Search This Blog

Sunday, February 7, 2016


 வானில் ஓர் அதிசயம் (31/01/2016)

 வானில் அவ்வப்போது ஏதாவது சுவாரஸ்யமான மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. அப்படியொரு மாற்றம் இப்போதும் நடந்து கொண்டிருக்கிறது. அது விண்வெளியில் நட்சத்திரங்களையும், கோள்களையும் பார்த்து ரசிப்பவர்களுக்கு  அரிய விருந்தை படைத்துக்கொண்டிருக்கிறது.  இந்த அதிசயம் வருகிற (பிப்ரவரி) 20-ந்தேதி வரை நீடிக்கும். இது ஒரு அபூர்வ விஷயமாகும். ஆம், ஐந்து கோள்கள் அதிகாலை வானில் வரிசையாக ஒரே நேரத்தில், சாதாரணமாக, தொலை நோக்கி இல்லாமல் பார்ப்பவர்களுக்குக் தெரியும்.  இவை புதன், வெள்ளி, செவ்வாய், சனி, வியாழன் (குரு) ஆகிய கிரகங்கள் (கோள்கள்) 10 ஆண்டுகளுக்கு மேலான காலத்தில், இது போன்று வரிசையாக அணிவகுத்து ஒரே நேரத்தில் காணும் விதமாக வரும் இந்த கிரகங்களின் அணிவகுப்பு இப்போது நடந்து கொண்டிருக்கிறது.  இந்தக் காட்சி ஜனவரி 27-ல் தொடங்கி விட்டது.  பிப்ரவரி 20 வரை இது தெரியும். புதன் கிரகம் இந்தக் காலகட்டத்தின் இறுதியில் சற்று மங்கலாகத் தெரியும் என்று வல்லுநர்கள் கூறுகிறார்கள். பொழுது புலர்வதற்கு 45 நிமிடங்களுக்கு முன்பு இந்த அதிசயத்தை பார்த்து ரசிக்கலாம். இந்த ஐந்து கோள்களும், அவற்றின் சுற்று வட்டப் பாதையில் இருந்து, சூரியனின் தோற்றப்பாதை என்று அறியப்படும் திசையில் அணிவகுப்பதால் இந்த விஷயம் நடைமுறையில் சாத்தியமாகிறது.  இது பூமியின் சுற்றுப்பாதைக்கு அருகே ஒரே வரிசையில் அணிவகுப்பதைத்தான் குறிக்கிறது. இதே போன்றதொரு அணிவகுப்பு வருகிற ஆகஸ்டு 13-ந்தேதியிலிருந்து 19-ந்தேதி வரை மீண்டும் நடக்கும்.அந்த சமயத்தில் இந்த அணிவகுப்பு அந்தி சாயும் நேரத்தில் நடைபெறும். அப்போது பூமியின் தென்பாதியில் வசிக்கும் மக்கள் மட்டும் இதை நன்றாகப் பார்க்க முடியும். கடந்த முறை இதே போன்ற தொரு அணிவகுப்பு டிசம்பர் 2004-ல் இருந்து ஜனவரி 2005 வரை நடந்தது.  இப்போது மீண்டும் வானில் தோன்றியிருக்கும் இந்த அதிசயத்தை நாமும் கண்டு களிப்போம்.

No comments:

Post a Comment