Search This Blog

Wednesday, April 20, 2016



ஆண்-பெண் பார்வை வேறுபாடு 17/04/2016

ஆதிமனிதனாக, மனிதன் காட்டில் இருந்த காலம் முதல் இன்று வரை அவன் உணர்ந்து கொள்ளும் உலகம் வேறு. பெண் உணர்ந்து கொள்ளும் உலகம் வேறு. 10 ஆயிரம் வருடங்களில் டி.என்.ஏ.வில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.  காட்டுமனிதர்களில் ஆண் என்றால் வேட்டையாடுதல் முக்கிய வேலையாக இருந்தது. பெண்ணுக்கு குழந்தைகளையும், உடமைகளையும் பாதுகாப்பது முக்கியமானதாக இருந்தது. வேட்டையாடும் போது விலங்கையும், அது இருக்கும் தூரத்தையும் கணக்கிட்டு, இரை தப்பிவிடாமல் வேட்டையாட ஆணுக்கு கூர்மையான பார்வை தேவைப்பட்டது.  ஆனால் பெண்கள், விலங்குகளால் குழந்தைகளுக்கு ஏற்படும் ஆபத்தை தடுக்கும் வகையில், அவர்களின் பார்வை அதிக பரப்பை பார்க்கும் திறன் பெற்றிருந்தது. அவர்களில் சிலர் 180 டிகிரி கோணத்தில் பார்க்கும் திறன் கூட பெற்றிருந்தார்கள்.  ஆண்கள் பெரும்பாலும் ஒரு பொருளை வார்த்தை கொண்டு தேடுகிறார்கள். அதில் சிறு மாற்றம் ஏற்பட்டால் கூட தடுமாறுவார்கள். ஆனால், பெண்களின் பார்வையில் சிக்கலான வடிவங்களை தேடிட, அவர்களின் மூளையில் ஆஸ்டொஜன் என்ற ஹார்மோன் உதவுவதாக கூறுகிறார்கள். அதன் காரணமாக பெண்கள், எந்தப் பொருட்கள் எங்கெங்கு இருக்கின்றன என்றும், ஒன்றுக்கு ஒன்று எவ்வளவு தொலைவில் உள்ளன என்றும் ஒரே பார்வையால் அறிந்து கொள்ள முடிகிறது. ஆண்களைப் போன்று திரும்பத் திரும்ப பார்க்க வேண்டியதில்லை.  ஆணின் கூர்மையான பார்வையிலும், பெண்ணின் பரவலான பார்வையிலும் நன்மை  தீமை இரண்டுமே உண்டு. ஆண்கள் ஓட்டும் வாகனங்கள் பெரும்பாலும் நேருக்கு நேர் மோதுவது இல்லை. பக்கவாட்டிலேயே அதிக விபத்து நடக்கும். பெண்களுக்கு பரவலான பார்வை இருப்பதால் பெண்களால் ஏற்படும் விபத்துகள் பெரும்பாலும் நேருக்கு நேர் மோதுவதாகவே இருக்கும். சாலைகளில் இது பெண்ணுக்கு தீங்காக இருந்தாலும் வீட்டில் சாவி, சீப்பு போன்ற எந்தவொரு பொருளையும் சட்டென்று கண்டுபிடிக்க இது உதவுகிறது.  இயற்கையின் இந்த உண்மையை ஆண்களும் பெண்களும் அறிய வேண்டும். அவர்கள் தங்களின் இயலாமையை உணர்ந்து, மற்றவர்களைப் புரிந்து கொண்டு நடந்தால் சின்னச் சின்ன சச்சரவுகளை தவிர்க்கலாம். ஆண் பெண் இருவருக்கும் மனித இனத்தில் பிறந்ததைத் தவிர வேறு எந்த ஒற்றுமையும் இல்லை. இது அறிவியலும், உளவியலும் நமக்கு தரும் தகவல்.

No comments:

Post a Comment