Search This Blog

Monday, March 14, 2016

சுற்றுலாவை முடக்கும் தீவிரவாதம் 14/03/2016

சமீபத்தில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் நான்கில் ஒருவர் உள்ளூர் மற்றும் உலக பாதுகாப்பு காரணமாகவும், தொற்று நோய் காரணமாகவும் தங்களின் சுற்றுலா திட்டங்களை மாற்றிக் கொள்கிறார்கள் என்பது தெரியவந்துள்ளது. உலகம் முழுவதும் 2 ஆயிரம் பேர்களிடம் எடுக்கப்பட்ட இந்த ஆய்வில் 77 சதவீதம் பேர் தீவிரவாத செயல்பாடு அதிகம் இருப்பதால் சுற்றுலா செல்வதை தவிர்ப்பதாக குறிப்பிட்டு இருந்தார்கள். அந்த இடங்களில் மேற்கொள்ளப்படும் ராணுவ கெடுபிடிகள், சண்டைகள் காரணமாக செல்ல பிடிக்கவில்லை என்று அவர்களில் 59 சதவீத பேர் தெரிவித்து இருந்தார்கள்.   

தொற்று நோய்கள் காரணமாக 46 சதவீத பேரும், தொடர்ந்து குற்றங்கள் நடைபெறும் இடங்களுக்கு செல்வதில்லை என்று 25 சதவீத பேரும், அரசியல் காரணமாக 25 சதவீத பேரும் சுற்றுலா செல்வதில்லை என்று குறிப்பிட்டிருக்கிறார்கள்.

ஆஸ்திரேலியாவும், நியூசிலாந்தும் சுற்றுலா செல்ல விரும்பும் நாடுகளாக 62 சதவீத பேர் கூறி இருக்கிறார்கள். 10 சதவீதக்கும் குறைவானவர்கள் வடக்கு, மேற்கு மற்றும் மத்திய ஆப்பிரிக்க நாடுகளுக்கும், 20 சதவீதக்கும் குறைவானவர்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்கும் செல்ல விரும்புவதாக சொல்லி இருக்கிறார்கள்.

சுற்றுலாவுக்கான திட்டமிடல்களையும், எங்கு செல்வது என்ற முடிவையும் எதன் அடிப்படையில் எடுக்கிறீர்கள் என்ற கேள்விக்கு, அங்கீகாரம் பெற்ற பயண ஆலோசகர்கள் தரும் தகவல் அடிப்படையில் 55 சதவீத பேரும், சுற்றுலா பத்திரிகைகள், பயணக் கட்டுரைகள் தரும் தகவல்கள் அடிப்படையில் 36 சதவீத பேரும் முடிவு எடுப்பதாக சொல்லி இருக்கிறார்கள். சுற்றுலா தொடர்பான ஆலோசனைகளை நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களிடம் இருந்து 34 சதவீத பேரும், சமூக வலைதளங்களில் இருந்து 17 சதவீத பேரும் பெறுவதாக கூறி இருக்கிறார்கள்.

No comments:

Post a Comment