Search This Blog

Saturday, September 5, 2015

இவர்கள் ஆசிரியர்களா ..?

செப்டம்பர் 5 ஆசிரியர் தினத்தில் வெளிவந்துள்ள செய்திகள் இவை.

ஆசிரியரின் தவறான செயலால் சிக்கல் 

இங்கிலாந்தில் பிரிஸ்டல் என்ற இடத்தில் கிளிட்டன் என்ற கல்லூரி இருக்கிறது. இங்கு ஆசிரியராக இருந்தவர் ஜேனதன் தாம்சன் கிளவர் (வயது 53). இவர் தான் ஆசிரியராக பணியாற்றிய காலத்தில் அங்கு படித்த மாணவிகளின் குளியல் அறை காட்சிகளை ரகசியமாக படம் எடுத்துள்ளார். தற்போது இது தொடர்பாக கைது செய்யப்பட்ட அவருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதில் என்ன வினோதம் என்றால் அவர் எதோ சபலத் தில் ஒருமுறை மட்டும் இந்த தவறை செய்யவில்லை. ஏறத்தாழ 16 ஆண்டுகளாக 120 மாணவிகளின் குளியல் காட்சிகளை அவர் ரகசியமாக படம் எடுத்துள்ளார். படம் பிடிக்கப்பட்டவர்கள் அனைவரும் 12-முதல் 17-வயது வரை உடையவர்கள். மொத்தம் 2 ஆயிரத்து 500 நிமிடங்களுக்கு மேல் ஓடக்கூடிய வீடியோ பதிவுகள் அவரிடம் இருந்தன. 



ரூ.100 திருட்டு போனதாக புகார் எதிரொலி
12 மாணவிகளின் ஆடைகளை அவிழ்த்து சோதனை
செய்த தலைமை ஆசிரியை
பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்
பெங்களூரு, செப்.5- கர்நாடக மாநிலம் மண்டியா டவுன் பகுதியில் அரசு மகளிர் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் ஜெயலட்சுமியம்மா என்பவர் தலைமை ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் கடந்த மாதம் 31-ந்தேதி அந்த பள்ளியில் படிக்கும் ஒரு மாணவி, தான் வைத்திருந்த 100 ரூபாய் திருட்டு போய் விட்டதாக தலைமை ஆசிரியை ஜெயலட்சுமியம்மாவிடம் புகார் கொடுத்துள்ளார். இதுகுறித்து அவர், அந்த மாணவியின் வகுப்புக்கு சென்று, வகுப்பறையில் இருந்த 29 மாணவிகளிடம் விசாரணை நடத்தினார். ஆனாலும் யார் பணத்தை எடுத்தார்கள் என்பதை கண்டுப்பிடிக்க முடியவில்லை. இதையடுத்து தலைமை ஆசிரியை ஜெயலட்சுமியம்மா, 12 மாணவிகளின் புத்தகப் பை மற்றும் இருப்பிடத்தில் சோதனையிட்டார். அங்கும் பணம் கிடைக்கவில்லை. இதையடுத்து, அந்த வகுப்பறையின் ஜன்னல் மற்றும் கதவுகளை உள்புறமாக தாழிட்டு, அந்த 12 மாணவிகளின் ஆடைகளை அவிழ்த்து சோதனை நடத்தியதாக கூறப்படுகிறது. ஆனாலும் பணம் கிடைக்கவில்லை. ஆடைகளை அவிழ்த்து சோதனை நடத்தியதால் மனமுடைந்த மாணவிகள், இதுகுறித்து தங்கள் பெற்றோரிடம் கூறி கதறி அழுதுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அந்த மாணவிகளின் பெற்றோர், கடந்த 2 நாட்களுக்கு முன்பு பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை விசாரித்த மாநில கல்வி துறை அதிகாரி, தலைமை ஆசிரியை ஜெயலட்சுமியம்மாவை பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment