Search This Blog

Wednesday, October 14, 2015


பணத்துடன் எரிக்கப்பட்ட பிணம் 

சீனாவின் ஜியாங்சு மாகாணத்தை சேர்ந்த தாவோ என்ற விவசாயிக்கு 2 மகன்கள் உள்ளனர். வயதான தாவோ, கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தனது நிலத்தை 2 மகன்களுக்கும் பகிர்ந்து அளித்தார். பின்னர் அவர் ஒரு வாடகை வீட்டில் குடியிருந்து, பழைய இரும்பு பொருட்களை பொறுக்கி விற்பனை செய்து பிழைத்து வந்தார். ஒரு கட்டத்தில் அவரால் தனியாக வாழ முடியவில்லை. எனவே தனது மகன்களுடன் சேர்ந்து வாழ விரும்பினார். ஆனால் இருவரும் ஆளுக்கொரு காரணம் சொல்லி அவரை புறக்கணித்தனர். இதனால் பெருத்த சோகத்துக்கு உள்ளான அவர், தனது மகன்களை தண்டிக்க விரும்பினார். அதன்படி தான் இறந்த பின், தான் சேர்த்து வைத்திருக்கும் மொத்த பணத்தையும், தனது உடலுடன் சேர்த்து எரித்துவிடுங்கள் என உயில் எழுதிவைத்தார். சமீபத்தில் ஒருநாள் தாவோ உயிரிழந்தார். அவரது உடலை எரிப்பதற்காக மகன்கள் எடுத்து சென்றனர். அப்போது அவரது உயிலை கிராமத்தினர் கண்டுபிடித்தனர். பின்னர் உயிலில் எழுதியிருந்த படி, தாவோ சேர்த்து வைத்திருந்த 33 ஆயிரம் டாலர் (சுமார் ரூ.20 லட்சம்) பணத்தையும் அவரது உடலுடன் சேர்த்து எரித்து விட்டனர். (15.10.2015)
 

No comments:

Post a Comment