Search This Blog

Monday, July 20, 2015


குழந்தையை விற்க முயன்ற தந்தை
வறுமையில் வாடும் நாடுகளில் கைக் குழந்தைகளை விற்பனை செய்வது சர்வசாதாரண குற்றச்செயலாக உள்ளது. மேற்கத்திய நாடுகளில் இது மிகவும் அபூர்வம். ஆனால், இதுபோன்றதொரு சம்பவம் இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் நடந்துள்ளது. அந்த நகரில் உள்ள நடைபாதை கடைப் பகுதியில் 28 வயது ஆண் ஒருவர் பிறந்த 3 மாதங்களே ஆன ஒரு பெண் குழந்தையை தள்ளுவண்டியில் வைத்தவாறு ரூ.1 லட்சத்துக்கு (ஆயிரம் பவுண்டுகள்) விற்பனை செய்ய ஒருவரிடம் பேரம் பேசிக் கொண்டிருந்தார். இதையடுத்து அந்த வாலிபரை மான்செஸ்டர் போலீசார் கைது செய்தனர். அந்த குழந்தை அங்குள்ள காப்பகம் ஒன்றில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளது. அந்த குழந்தை யாருக்கு சொந்தமானது? குழந்தையை பெற்ற பெண் எங்கிருக்கிறார்? என்பது பற்றி மான்செஸ்டர் நகர போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 20/07/2015

No comments:

Post a Comment