Search This Blog

Wednesday, April 20, 2016


குழந்தைகளை வசியப்படுத்திய ‘வால்ட் டிஸ்னி‘ 20/04/2016

ராணுவம், பீரங்கி, வெடிகுண்டுகள் என்று மொத்த ஐரோப்பாவையும் ஆக்கிரமிக்க, ட்லரும், முசோலினியும் புறப்பட்ட சமயம், ஒரு சுண்டெலியையும் வாத்தையும் கையில் பிடித்துக்கொண்டு மொத்த உலகையும் வசப்படுத்தியவர், வால்ட் டிஸ்னி. <p></p>குழந்தைகள் மட்டுமல்ல, பெரியவர்களையும் ஈர்த்து பரவசப்படுத்தியது, மிக்கி மவுஸ். இதில் மிக்கியின் குரலுக்கு சொந்தக்காரர் டிஸ்னி தான். இந்த சாதனை மனிதரையும் ஆரம்ப காலங்களில் யாரும் கண்டுகொள்ளவே இல்லை.

இவர் சினிமா வாய்ப்பு தேடி ஸ்டுடியோக்களில் ஏறி இறங்கிய போது, பொம்மையை கிறுக்குபவனுக்கு எல்லாம் எப்படி சினிமாவைக் கொடுக்கமுடியும் என்று கேலியாக சிரித்தார்கள். இதற்கெல்லாம் அசரவில்லை, டிஸ்னி. தெரிந்தவர்கள், நண்பர்கள் என எல்லோரிடமும் கடன் வாங்கி சொந்தமாக ‘அலைஸ் இன் கார்ட்டூன் லேண்ட்‘ என்ற படத்தை எடுத்தார். படம் ஓடவில்லை. இருந்தாலும் டிஸ்னி தோல்வியை ஒத்துக்கொள்ளவில்லை. அதன்பின் டிஸ்னி, ஒரு சுண்டெலி ஓவியத்தை உருவாக்கினார். அதற்கு மார்டிமர் என்று பெயர் வைத்தார். ஆனால், அவருடைய நண்பர்கள் அதற்கு மிக்கி என்று பெயர் வைக்கச் சொன்னார்கள். இறுதியில் ‘மிக்கி மவுஸ்‘ என்ற சாகாவரம் பெற்ற கேரக்டர் உருவானது. முகத்துக்கு ஒரு வட்டம், இரண்டு காதுகளுக்கு இரண்டு வட்டம் என்று மூன்று வட்டங்களில் பிறந்த மிக்கிமவுஸ், ஒரு வருடத்திற்குள்ளேயே உலகை தன் பக்கம் வளைத்துக்கொண்டது.

தொடர்ந்து இவர் படங்கள் எல்லாம் வசூலை அள்ள, பணம் குவிந்தது. அங்கீகாரமும் தேடி வந்தது. 1932-ல் டிஸ்னி உருவாக்கிய ‘ப்ளவர்ஸ் அண்ட் ட்ரீஸ்‘ படத்திற்கு ஆஸ்கார் விருது கிடைத்தது. அப்போதுதான் ‘டொனால்ட் டக்‘ என்ற வாத்தினை அறிமுகப்படுத்தினார். உலகில் உள்ள உல்லாச பொழுது போக்கு பூங்காக்களை கணக்கெடுத்தால், முதலிடத்தில் இருப்பது ‘டிஸ்னி லேண்ட்‘ தான். 300 டாலர் நுழைவுக்கட்டணம் கொண்ட இந்த பூங்கா, பூலோக சொர்க்கம் எனப்படுகிறது. இங்கு ஒரு வருடத்திற்கு ஒன்றரைக் கோடி பேர் வந்து போகிறார்கள். இந்த பூங்கா உருவானது கூட ஒரு பழிவாங்கும் கதைதான்.  டிஸ்னி சிறுவனாக இருந்தபோது பள்ளிக்கு போகும் வழியில் ஒரு சிறு பூங்கா இருந்தது. கட்டணம் செலுத்தினால் மட்டுமே உள்ளே போகமுடியும். ஒவ்வொரு நாளும் பூங்காவில் விளையாடும் சிறுவர்களை அவர் ஏக்கத்தோடு பார்த்தபடியே வீடு திரும்புவார். ஏழ்மையில் வாடிய டிஸ்னி ஒருநாள் கூட அந்த பூங்காவிற்குள் செல்லவில்லை. அந்த ஏக்கம்தான் பின்னாளில் டிஸ்னி லேண்ட் உருவாக காரணமானது.

டிஸ்னி மிகப்பெரிய கோடீஸ்வரர் ஆன பின்னரும், அவரது வாழ்க்கை முறை மாறவில்லை. சாதாரண மனிதர்களைப் போல் எளிமையானவராகவே இருந்தார். ஆனால், அவரிடம் ஒரே ஒரு ஆடம்பரம் மட்டும் உண்டு. ரெயில் மீது மிகுந்த ஆசை கொண்ட அவர், சொந்தமாக தனது வீட்டைச் சுற்றி ரெயில்பாதை அமைத்து பழைய கால ரெயிலை அவரே ஒட்டி விளையாடினாராம்.

No comments:

Post a Comment