டைட்டானிக் கண்காட்சி
டைட்டானிக் கப்பல் கடலில் மூழ்கி 100 வருடங்களுக்கு மேலாகின்றன. ஆனாலும்,
இன்றைக்கும் கூட டைட்டானிக் ஒரு ஹாட் சப்ஜெக்ட்தான். 1912-ம் ஆண்டு ஏப்ரல் மாதம்
14-ந்தேதி ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக் கொண்டு கிளம்பிய டைட்டானிக்
தனது முதல் பயணத்திலேயே கடலில் மூழ்கிப் போனது.
டைட்டானிக் போன்றே அதனுடன் சேர்ந்து மூழ்கிய விஷயங்கள் பல. அவற்றை
அவ்வப்போது விஞ்ஞானிகளும், சமூக ஆர்வலர்களும், வெளிக் கொண்டு வந்து கொண்டே
இருக்கின்றனர். அப்படிப்பட்ட ஒரு செய்திதான் டைட்டானிக் நகைகள் பற்றியது.
டைடானிக் நகைகள் என்பது கப்பல் மூழ்கிய போது அதில் பயணம் செய்தவர்கள்
அணிந்திருந்த நகைகளே. விபத்தில் மூழ்கிய டைட்டானிக் கப்பலில் இருந்து ஒவ்வொரு கால
கட்டத்திலும் சிறிது சிறிதாக மீட்டெடுக்கப்பட்ட நகைகள் இப்போது உலகின் பார்வைக்கு
வைக்கப்பட உள்ளன.
ஆர்லான்டாவில் தொடங்கி ப்ளா, லாஸ்வேகாஸ் ஆகிய மூன்று நகரங்களில் இந்த
கண்காட்சி நடத்தப்பட உள்ளது. இந்த கண்காட்சியை கிலிஞ்சல் ஹோபர் என்ற பெண் ஏற்பாடு
செய்துள்ளார். மிகுந்த பாதுகாப்பு ஏற்பாடும், அளவுக்கு அதிகமான பொருட் செலவும் இந்த
கண்காட்சியை நடத்துவதால் ஏற்படுகிறது என்கிறார், கிலிஞ்சல் ஹோபர்.
டைட்டானிக் கப்பல் மூழ்கிய நூற்றாண்டு ஆண்டான 2012-ல் ஒரு கண்காட்சி
நடத்தியது, உலகத்திற்கு அறிய வைப்பதாக அமைந்தது என்று கூறுகிறார். காலம் கடந்து
விட்டால் சோகம் கூட சுவராசியமான ஒன்றாகி விடும். அதற்கு டைட்டானிக் விபத்தும்
விதிவிலக்கல்ல.
No comments:
Post a Comment