Search This Blog

Thursday, October 15, 2015


டி.வி. ரிமோட்டுக்காக பேரனை கத்தியால் குத்திய பாட்டி 

ரஷியாவின் மாஸ்கோவை சேர்ந்த 51 வயது பெண் ஒருவர் தனது 5 வயது பேரனுடன் வசித்து வருகிறார். இருவரும் ஒருநாள் வீட்டில் இருந்தபோது அந்த பெண் தனது பேரனிடம் டி.வி. ரிமோட்டை எடுத்து தருமாறு கேட்டார். ஆனால் பேரனோ பாட்டியின் பேச்சை கேட்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பெண், கத்தியை எடுத்து பேரன் என்றும் பாராமல் சிறுவனின் வயிறு மற்றும் மார்பு பகுதிகளில் 3 முறை குத்திவிட்டார். பலத்த சிகிச்சைக்குப்பின் சிறுவன் உயிர் பிழைத்தாலும், அவனது கல்லீரல் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. பேரனை குத்திய பாட்டிக்கு, 6 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து உள்ளூர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது. இந்த சம்பவத்தின் போது அந்த பெண் மது அருந்தியிருந்ததாகவும், எனினும் அவர் சுயநினைவுடன்தான் இருந்துள்ளார் என்பதும் விசாரணையில் கண்டறியப்பட்டது.(16.10.2015)

No comments:

Post a Comment