Search This Blog

Sunday, February 21, 2016


ஹிட்லர் நன்மையும் செய்துள்ளார் 21/02/2016

உலகில் யாரும் 100 சதவீதம் நல்லவர்களும் இல்லை. 100 சதவீதம் கெட்டவர்களும் இல்லை. உலகமே கொடுங்கோலனாக நினைக்கும் ஹி ட்லர் தான் ஜெர்மனியின் வளர்ச்சிக்கு அடிப்படையானவர். பின்னாளில் அவர் நடத்திய கொடுங்கோல் ஆட்சி காரணமாக அவருடைய சாதனைகள் யாருக்கும் தெரியாமல் போய்விட்டன.

ஹிட்லரின் ஆரம்ப கால சாதனைகளை பார்த்தால் ஜெர்மனியின் சரித்திரத்தில் தோன்றிய மிகச்சிறந்த மாமனிதராகவே இருந்தார். முதலாம் உலகப்போர் முடிந்திருந்த காலத்தில் ஜெர்மனியின் பொருளாதாரம் மிகவும் மோசமாக இருந்தது. மக்களை வறுமை வாட்டியெடுத்தது.

இதை மூன்றே வருடங்களில் சரி செய்தவர், ஹிட்லர். 1933-ல் ட்லர் சான்சலர் பதவியை ஏற்றபோது 60 லட்சம் மக்கள் வேலை இல்லாமல் இருந்தார்கள். 1936-ல் ஜெர்மனியில் வேலையில்லாதவர் என்று ஒருவர்கூட இல்லை. இத்தனைக்கும் ஹிட்லருக்கு பொருளாதாரம் பற்றி ஒன்றும் தெரியாது. அவருடைய அமைச்சரான ஜால்மர் ஷ்ஹாக்ட் என்பவர்தான் ஜெர்மனியை அடியோடு மாற்றிக்காட்டினார்.

ஹிட்லரின் ஆட்சியில் வேலைக்கேற்ற ஊதியம், போனஸ், விலைவாசி எல்லாம் சரியாக நிர்ணயிக்கப்பட்டது. வாகனங்கள் வேகமாக செல்ல நீண்ட சாலைகளை உலகில் முதன்முதலாக அமைத்தவர் ஹிட்லர்தான். இன்றைய நமது நான்கு வழிச்சாலையை அறிமுகப்படுத்தியவர் ஹிட்லர்தான். முதியவர்களுக்கு பென்சன், அவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் இலவச மருத்துவம், எல்லோருக்கும் மருத்துவ காப்பீடு என்று வரிசையாக ஹிட்லர் அறிவித்த ஒவ்வொன்றும் மிகப் பெரிய புரட்சி திட்டங்கள்.

போர்ஷ் கார் நிறுவன அதிபர் பெர்டினான்ட் போர்ஷை அழைத்து சாமானியர்களும் வாங்கும் விலையில் கார் தயாரிக்குமாறும் கூறினார். பின்பகுதியில் என்ஜின் வைத்து தயாரிக்கப்பட்ட அந்த சிறிய காருக்கு போக்ஸ்வேகன் என்று பெயரிட்டார். இன்று அந்தக் கார்கள் உலகம் முழுவதும் புகழ்பெற்று விளங்குகின்றன.

தொழிற்சாலைகளால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படக்கூடாது என்பதில் கண்டிப்பாக இருந்த ஹிட்லர், அதற்கென சட்டமும் கொண்டுவந்தார். அன்றைய தொழிற்சாலைகளும் அதற்கான சாதனங்களை பொருத்திக்கொண்டன. அன்று ஜெர்மனியில் ஓடிய நதிகள் அனைத்தும் சுத்தமாக இருந்தன. ஹிட்லர் காலத்தில் எந்த தொழிற்சாலையிலும் சம்பள பிரச்சினை, வேலை நிறுத்தம் கிடையாது. முதலாளிகள் பக்கமும் சாயாமல், தொழிலாளர்கள் பக்கமும் சாயாமல் நடுநிலை வகித்தார். பிரச்சினை ஏற்படுத்துபவர்கள் முதலாளியாக இருந்தாலும் தொழிலாளியாக இருந்தாலும் சிறையில் தள்ளினார்.

ஹிட்லர் ஆட்சிப்பொறுப்பை ஏற்ற போது ஜெர்மனி ராணுவத்தில் ஒரு லட்சம் வீரர்கள் இருந்தனர். அவர்களிடம் நவீன ரக துப்பாக்கிகள் கிடையாது. நான்கே ஆண்டுகளில் நவீன போர் விமானங்கள், பீரங்கிகள், துப்பாக்கிகள், டாங்கிகள் கொண்ட ஐரோப்பாவில் மிக சக்தி வாய்ந்த ராணுவமாக மாற்றினார்.

ஹிட்லரின் 12 வருட ஆட்சியில் முதல் 5 வருடமும் அவர் செய்த சாதனைகள், உலக பொருளாதார மேதைகளை வியப்பில் ஆழ்த்தின. ஆனால், அதன்பின்னர், ட்லர் ஒரு கொலைகார சாத்தானாக மாறத் தொடங்கியதால், அது மட்டுமே இன்றும் பேசப்படுகிறது. சாதனைகள் மறக்கப்பட்டு விட்டன.

No comments:

Post a Comment