Search This Blog

Thursday, July 2, 2015


வானிலை மாற்றங்கள் 

வானிலை முன்னறிவிப்பு எல்லாமே இன்சாட் 1பி செயற்கைகோள் மூலமே தெரிந்து கொள்கிறோம். இன்சாட் 1பி செயற்கைகோள் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் வானிலை மற்றும் மழைக்கான சூழ்நிலை பற்றி தரை நிலையங்களுக்கு தகவல் அனுப்பிக் கொண்டே இருக்கும். செயற்கைகோள்கள் பொதுவாக 650 முதல் 1500 கி.மீ. உயரத்தில் நீண்ட வட்டத்தில் சுற்றி வருகின்றன. பொதுவாக இவை ஒரு தடவை பூமியைச் சுற்றி வர 100 நிமிடங்கள் எடுத்துக் கொள்கின்றன. ஒரு நாளில் சுமார் 14½ முறை சுற்றுவதாக கணக்கிட்டுள்ளனர். 1974-ம் ஆண்டு ஏப்ரல் 3, 4 தேதிகளில் மட்டும் அமெரிக்காவின் 12 மாநிலங்களில், சுமார் 148 சூறைக்காற்றுகள் வீசி கதி கலங்கடித்துள்ளன. இந்தியாவில் தற்போது 20 கி.மீ. உயரம் வரை காற்றைப் பற்றிய புள்ளி விவரங்களைச் சேகரிக்க இயலும். சென்னையில் பதிவு செய்யப்பட்ட மிகக்குறைந்த வெப்பம் 15.6 டிகிரி செல்சியஸ். இது 1969-ம் ஆண்டு ஜனவரி 27-ந்தேதி பதிவானது. இன்று உலகம் முழுவதும் சுமார் 12,500 வானிலை ஆராய்ச்சி மையங்கள் கணினி மூலம் இயக்கப்பட்டு, தட்பவெப்ப தகவல்கள் வெளியிடப்படுகின்றன. கீழ்மட்ட அளவில் காணப்படும் கருமேகங்களை நிப்போ ஸ்ட்ராட்டஸ் என அழைக்கின்றனர். இவை 10 முதல் 15 நிமிடம் மழை பெய்யும் சக்தி படைத்தவை. டெல்லி, போபால் போன்ற இடங்களில் வெப்பம், 1935-ம் ஆண்டு ஜனவரி 16 அன்று குளிரினால் 0.6 டிகிரி செல்சியசுக்கு இறங்கிவிட்டது. இவையெல்லாம் வானிலையில் ஏற்பட்ட மிகப்பெரிய மாற்றம். வானிலை மாற்றத்தால் பல்வேறு நிகழ்வுகள் நடைபெறுவது உண்டு. தற்போது புயல் பற்றிய எச்சரிக்கைகளை பல்வேறு விதமாக அறிகிறோம். இந்த எச்சரிக்கை அறிவிப்பு முறை முதன்முதலில் 1886-ல் தொடங்கியது. வானிலை சீராக இருக்கும் விதத்தில் விமானம் 30,000 அடிக்கு மேல் பறக்கும் போது நகருவதே தெரியாமல் இருக்கும். மழைக்கு இடையே மின்னலடிக்கும் போது குடை பிடித்து நடப்பது விபத்தில் முடியும். கடும் மழையில் காருக்குள் அமர்ந்திருப்பது பாதுகாப்பானது என்று கூறப்படுவதுண்டு. சூறைக்காற்றை வங்காளிகள் ‘பைசாகி பேரழிவு’ என்றும், மற்ற வட நாட்டினர் ‘யானையின் தும்பிக்கை’ எனவும் அழைக்கின்றனர்.

No comments:

Post a Comment