Search This Blog

Tuesday, June 23, 2015


நைல் நதி 

உலகத்தில் உள்ள நதிகளில் மிகவும் நீளமானது ‘நைல்’ நதிதான். உலகின் மிகப்பெரிய பாலைவனமான சஹாரா பாலைவனத்தை இந்த நைல் நதி பாலைவனச்சோலையாக மாற்றுகிறது. இவ்வளவு வறண்ட பிரதேசத்தில் இப்படி ஒரு பெரிய நதி எப்படி இருக்கக்கூடும் என்ற மர்மம் பல காலமாக இருந்து வந்தது? இந்த நதியின் முழு நீளத்தை 1515-ல் கண்டு பிடிக்க தொடங்கி, 1900-ம் வருடம் ஒரு வழியாக முடித்தனர். இந்த நதியின் முக்கியமான கிளைகள் விக்டோரியா, ஆல்பர்ட், டானா என்ற மூன்று ஏரிகளில் இருந்து ஆரம்பமாகின்றன என்றும் கண்டுபிடித்தனர். இந்த ஏரிகள் ஆப்ரிக்காவின் முக்கியமான பகுதிகளில் இருக்கின்றன. நைல் நதியின் ஆரம்ப பகுதியை வெள்ளை நைல் என்று அழைக்கிறார்கள். பெரிய கிளைப்பகுதியை நீல நைல் என்றும் அழைக்கிறார்கள். நைல் நதியின் கரையில் உலகின் மிகப்பெரிய நாகரீகமான எகிப்து இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் நைல் நதியில் வெள்ளம் ஏற்படுகிறது. இதனால் அதிகமான சேறு பள்ளத்தாக்குகளில் சேருகிறது. இதன் மூலம் வளமாக்கப்பட்ட பகுதிகளில் எகிப்திய மக்கள் வாழ்கிறார்கள். அதனால் தான் எகிப்தை ‘நைல் நதியின் நன்கொடை’ என்று புகழ்கிறார்கள். பிரமிடுகள், அழிந்த புராதன கோவில்களை கடந்து நதி பாய்கிறது. உலகிலுள்ள பெரிய நகரங்களுள் ஒன்றான எகிப்தின் தலை நகரான ‘கெய்ரோ’ வையும் கடந்து பாய்கிறது. நைல் நதியின் முகத்துவாரத்தில் உலகத்திலுள்ள மிகப்பெரிய டெல்டாக்களுள் ஒன்று அமைந்துள்ளது. இந்த டெல்டாக்களில் பாயும் போது நதி சில ஓடைகளாக பிரிந்து விடுகிறது. அங்கே இவை சுமந்து வந்த சேறு படிந்திருக்கிறது. இந்த சேறு கடலில் 3200 கி.மீ. தூரம் வரை செல்கிறது. மூன்று கோடி மக்கள் இந்த நதியை நம்பி உயிர் வாழ்கிறார்கள். மிகப்பழங் காலத்தில், நைல் நதியில் வெள்ளம் வராமல் நின்று போனால், எகிப்தியர்கள் ஓர் அழகிய கன்னிப்பெண்ணை இதில் தள்ளி பலியிடுவது வழக்கமாகும். இன்றும் கூட நதியில் வெள்ளம் வரத் தவறினால் கன்னிப்பெண் போன்ற ஒரு பொம்மையை செய்து ஆற்றில் தள்ளி விடுகிறார்கள். நதியில் நெடுந்தூரம் வரையில் கப்பல் போக்குவரத்து நடைபெற்று வருகிறது. விக்டோரியா நீர் வீழ்ச்சிக்கு வடக்கே 288 கி.மீ வரை ஆற்றின் இரு கரையிலும் யானைகளும், சிங்கங்களும் ஏராளமாக வாழ்கின்றன. நைல் நதியின் மூன்றில் இரண்டு பகுதி ஆவியாகப்போய் விடுகிறது. ‘காலையில் நைல் வறண்டு போனால், மாலையில் எகிப்து மாண்டு போகும்‘ என்பது எகிப்திய பழமொழி. நைல் என்பதை எகிப்தியர்கள் ‘நீல்’ என்று உச்சரிக்கிறார்கள்.

No comments:

Post a Comment