ம் வருடம் ஜனவரி 16-ந்தேதி அன்று குளிரினால் டெல்லி, போபால் போன்ற இடங்களில் வெப்பம் 0.6 டிகிரி செல்சியசுக்கு இறங்கி விட்டது. இவையெல்லாம் வானிலையில் ஏற்பட்ட மிகப் பெரிய மாற்றங்கள் ஆகும்.
No comments:
Post a Comment