Search This Blog

Monday, June 29, 2015



கிரெடிட் கார்டு

வாடிக்கையாளர்களின் நிதி நிலைமைக்கு ஏற்ப அவர்களுக்கு வங்கிகள் கிரெடிட் கார்டுகளை (கடன் அட்டைகள்) வழங்கி வருகின்றன. இந்த கடன் அட்டை மூலம் நமக்கு அனுமதிக்கப்பட்ட தொகையை ஆன்லைன் மூலமாகவோ, கடைகளிலோ பொருளாக வாங்கலாம். குறிப்பிட்ட தொகையை ஏ.டி.எம். மையம் மூலம் பணமாகவும் பெற முடியும். இப்படி கடன் அட்டை மூலம் நாம் செலவு செய்த தொகையை குறிப்பிட்ட காலத்திற்குள் மீண்டும் வங்கியில் செலுத்த வேண்டும். பின்னர் மீண்டும் கடன் அட்டையை பயன்படுத்தி செலவு செய்யலாம். அதில் நாம் பணம் கட்ட தவறும் பட்சத்தில் அதற்கு வங்கிகள் தாமத கட்டணம், பயன்பாடு கட்டணம், உச்ச வரம்பு கட்டணம் என பல்வேறு பெயர்களில் வட்டி மேல் வட்டி போட்டு விடுவார்கள். வங்கிகள் வழங்கும் கடன்களில் மிக அதிகபட்ச வட்டி வசூலிப்பது கிரெடிட் கார்டுகளுக்கு தான். இந்த வட்டி தவிர நுழைவுக் கட்டணம், புதுப்பித்தல், ஆண்டுக் கட்டணம், சேவைக் கட்டணம், சுழலும் கடன் வசதிக்கானக் கட்டணம் போன்ற பல்வேறு கட்டணங்கள் கிரெடிட் கார்டுகளுக்கு விதிக்கப்படுகின்றன. முழுமையான விவரங்கள் தெரியாமல், வங்கி கொடுக்கிறது என்பதற்காக கிரெடிட் கார்டு பெற்ற பலரும், அதில் உள்ள பணத்தை செலவு செய்து விட்டு மீண்டும் பணம் கட்ட முடியாமல் ஆண்டுக்கணக்கில் வெறும் வட்டி மட்டும் கட்டிக் கொண்டு இருப்பவர்கள் பலர். சரியாக வட்டி கட்டாதவர்கள் பற்றிய விவரம் கடன் தகவல் பணியக லிமிடெட் (சிபில்) நிறுவனத்தில் பதிவாகி விடும். அதன்பின் அவர்கள் எந்த வங்கியிலும் எந்த கடனும் வாங்க முடியாது. வீட்டு கடன் உள்பட எந்த கடன் கேட்டாலும், கிரெடிட் கார்டு கடனை அடைத்து விட்டு வாருங்கள் என்று சொல்லி விடுவார்கள். கிரெடிட் கார்டில் ரூ.15 ஆயிரம் செலவு செய்ததற்கு ஒரு ஆண்டு கழித்து பல்வேறு கட்டணங்கள் சேர்த்து வட்டியுடன் ரூ.40 ஆயிரம் வரை செலுத்த வேண்டி இருக்கும். ஆனால் மாதம்தோறும் முறையாக, திட்டம் போட்டு செலவு செய்பவர்களுக்கு கிரெடிட் கார்டு ஒரு வரப்பிரசாதம். அதுவே மற்றவர்களுக்கு இது ஒரு ஆபத்தான விஷயம் தான்.

No comments:

Post a Comment