ஓரினச்சேர்க்கைக்கு எதிரானவருக்கு சிறை
அமெரிக்காவில் ஓரினச்சேர்க்கை திருமணத்தை சட்டப்பூர்வமாக்கி, கடந்த ஜூன்
மாதம் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இதனால் மகிழ்ச்சியடைந்த ஓரின ஜோடிகள்,
தங்கள் திருமணத்தை பதிவு செய்து சான்றிதழ் பெற்று வருகின்றனர். ஆனால் கெண்டகி
மாகாணத்துக்கு உட்பட்ட ரோவன் மாவட்ட அதிகாரி கிம் டேவிஸ் என்ற பெண்மணி, ஓரின
ஜோடிகளுக்கு திருமண பதிவு சான்றிதழ் வழங்க மறுத்து வந்தார். ஓரினச்சேர்க்கை
திருமணம், ஒரு பாவம் என்று தான் நம்புவதாக கூறி வந்த அவர், தொடர்ந்து ஓரின ஜோடிகளை
அலைக்கழித்தார்.
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுக்கு எதிராக செயல்பட்ட கிம் டேவிஸ் மீது வழக்கு
பதிவு செய்யப்பட்டு, அவர் 5 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது சிறையில்
இருந்து விடுதலையாகி உள்ள அவர், விரைவில் பணியில் சேர உள்ளார்.
எனினும் இனியாவது அவர் ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு சான்றிதழ் வழங்குவாரா?
என்பது குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை.
No comments:
Post a Comment