வேலையே மனிதனின் மகத்துவம்.
வேலை செய்யாவிடில் , அவன் ஒன்றுமில்லை.
அவனால் ஒன்றும் அடைய முடியாது,
ஒன்றும் சாதிக்க முடியாது.
நீ ஏழையானால் - வேலை செய்.
நீ பணக்காரனானால் தொடர்ந்து - வேலை செய்.
நீ சந்தோஷமாக இருந்தால்,
வேலையே குறியாக இரு.
சும்மாயிருந்தால் சந்தேகத்திற்கும் ,
பயங்களுக்கும் வழிவகுக்கிறது.
ஏமாற்றங்கள் ஏற்படும்போது - வேலை செய்.
உனது ஆரோக்கியத்திற்கு
ஆபத்து வந்தால் - வேலை செய்.
நம்பிக்கை தளரும்போதும் - வேலை செய்.
கனவுகள் தகர்க்கப்படும் போதும் ,
நம்பிக்கை அறவே போன போதும்
வேலை செய்
உன் வாழ்வே ஆபத்தில் இருப்பதாக
நினைத்து வேலை செய்.
அது உண்மையில் அப்படித்தான்.
வேதனை எதுவரினும் வேலை செய்.
விசுவாசத்துடன் வேலை செய்.
நம்பிக்கையுடன் வேலை செய்.
சரீர மற்றும் மன நோய்களுக்கு
வேலை செய்வதுதான் மாபெரும் மருந்து.
No comments:
Post a Comment