Search This Blog

Saturday, April 30, 2016


அமெரிக்காவில் பெண்ணுக்கு 100 ஆண்டு சிறை 

   கர்ப்பிணியின் வயிற்றை அறுத்து குழந்தையை எடுத்த கொடூரம்

வாஷிங்டன், மே.1-/2016

அமெரிக்காவில் கொலராடோ மாகாணத்தை சேர்ந்த பெண் டைனல் லேன். இவர் கடந்த 2015-ம் ஆண்டு, கர்ப்பிணி பெண்களுக்கு இலவசமாக கர்ப்ப கால உடைகள் தருவதாக ஆன்லைனில் விளம்பரம் செய்தார். அதைப் பார்த்து விட்டு, 7 மாத கர்ப்பிணியாக இருந்து வந்த மிச்செல் வில்கின்ஸ் என்ற பெண், டைனல் லேன் வீட்டுக்கு சென்றார்.<

ஆனால் சற்றும் எதிர்பாராத விதத்தில் டைனல் லேன், அந்த கர்ப்பிணியின் வயிற்றை கத்தியால் அறுத்து குழந்தையை எடுத்தார். இந்த தாக்குதலில், கர்ப்பிணி மிச்செல் வில்கின்ஸ் உயிர் பிழைத்தார். ஆனால் அவரது கருக்குழந்தை உயிரிழந்தது.

இது தொடர்பாக அங்குள்ள கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. விசாரணையின்போது, மிச்செல் வில்கின்ஸ் கோர்ட்டில் ஆஜராகி சாட்சியம் அளித்தார். அப்போது அவர், “ ஆன்லைன் விளம்பரத்தை பார்த்து டைனல் லேன் வீட்டுக்கு சென்றேன். ஒரு மணி நேரம் அவர் என்னிடம் பேசிக்கொண்டிருந்தார். பின்னர் அவர் திடீரென என்னை அடித்து உதைத்து கீழே தள்ளினார். சமையலறை கத்தியால் என் வயிற்றை அறுத்து குழந்தையை எடுத்தார். குழந்தை இறந்து விட்டது” என கூறினார்.

ஆனால் கொலையாளி டைனல் லேன் சார்பில் ஆஜரான வக்கீல், “இது முன்கூட்டியே திட்டமிட்டு நடந்த சம்பவம் அல்ல” என வாதிட்டார். ஆனால் அரசு தரப்பு வக்கீல், “மிச்செல் வில்கின்சை அடித்து உதைத்து, அவருடைய குழந்தையை திருட வேண்டும் என்று திட்டமிட்டு நடந்துகொண்டுள்ளார்” என மறுத்தார்.

இரு தரப்பு வாதத்தை தொடர்ந்து நீதிபதி, டைனல் லேன் குற்றவாளி என கண்டு, ‘இப்படியெல்லாம் நடக்கும் என்று கற்பனை செய்துகூட பார்க்க முடியாது’ என கூறி, அவருக்கு 100 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தார்.

No comments:

Post a Comment