உலகின் முதல் பெண் விஞ்ஞானி
இன்றைக்கு வேதியியல்துறை மிகப்பெரும் வளர்ச்சி அடைந்துள்ளது. இந்த துறை
மட்டும் இல்லையென்றால், நமக்கு பல நவீன பொருட்கள் கிடைத்து இருக்காது. இந்த
வேதியியலை தனிப்பெரும் துறையாக அடையாளம் காண வைத்த பெருமை மரியா ஜூயசை சேரும்.
மரியா தனது கண்டுபிடிப்புகளை ‘மரியா ப்ராக்டிகா’ என்ற நூலில் எழுதியுள்ளார்.
அதில் வேதியியலின் சோதனைகள் மூலம் நேரடியாக கண்ட உண்மைகளை அதில் எழுதி
இருந்தார். உலோகங்கள் தனிமங்களா? என்ற ஆய்வில் இருந்து, அவற்றின் உருகும் தன்மை
போன்ற 70-க்கும் மேற்பட்ட சோதனைகளை செய்துள்ளார்.
உயிரினங்களில் ஆணும், பெண்ணும் இணைந்து, ஒரு புதிய உயிர் தோன்றுகிறது. அந்த
உயிர் தனது தாய், தந்தையரின் பண்புகளை பெற்றிருப்பது போல, இரண்டு வெவ்வேறு உலோக
தனிமங்கள், ஒன்றிணையும் போது, அதில் கிடைக்கும் புதிய கலவை, இரண்டு தனிமங்களின்
பண்புகளோடு, புதிய சிறப்பு பண்புகளையும் பெறுகிறது என்று முதலில் உலகுக்கு
உணர்த்தியவர் மரியாதான்.
தங்கத்தை பெண்கள் அணியும் அணிகலனாக மாற்றியவரும், தங்கத்தை காரட் என்ற புதிய
அளவையில் அளக்க வேண்டும் என்று காரட் முறையை அறிமுகப்படுத்தியவரும் இவர்தான். 24
காரட் தங்கத்தில் தாமிரம் போன்ற மற்றொரு தனிமத்தை சரியான விகிதத்தில் கலந்தால்
மட்டுமே அதை அணிகலனாக வளைக்க முடியும். இந்த ஒப்பற்ற கண்டுபிடிப்பை நிகழ்த்தி 22
காரட் தங்கத்தை உருவாக்கியவர் மரியா.
பாதரசம், சல்பர், காரீயம் போன்றவற்றை உயர் நொதிநிலைக்கு உட்படுத்தி, அந்த
வெப்பத்தில் தாமிரத்தை உருக்கும் புதிய உத்தியை கண்டுபிடித்தார். சல்பரின் ஆவி நிலை
தங்கம் போல பளபளக்கும். அதில் இருந்து தங்கத்தை பிரித்தெடுக்க முயன்றார். பின்னர்
அது தவறு என்பதை கண்டுபிடித்தார். அதை வெள்ளி சல்பைடு என்ற புதிய தனிமமாக
கண்டறிந்தார்.
இத்தனை கண்டுபிடிப்புகளையும் நிகழ்த்திய மரியாவை சுத்தமாக சரித்திரமும்,
விஞ்ஞானமும் கண்டுகொள்ளவில்லை என்பதுதான் துயரம். இயேசு கிறிஸ்து வாழ்ந்த
சமகாலத்தில் வாழ்ந்தவர்தான் மரியா. அதனால் பெயர் குழப்பங்களும் உள்ளன. பைபிளில்
வரும் மோசசின் சகோதரி மிரியம் தான் மரியா என்று கூறுபவர்களும் உண்டு.
No comments:
Post a Comment