Search This Blog

Monday, March 14, 2016



உலகில் மிகப் பெரிய அறுவை சிகிச்சை 09/03/2016

மருத்துவம் பெரிதாக முன்னேறாத அந்தக் காலத்தில், எல்லாவகை நோய்களுக்கும் உள் மருந்து மட்டுமே தரப்பட்டது. உடலின் வெளியில் ஏற்படும் காயங்கள், கட்டிகள் போன்றவற்றிற்கும் உள் மருந்தே கொடுக்கப்பட்டது. சூரணம், லேகியம் தான் உள் மருந்து. கட்டிகள் போன்ற வியாதிகள் அகற்றப்படாமல் மருந்து மூலம் குணமாகிவிடும் என்றே நம்பப்பட்டது. இந்த கொடிய நோய்களால் பாதிக்கப்பட்டு அதிக எண்ணிக்கையில் மக்கள் இறந்தனர்.

அறுவை சிகிச்சை முறைகள் 16-ம் நூற்றாண்டில் தொடங்கின. முதன் முதலாக இங்கிலாந்தில் ஒரு நோயாளியின் நுனி நாக்கில் இருந்த சிறு கட்டி ஒன்றை அறுவை சிகிச்சை மூலம் அகற்றினார்கள். உலகில் முதன்முதலாக நடந்த இந்த அறுவை சிகிச்சைக்கு தேவைப்பட்ட கருவிகள் ஒரு எரியும் மெழுகுவர்த்தி, குறடு ஒன்று, வலி மிகுதியால் நோயாளி துள்ளி விழாமல் அழுத்திப் பிடித்துக்கொள்ள இரண்டு பேர் இருந்தனர். இவர்களை வைத்துதான் அந்த அறுவை சிகிச்சை நடந்தது. அதன் பின்பு விஞ்ஞான வளர்ச்சியால் மருத்துவம் படிப்படியாக முன்னேறியது. அறுவை சிகிச்சையிலும் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டது. இதற்கு உதாரணமாக அமெரிக்காவில் நடந்த அறுவை சிகிச்சையை சொல்லலாம். இது மிகச் சிறந்த கடினமான அறுவை சிகிச்சை என்று உலகமே ஒத்துக்கொண்டது.

 1978-ல் மே மாதம் கலிபோர்னியா பல்கலைக்கழக மருத்துவர்களால் 30 வயது பெண்ணின் கருப்பையில் இருந்த கட்டி அகற்றப்பட்டது. இது என்ன பெரிய விஷயமா என்று கேட்பவர்களுக்கு, அந்தக் கட்டியின் எடை 90 கிலோ என்பது தான் பதில். இந்தக் கட்டியை உடைத்த போது அதில் இருந்து 74 லிட்டர் நீர் வெளியேறியது. பின்பு 18 கிலோ எடை கொண்ட சதைப் பிண்டமாக அந்தக் கட்டி இருந்தது. அறுவை சிகிச்சைக்கு முன்பு 172 கிலோ எடையிருந்த அந்த பெண் சிகிச்சை முடிந்ததும் 82 கிலோவாக எடை குறைந்தார். ஏழு மருத்துவர்களால் செய்யப்பட்ட, இந்த அறுவை சிகிச்சை தான் உலகிலேயே பெரியது என்று சொல்லப்படுகிறது.

No comments:

Post a Comment