Search This Blog

Monday, July 6, 2015


தாத்தாவின் உடலுடன் செல்பி எடுத்த பேரன்

சவுதி அரேபிய மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த வயதான ஒருவர் சமீபத்தில் உயிரிழந்து விட்டார். அவரது உடல் படுக்கையில் கிடக்கும் நிலையில், அதன் அருகில் சிரித்தபடி நின்றவாறே அவரது பேரன் செல்பி புகைப்படம் எடுத்துள்ளார். ‘குட்பை தாத்தா’ என பெயரிடப்பட்டு சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள அந்த புகைப்படம், வலைத்தள ஆர்வலர்களிடம் கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. இது ஒழுக்கக்கேடான செயல் என கொந்தளித்துள்ள மக்கள், இந்த விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.மேலும் இந்த செல்பியை எடுக்க அனுமதித்த மருத்துவமனை ஊழியர்கள் மீதும் நடவடிக்கை எடுக்குமாறு சமூக வலைத்தளங்களில் கருத்துகள் வெளியிடப்பட்டு வருகின்றன. இதைத்தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணையை தொடங்கி உள்ளனர்.                 (07,07,2015)

No comments:

Post a Comment