Search This Blog

Thursday, July 2, 2015



ஆட்டை சாப்பிடும் தாவரம்

என்ன இது ஆடுதானே தாவரத்தை சாப்பிடும்..! இங்கு ஆட்டை சாப்பிடும் தாவரம் என்று இருக்கிறதே என்கிறீர்களா..? இயற்கையின் வினோதம் இது. ஏற்கனவே வீனஸ் பிளய் ட்ராப், பிட்ஷர் போன்ற தாவரங்கள் சிறு சிறு பூச்சிகளை உணவாக உட்கொள்கின்றன. ஆனால், இந்த தாவரங்கள் அந்த வகையில் இல்லை. செம்மறி ஆட்டை சாப்பிடும் தாவரம் என்று விஞ்ஞானிகள் அழைக்கும் தாவரம், புவா சிலன்ஸிஸ் என்பதாகும். இதன் பூர்வீகம் சிலி. இது 10 அடிக்கு மேல் உயரமாக புதர் போல் வளரக்கூடியது. நீண்ட முட்களைக் கொண்டது. இந்த முட்கள்தான் இவற்றை விலங்குகளிடம் இருந்து பாதுகாக்கின்றன. ஆனால் இந்த தாவரங்களிடம் இருந்து விலங்குகளை பாதுகாக்க விலங்குகளுக்குத்தான் எந்த ஒரு தற்காப்பு வசதியையும் இயற்கை கொடுக்கவில்லை. மாறாக, இந்த தாவரத்தின் நீண்ட கொக்கி போல் வளைந்து இருக்கும் முட்கள் விலங்குகளை தப்பிக்க முடியாமல் பிடித்துக் கொள்ள பயன்படுகின்றன. செம்மறி ஆடோ அல்லது வேறு எந்த விலங்கோ இந்த புதர் நடுவில் மாட்டிக் கொண்டால் தப்பிக்க முடியாது. அதன் கோரமான முட்கள் உடலைக் கிழிக்கும். அதனையும் மீறி மாட்டிக் கொள்ளும் விலங்குகள் தப்பிக்க முயன்றால் முட்கள் இன்னும் ஆழமாய் உடலுக்குள் பதிந்து, வேறு வழி இல்லாமல் அபயக் குரல் எழுப்பியபடி அந்த விலங்கு இறந்து போக வேண்டியது தான். இறந்துபோன விலங்கின் உயிர்சத்துக்களை அதன் வேர்கள் உறிஞ்சிக் கொள்கின்றன. அதோடு நின்று விடுவதில்லை. இறந்துபோன விலங்குகளின் உடல், மண்ணோடு மக்கி இந்த தாவரத்திற்கு நல்ல உரமாகிறது. அதனால்தான், இதை செம்மறி ஆட்டை சாப்பிடும் தாவரம் என்கிறார்கள். மனிதன் உட்பட எந்த உயிரினமும் இந்த புதருக்குள் மாட்டிக்கொண்டால் தப்பிக்க முடியாது. ஆனாலும் செம்மறி ஆடுகள் இந்த புதரில் அடிக்கடி மாட்டிக் கொண்டு இறந்து போவதால் இப்படியொரு பெயர் வந்திருக்கிறது. விலங்குகளை தன் பக்கம் ஈர்ப்பதற்காக இந்த செடியின் பழங்கள் இனிமையான நறுமணத்தை பரப்புகின்றன. அதன் மணத்தில் மயங்கி புதருக்குள் வரும் விலங்குகள் மாட்டிக் கொண்டு இறந்துவிடுகின்றன. இந்த தாவரத்தை லண்டனில் உள்ள ராயல் தோட்டக்கலை கூடத்தில் வளர்த்து வருகிறார்கள். இதன் அருகே யாரும் போய்விடக் கூடாது என்பதற்காக சுற்றிலும் கண்ணாடி வேலி அமைத்துள்ளார்கள்.

No comments:

Post a Comment