Search This Blog

Thursday, July 23, 2015


நியூட்ரானை கண்டறிந்த ஜூலியட்
ஜூலியட் கியூரி என்ற பெண் விஞ்ஞானி தான் நியூட்ரானை கண்டுபிடித்தவர். கியூரி என்ற பெயரை கேட்டவுடனே எல்லோருக்கும் மேரி கியூரிதான் நினைவுக்கு வரும். அந்த மேரி கியூரியின் மகள்தான் ஜூலியட் கியூரி. பொதுவாக விஞ்ஞானிகளின் குழந்தைகள் விஞ்ஞானிகளாக வருவதில்லை. அந்த சித்தாந்தத்தில் விதிவிலக்கானவர் ஜூலியட். இவரின் முழுப்பெயர் ஐரீன் கியூரி ஜூலியட். 1897 செப்டம்பர் 12-ல் பிறந்தவர். நோபல் பரிசு பெற்ற பெற்றோரின் குழந்தை என்பதை மறந்து, கடுமையாக உழைத்து படித்தார், ஜூலியட். பாரீஸ் பல்கலைக்கழகத்தில் அறிவியல் பட்டம் முடித்த கையோடு, முதல் உலகப் போரின் போது ஒரு செவிலியராகவும் வானிலை கருவியில் சிக்னல்களை அனுப்புபவராகவும் வேலைக்கு சேர்ந்தார். அதன்பின்பு ஆல்பா கதிர்களை ஆராய்ந்து முனைவர் பட்டம் பெற்றார். 1926-ல் தன்னுடன் பணிபுரிந்த பெட்ரிக்கை மணந்து ஹெலன், பியரி என்ற இரண்டு குழந்தைகளுக்கு தாயானார். தொடர்ந்து கணவன், மனைவி இருவரும் சேர்ந்தே ஆய்வுகளை மேற்கொண்டனர். ஆறு வருடங்களாக பல்வேறு ஆய்வுகள் நடத்தினர். அதன் பலனாக செயற்கை கதிர்வீச்சை கண்டுபிடித்தனர். சீராக இருக்கும் தனிமங்கள், சீரற்றவையாக கலைக்கப்பட்டால், செயற்கை கதிர்வீச்சை பெற முடியும் என்பதை இருவரும் இணைந்தே கண்டுபிடித்தனர். இன்று புதிய வகை தானியங்கள், மருத்துவம், உணவு பகுத்தல் போன்ற பல துறைகளுக்கு அணுக்கதிர்வீச்சை பயன்படுத்தவும் இந்த கண்டுபிடிப்பு ஒரு திருப்புமுனையாக இருந்தது. அதற்காக இந்த தம்பதியருக்கு 1935-ம் ஆண்டுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. இப்படி நோபல் பரிசு பெற்றவர்கள் தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொள்வது குறைவு. செல்லும் இடமெல்லாம் பாராட்டு, விருந்து, உபசரிப்பு, புகழ் போன்றவற்றால் காலத்தை கழித்து விடுவார்கள். ஆனால் ஜூலியட் கியூரி அப்படி செய்யவில்லை. தனது ஆய்வுகளை தொடர்ந்தார். அணுவின் நேர்மின் துகள்களாக புரோட்டானும், எதிர்மின் துகள்களாக எலக்ட்ரானும் இருப்பது போல் மின் தன்மையற்ற நியூட்ரான் இருப்பதையும், அணுப்பிளவு போல், அணு இணைப்பும் ஏராளமான சக்தியை வெளிப்படுத்தும் என்பதை 1938-ல் அவர் கண்டுபிடித்தார். அடுத்த ஆண்டே இரண்டாவது உலகப் போர் தொடங்கி விட்டது. இந்த கண்டுபிடிப்பை வெளியிட்டால் அரசு அதை யுத்தத்திற்கு பயன்படுத்தும் என்று கருதி தனது கண்டுபிடிப்புகளை வெளியிடாமல் நிறுத்தி வைத்து, போர் முடிந்தபின் வெளியிட்டார். அதோடு யுத்தம் முடிந்ததும் ரேடியம் கல்வியகத்தின் இயக்குனராக ஜூலியட் கியூரி நியமிக்கப்பட்டார். 

ஆய்வுகளை தொடர்ந்து மேற்கொண்ட ஜூலியட் கியூரி தாயைப் போலவே கதிர்வீச்சுக்கு ஆளாகி லுக்கேமியா நோயால் தாக்கப்பட்டு 1956 மார்ச் 17ல் இறந்தார். ஒரே குடும்பத்தில் தந்தை, தாய், மகள், மருமகன் என்று அனைவரும் நோபல் பரிசு பெற்றது கியூரி குடும்பத்துக்கு மட்டுமே சொந்தமான பெருமை.

No comments:

Post a Comment