டி.வி. ரிமோட்டுக்காக பேரனை கத்தியால்
குத்திய பாட்டி
Search This Blog
Thursday, October 15, 2015
முதல் திரை முத்தம்
இந்திய சினிமாவின் தந்தை என்று கொண்டாடப்படும் தாதா சாகேப் பால்கே எடுத்த
‘ராஜா ஹரிச்சந்திரா‘ (1913) படம் தான் இந்தியாவின் முதல் முழு நீள திரைப்படம். இந்த
படத்தில் நடித்த அனைவருமே ஆண்கள்தான். அன்று பெண்கள் சினிமாவில் நடிக்க
முன்வராததால் பெண்கள் வேடத்திலும் ஆண்களே நடித்தனர்.
முதன் முதலாக இந்திய சினிமாவில் பெண்கள் நடிக்கத் தொடங்கியது 1914-ல்.
தாதாசாகேப் பால்கேயின் இரண்டாவது படமான ‘மோகினி பஸ்மசூர்‘ என்ற படத்தில்
துர்காபாயும், அவருடைய மகள் கமலாபாய் கோகலேவும் நடித்தனர். பெண்களை திரையில்
பார்த்த மக்கள் ஆச்சரியப்பட்டனர். முதன் முதலாக அதிக நாட்கள் ஓடி வெற்றிப் படம் என்று வசூலில் சாதனை புரிந்த படம் ‘லங்கா தகன்‘ (1921). இந்த படம் மும்பை நகரில் கிர்காம் என்ற இடத்தில் இருந்த ‘வெஸ்ட் எண்டு‘ என்ற தியேட்டரில் 23 வாரங்கள் ஓடி சாதனை புரிந்தது.
தடை செய்யப்பட்ட முதல் இந்திய சினிமா ‘பகத் விதூர்‘ (1921). படத்தின் தயாரிப்பாளரே மகாத்மா காந்தி வேடத்தில் நடித்தார். அரசியல் காரணங்களுக்காக இந்த படம் தடை செய்யப்பட்டது. ஆனாலும் ஒருசில மாநிலங்களில் இந்த படம் மாபெரும் வெற்றிப் படமாக ஓடியது.
இந்திய சினிமாவில் முதல் தணிக்கைக்குழு (சென்சார் போர்டு) 1920-ல் பாம்பே, கல்கத்தா, மதராஸ், ரங்கூன் (இன்றைய மியான்மர்) ஆகிய நகரங்களில் அமைக்கப்பட்டது. 1927-ல் லாகூரில் மேலும் ஒரு திரைப்பட தணிக்கைக்குழு அமைக்கப்பட்டது. சமூகத்தை நையாண்டி செய்த முதல் படம், 1921-ல் வங்க மொழியில் வெளியான ‘பிலேத் போராட்‘ என்பது. இந்த படம் காதலையும், கிழக்கத்திய, மேற்கத்திய முரண்பாடுகளையும் திறம்படச் சொன்னது.
இந்தியாவின் முதல் சரித்திர படம் 1923-ல் வெளியான ‘சிங்காகாத்‘ என்ற படம் தான். இந்தப் படம் மராட்டிய சக்கரவர்த்தி சத்ரபதி சிவாஜியின் போர்ப்படையைப் பற்றிய ஒரு சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது. ‘தேவதாஸ்‘ திரைப்படம் இந்தியாவின் பல மொழிகளில் 12 முறை படமாக்கப்பட்டிருக்கிறது. முதல் தேவதாஸ் 1928-ல் வெளிவந்தது. அதேபோல் முதல் மொகலாய வரலாற்றுப் படம் 1923-ல் ‘நூர்ஜகான்‘ என்ற பெயரில் வந்தது.
இந்திய சினிமாவில் முதல் முத்தக் காட்சி 1933-ல் வெளிவந்த ‘கர்மா‘ படத்தில் இடம் பெற்றது. பிரிட்டிஷ் இந்தியாவில் சினிமா முத்தத்திற்கு தடையில்லை. அதனால் மான்ஷு ராய், தேவிகா ராணி ஆகிய இருவரும் தொடர்ந்து நான்கு நிமிடங்கள் முத்தமிட்டுக் கொண்டது தான் இந்தியாவின் முதல் திரை முத்தம்.
