Search This Blog

Friday, September 25, 2015


105 வயதில் ஓட்டப்பந்தயத்தில் உலக சாதனை
ஜப்பானை சேர்ந்த ஒருவர் தனது 105-வது வயதில் ஓட்டப்பந்தயத்தில் உலக சாதனை படைத்திருப்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ஜப்பானை சேர்ந்தவர் டோகிசி மியாஸாகி. 105 வயதான இவர் சமீபத்தில் நடைபெற்ற ஓட்டப்பந்தயத்தில் 100 மீட்டர் தூரத்தை 42.22 வினாடிகளில் கடந்து உலக சாதனை படைத்துள்ளார். 105 வயதுடையவர்களுக்கான பிரிவில் உலகிலேயே அதிவேக ஓட்டக்காரர் என கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். ஓட்டப்பந்தயத்தில் 105 வயதுடையவர்களுக்கான பிரிவை ஏற்படுத்திய பெருமையும் இவரையே சேரும். 105 வயதில் இவர் இவ்வாறு அதிவேகமாக ஓடுவது மருத்துவ உலகில் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ள போதிலும், அவர் தனது வேகத்தில் திருப்தி இல்லை என்று கருதுகிறாராம். இதில் மற்றொரு வியப்பு என்னவென்றால், உலகப்புகழ் பெற்ற அதிவேக ஓட்டக்காரர் உசேன் போலட்டுடன் போட்டியிடுவதுதான் அவரது லட்சியமாம். இவர் தனது 100-வது வயதில் 100 மீட்டர் தூரத்தை 29.83 வினாடிகளில் கடந்து உலக சாதனை படைத்தது நினைவுகூரத்தக்கது. 25/09/2015

No comments:

Post a Comment