Search This Blog

Thursday, July 2, 2015


என்ன மனம் இது..?

வேறு சாதி பெண்ணை திருமணம் செய்ததால் மகனை கொன்ற தாய்க்கு ஆயுள் தண்டனை
கோபி, ஜூன்.30- வேறு சாதி பெண்ணை காதலித்து திருமணம் செய்ததால் மகனை கொன்ற பெண்ணுக்கு ஆயுள் தண்டனை விதித்து கோபி கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு கூறியுள்ளது. காதல் திருமணம் ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள நல்லகவுண்டன்பாளையத்தை சேர்ந்தவர் ரங்கசாமி. அவருடைய மனைவி ராஜம்மாள் (வயது 40). இவர்களுடைய மகன் செல்வராஜ் (20). இவர் கொளப்பலூரில் உள்ள தனியார் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். செல்வராஜ் அதே பகுதியில் உள்ள ஒரு பெண்ணை காதலித்து, பெற்றோருக்கு தெரியாமல் கடந்த 2004-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். பின்னர் பெற்றோரை சம்மதிக்கவைத்து அவர்களுடைய வீட்டிலேயே மாடி அறையில் மனைவியுடன் தனிக்குடித்தனம் நடத்தி வந்தார். செல்வராஜ் காதலித்து திருமணம் செய்த பெண் வேறு சாதியை சேர்ந்தவர். அதனால் ராஜம்மாள் மகன் மீது தாங்கமுடியாத ஆத்திரத்திலேயே இருந்ததாக தெரிகிறது. ஆயுள் தண்டனை மகன் திருமணம் செய்துகொண்ட 5-வது நாள் அதிகாலையில் வீட்டின் மாடி அறையில் செல்வராஜ் தூங்கிக்கொண்டு இருந்தார். அப்போது ஆத்திரத்துடன் இருந்த ராஜம்மாள், கையில் பெரிய கல்லை தூக்கிக்கொண்டு சென்று, பெற்ற மகன் என்றும் பாராமல் அவரின் தலையில் போட்டதாக கூறப்படுகிறது. இதில் செல்வராஜ் அதே இடத்தில் துடிதுடித்து இறந்தார். இதுபற்றி தகவல் கிடைத்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் வழக்குப்பதிவு செய்து, ராஜம்மாளை கைது செய்தனர். இந்த வழக்கு கோபி 3-வது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. பெற்ற மகனின் தலையில் கல்லை தூக்கிப்போட்டு கொன்ற ராஜம்மாளுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி பாலகிருஷ்ணன் உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து ராஜம்மாள் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

No comments:

Post a Comment