இந்தியாவின் முதல் கவர்ச்சி நடிகை இத்தாலியைச் சேர்ந்த நடிகை சினோரின்னா மனெல்லி என்ற பெண்தான். இவர் 1922-ல் நடித்த ‘பதிபக்தி‘ படத்தில் உடல் பாகங்கள் எல்லாம் வெளியே தெரியும் வண்ணம் மிக மெல்லிய ஆடை அணிந்து ஆடிய நடனக் காட்சியை மீண்டும் மீண்டும் தணிக்கை செய்தனர். முதல் கவர்ச்சியே அவ்வளவு மோசமாக இருந்திருக்கிறது.
Wednesday, October 14, 2015
சரியானதை செய்தால் வெற்றி (கன்பூசியஸ்)
சீனாவில் மன்னர்களின் ஆதிக்கத்தால் மக்கள் கடும் சித்ரவதைகளை அனுபவித்துக்
கொண்டிருந்த காலம். மேலும் அதிக வரி விதிக்கப்பட்டதால் மக்கள் வறுமையில் வாடினர்.
அப்போது தோன்றியவர்தான் கன்பூசியஸ் என்ற தத்துவஞானி. ‘அதிக வரியும், அதிகமான தண்டனைகளும் கொடுங்கோல் ஆட்சியின் இலக்கணங்கள். அரசன் என்பவன் தகுதியினால் தேர்வு செய்யப்பட வேண்டும். அதைவிட்டு பரம்பரை மட்டுமே கொடுக்கும் தகுதியாக இருக்கக்கூடாது. மக்களுக்கு மகிழ்ச்சியும் நல்வாழ்வும் தர முடியாவிட்டால் அவர்கள் ஆட்சியில் நீடிக்கும் உரிமை அற்றவர்கள்’ என்று கூறி ஒரு அரசன் எப்படி நடக்க வேண்டும் என்று வகுத்துச் சொன்னவர் அவர்.
இவரின் உருக்கமான பேச்சைக் கேட்டு மக்கள் மாபெரும் கூட்டமாக திரண்டனர். இப்படி மக்கள் பேராதரவு பெற்ற ஒருவரை கைது செய்தால் நாடு முழுக்க கலவரம் நடக்கும் என்பதை முன்கூட்டிய தீர்மானித்த அந்த அரசன். கன்பூசியசை சட்டத்துறை அமைச்சராக நியமித்தான். அவருக்கென்று வேலை ஆட்கள், பெரிய மாளிகை, மனதை நிறைத்த சம்பளம். இவற்றையெல்லாம் கொடுத்து, புதிய சட்டங்களை இயற்றும் படி மன்னன் கூறினான். அவரும் இரவு, பகல் பாராமல் உழைத்து, மக்கள் நலனுக்காக புதிது, புதிதான சட்டங்களை இயற்றினார். அதை எல்லாம் மன்னரிடம் ஒப்படைத்தார்.
வெகுகாலம் கடந்தும் கன்பூசியஸ் எழுதிக்கொடுத்த ஒரு சட்டம் கூட அமல் படுத்தப்படவில்லை. சற்று தாமதமாக இந்த பதவியினால் எந்த ஒரு பயனும் ஏற்படாது என்பதை உணர்ந்த கன்பூசியஸ் பதவியில் இருந்து விலகினார். ‘ஒரு செல்வந்தானாக வாழாமல், ஏன் பிச்சைக்காரன் போல் வாழ ஆசைப்படுகிறீர்கள்?’ என்று மன்னன் கோபத்தோடு கேட்டான். ‘’எது வசதியானதோ அதைச் செய்யாதே! எது சரியானதோ அதைச் செய்! என்று என் மனம் என்னை தொந்தரவு செய்கிறது’ என்று சொல்லிவிட்டு வெளியேறினார்
கன்பூசியஸ். சிறு வயதிலேயே பழைய இலக்கியங்கள், அரசியல் சட்டங்கள், மதக்கோட்பாடுகள் என எல்லாவற்றையும் படித்து முடித்தார். அவற்றைப் பற்றிச் சிந்திப்பதும், விவாதிப்பதையும் தனது தனிப்பெரும் குணமாக வளர்த்து கொண்டார். இளைஞர் ஆனதும், ஆர்வம் உள்ள மாணவர்களுக்குப் பாடம் சொல்லித் தந்தார். மதங்கள் எதுவும் மக்கள் துன்பத்துக்குத் தீர்வு சொல்லவில்லை என்பதால், அவற்றை புறக்கணித்தார்.
அடுத்த பன்னிரண்டு ஆண்டுகள், சீனாவில் உள்ள பல்வேறு இடங்களுக்கு பயணம் செய்து, மக்கள் மனதில் புரட்சிக் கருத்துகளை விதைத்தார். பல நாடுகள் அவரைத் தங்கள் எல்லைக்குள்ளேஅனுமதிக்காமல் விரட்டி அடித்தன.
