Search This Blog

Thursday, July 2, 2015


கொலையாளி ரோபோ 

மனிதர்களுக்கு உதவிகரமாக இருந்து வரும் ரோபோ, முதன் முதலாக மனிதனை கொலை செய்திருப்பது விஞ்ஞானிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ஜெர்மனியின் பானடால் பகுதியில் பிரபல கார் நிறுவனத்துக்கு சொந்தமான தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு கார்களின் உதிரிப்பாகங்களை ஒன்றிணைக்கும் பிரிவில், தொழிலாளர்களுக்கு உதவியாக ரோபோக்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த தொழிற்சாலையில் கடந்த திங்கட்கிழமை வழக்கம் போல பணிகள் நடந்து வந்தன. அப்போது மிகப்பெரிய எந்திரங்களை கையாளும் பிரிவில் இயங்கி வந்த ரோபோ ஒன்று திடீரென, அங்கிருந்த ஒரு 22 வயது ஊழியரை கவ்விப்பிடித்து அருகில் இருந்த உலோக தகட்டின் மீது வைத்து நசுக்கியது. இதில் அந்த ஊழியர் பரிதாபமாக இறந்து போனார். இது அருகில் இருந்த ஊழியர்களுக்கு மிகப்பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தேவையற்ற உதிரி பாகங்களை எடுத்து நசுக்கும் அந்த ரோபோ, மனித தவறினாலேயே ஊழியரை கொன்றுவிட்டது என்றும் இதற்காக யார் மீது வழக்கு போடுவது என்று தெரியவில்லை என்றும் அதிகாரிகள் கூறினார்கள். (02.072015)

No comments:

Post a Comment