‘ஒவ்வொரு தனிப்பட்ட மனிதனிடமும் தன்மானம், பெருந்தன்மை, கபடமின்மை, உண்மையாக இருத்தல், அன்பு என்ற ஐந்து குணங்கள் இருக்க வேண்டும். அப்போதுதான் தனி மனிதன் இன்பமாக இருக்க முடியும். தனி மனிதன் நிம்மதியாக இருந்தால் நாடும் சிறப்பாக இருக்கும்‘ என மனிதர்களின் துன்பங்களுக்குத் தீர்வு சொன்னார்.
அதைப்போலவே மனிதர்கள் வெற்றி பெறுவதற்கும் கன்பூசியஸ் ஒரு சூத்திரம் சொல்லிக் கொடுத்துள்ளார். அது, ‘மனிதர்கள் எப்போதும் எளிதான செயல்களை செய்யவே ஆசைப்படுகிறார்கள். அது எப்போதும் சரியல்ல. வெற்றி பெற வேண்டுமானால், எது வசதியானதோ அதைச் செய்யாதீர்கள், எது சரியானதோ அதைச் செய்யுங்கள்!’ என்றவர், இதை தன் வாழ்நாள் முழுதும் கடைபிடித்தார்.
ஆஸ்திரேலியாவுக்கு குடிபெயரும்
விவசாயிகள்
பணத்துடன் எரிக்கப்பட்ட பிணம்
உலகின் விலை உயர்ந்த பிஸ்கட்
உணவு உற்பத்தியை குறைக்கும்
சுற்றுச்சூழல்
உலகம் முழுவதும் மாறி வரும் பருவநிலை மாறுபாட்டினால் உணவு உற்பத்தி 18
சதவீதமாக குறையும் வாய்ப்பு உள்ளது என்று சமீபத்திய ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.
இந்த ஆய்வறிக்கையின் தகவல் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சுற்றுச்சூழல் ஆராய்ச்சியாளர்களான டேவிட் லெக்கிளாரி, மைக்கேல் ஓபர்ஸ்டீனர்
ஆகிய இருவரும் உலக அளவிலான சுற்றுச்சூழல் குறித்த ஆய்வறிக்கை ஒன்றை
வெளியிட்டுள்ளனர். அதன் சாராம்சம் வருமாறு:-
உலகம் முழுவதும் சுற்றுச்சூழலில் ஏற்பட்ட மாசு காரணமாக பருவநிலையில் ஏராளமான
மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ஒருசில இடங்களில் பருவ மழை பொய்த்துவிட்டது. மற்ற
இடங்களில் காலம் தவறி மழை பெய்து வருகிறது. இதனால் உணவு உற்பத்தி கடுமையான அளவில்
பாதிக்கப்பட்டு வருகிறது.ஒவ்வொரு நாட்டிலும் தொழிற்சாலைகளில் உற்பத்தியை அதிகரிப்பதற்காக எராளமான மரங்களும் காடுகளும் அழிக்கப்பட்டு வருகின்றன. இதனால் வான் மண்டலத்தில் கரியமில வாயுவின் அளவு அதிகரித்து வருகிறது. மக்களும் மரங்களும் சுவாசிப்பதற்கு தேவையான ஆக்சிஜனின் அளவு குறைந்துவிட்டது. இதனால் அந்தந்த நாடுகளின் பருவநிலைகளில் மாற்றம் ஏற்பட்டு உள்ளது.
இதுபோக எஞ்சியுள்ள நீர்நிலைகளும் மாசுபட்டு வருகின்றன. இதைத் தடுப்பதற்கு, அந்தந்த நாடுகள் நீர்ப்பாசனத்துக்கும் சேமிப்பதற்கும் தேவையான அனைத்து கட்டமைப்பு வசதிகளை 25 சதவீதத்துக்கும் மேலாக மேற்கொள்ள வேண்டும். தகுந்த காலத்தில் இத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளவில்லை என்றால், வரும் 2050-ம் ஆண்டுக்குள் உலகம் முழுவதும் 18 சதவீதத்துக்கும் அதிகமாக உணவு உற்பத்தி குறைய வாய்ப்பு உள்ளது. இவ்வாறு ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கிறார்கள். விழித்துக்கொள்ளுமா, எல்லா நாடுகளும்?
Subscribe to:
Posts (Atom)